எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
தோழர்களே, இந்தவார ஆனந்தவிகடனில் "லட்டு மாதிரி இருப்பது...", "உயிர்த் தீ" என்ற எனது இரு கவிதைகள் வெளியாகியுள்ளன.ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கும் கவிதைத் தேர்வுக் குழுவுக்கும் என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் கவிதை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
தோழர்களே, இந்தவார ஆனந்தவிகடனில் (20.1.16) "மனசுக்குள் பனித்துளி”என்ற எனதுகவிதை வெளியாகியுள்ளது.ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கும் கவிதைத் தேர்வுக் குழுவுக்கும் மிக்க நன்றி! என்னைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் கவிதை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
கணையாழி ஜனவரி 2016 இதழில் வெளிவந்தஎனது “கறுப்பு வெள்ளி” என்ற கவிதையை, எழுத்துத் தள தோழர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.கணையாழி ஆசிரியர் குழுவுக்கும்,எழுத்துத் தோழர்களுக்கும் நன்றி!
ஆனந்தவிகடனில் (30.12.15) "திருடன் விளையாட்டு" “நிலாக்கனவு” என்ற எனது இரு கவிதைகள் வெளியாகியுள்ளன, தோழர்களே!
ஆனந்தவிகடனில், எழுத்துத் தளத் தோழர் தர்மராஜ் பெரியசாமியின் (தர்மன்) உணர்வுப் பூர்வமான கவிதை இந்த வாரம் வெளிவந்துள்ளது. தோழருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
மனம் பிறழ்ந்தவன்
கவிதை: தர்மராஜ் பெரியசாமி
இந்நீள் தெருவின் கடைக்கோடியில் வசிக்கும்
என் சகோதரியின் வயதையொத்த அவள்
எங்கள் வீட்டைக் கடக்கையில்
மெல்லியதாய்ப் புன்னைகைப்பாள் என்னிடம்.
முழுச் சந்திரன் முழுமை பெறும் நாளில்
உக்கிரத்தை அடையும் அவள்
மனம் பிறழ்ந்தவளெனக் கேட்டறிந்தவன்.
ஒரு மாலையின் எதிர்பாரா மழையில்
அவள் வீட்டுத் திண்ணையில் தன்னிச்சையாய்
ஒதுங்கிய என்னை உள் அழைத்து