எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
தீண்டாமையை எதிர்த்து போராடி, சமபந்தி போஜனங்கள் ஏற்பாடு செய்து, தாழ்த்தப்பட்ட மக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்து சென்ற சமதர்ம சிந்தனையாளர், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கக்கனை தலைமையேற்க செய்த மஹான் மதுரை வைத்தியநாத ஐயர் பிறந்த தினம் நேற்று 16/5/2018
#தமிழக #MBBS #அட்மிஷன் #எப்படி #நடைபெறும்?ப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமா?நீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமா?அனைவரும் படித்து பகிர வேண்டிய பதிவு!
-----------------------------------------------------------------------
1) தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப் படும்.2) இந்தப் பட்டியலில் இருந்து +2ல் தோல்வி அடைந்தவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படும்.3) அடுத்து,
இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும், ஒவ்வொரு பாடத்திலும்
குறைந்தது 40 சதம் மதிப்பெண் பெறாத SC/ST/OBC
மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.அதுபோல 50 சதம் மதிப்பெண் பெறாத பொதுப்பிரிவு (unreserved) மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.4) இவ்வாறு தகுதி பெறாதவர்களை நீக்கிய பிறகு மீதம் உள்ளவர்களின் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கும்.
இந்தப் பட்டியல் ELIGIBILITY உள்ளவர்களின் பட்டியல் ஆகும்.5) அடுத்து, மேற்கூறிய பட்டியலில் இருந்து,
நீட் தேர்வில் தகுதி பெறாத (not qualified)
மாணவர்களின் பெயர்கள் நீக்கப் பட்டு, நீட்டில் தகுதி பெற்ற (QUALIFIED) மாணவர்களின் மதிப்பெண்கள்
பதியப்பெற்ற பட்டியல் தயாரிக்கப் படும்.6)(SC/ST/OBC பிரிவின் QUALIFYING தகுதி: 40th percentile ஆகும்.பொதுப்பிரிவின் QUALIFYING தகுதி: 50th percentile ஆகும்.)PERCENTILE வேறு, PERCENTAGE வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.7) பத்தி 5இல் கூறிய பட்டியலே மிகவும் முக்கியமான பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை (RANK) அடிப்படையில் பதியப்படும்.8) இந்தப் பட்டியல் தயாரிக்கப் படும்போது, தமிழகத்தில் உள்ள 69 சத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.9) அதாவது, தமிழகத்தில் சுமார் 3000 MBBS இடங்கள் என்று வைத்துக் கொண்டால், இந்த 3000 இடங்களில் 69 சதமுள்ள இடங்கள் SC/ST/OBCக்கும் மீதியுள்ள
31 சத இடங்கள் பொதுப்பிரிவினரைக் கொண்டும் தயாரிக்கப் படும்.10) இதுவரை கூறிய அனைத்தும் தமிழ் நாட்டுக்குரிய 85 சதம் இடங்களுக்கானது என்பதை வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும். எனவே இந்த இடங்களைப்
பெறுவதற்கு, மாணவர்கள் இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.அ) மாணவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும். (domicile status: Tamilnadu)ஆ) மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப் பள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து இருக்க வேண்டும்.11) இப்படித்தான் MBBS அட்மிஷன் நடைபெறும்.12) இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும்
மூன்றாம் பாலினத்தவரையும் குறிக்கும்.13) பொதுப்பிரிவு உடல் ஊனமுற்றோருக்கு
முன்னர்க்கூறிய 50 சத மதிப்பெண்கள் என்பது
45 சதம் ஆகும்.14) இப்படித்தான் MBBS அட்மிஷன தெளிவாகவே நடை பெறுகிறது!!!
குழப்பம் தேவையில்லை!தகுதி பெற்று வெற்றி பெரும் மாணவ மாணவியர்களுக்கு உங்கள் உழைப்பிற்கும், குடும்பத்தாரின் அளவிடமுடியாத தியாகங்களும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் &வாழ்த்துக்கள்!மரு. தி. சு. செல்லக்குமாரசாமி MBBS., MD.,
இந்திய பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் போர் புரிந்திருக்கிறது.. இந்த நாட்டின் மீது போர் தொடுக்கும் நாட்டை சேர்ந்தவர்களின் சொத்துக்களை முடக்கி பாதுக்காக்க காங்கிரஸ் அரசு 1968 ல் Enemy Property Bill என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்தது.. அந்த சட்டத்தின் படி, எதிரி நாட்டு பிரஜைகளின் இந்தியாவில் இருக்கும் சொத்தை நம் நாட்டு அரசு கையகப்படுத்தி பாதுகாக்கலாம் என்கிற சட்டம்.. இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று தெரியவில்லை..
கர்னாடகா மாநிலம் தும்கூரு மாவட்டம்,க்ருஷ்னாபுரம் பகுதியினைச் சேர்ந்தவர் நரசம்மா! இவரை கலகட்டி நரசம்மா என்று அழைப்பார்கள்
இவர் தனது பாட்டியிடம் இருந்து சுகப்பிரசவம் பார்ப்பது எப்படி ? என்பதைக் கற்று கொண்டார்;தனது 20 ஆம் வயதில் (கி.பி.1940) தனது சித்திக்கு முதன் முதலில் பிரசவம் பார்த்தார்;
இன்று இவரது வயது 97!!!
இந்த 70 ஆண்டுகளில் இவர் 1,500 பெண்களுக்கு இலவசமாக சுகப்பிரசவம் பார்த்திருக்கின்றார்;
கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவின் நாடித் துடிப்பையும்,தலைப்பகுதி வயிற்றின் எந்தப் பகுதியில் இருக்கின்றது என்பதையும் துல்லியமாக சொல்லும் இந்து வைத்திய பாரம்பரியம் இவர் மூலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது;
இவருக்கு தும்குரு பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்திருக்கின்றது;
கர்நாடக மாநில அரசு இவருக்கு "ராஜ்யோத்சவா" என்ற விருது கொடுத்து நமது இந்துப் பாரம்பரியத்தை கவுரவப்படுத்தியுள்ளது;
தற்போதைய மோடி அரசு "பத்மஸ்ரீ"விருது வழங்கி இருக்கின்றது;
கர்னாடக அரசு பள்ளிப்பாடத்திட்டத்தில் 9 ஆம் வகுப்பு பாடத்தில் இவரது வாழ்க்கை வரலாறு இருக்கின்றது;
நரசம்மாவிடம் 180 பெண்கள் இந்த இந்து தர்மக் கலையை கற்றுள்ளார்கள்;இதில் இவரது கடைசி மகள் ஜெயம்மாவும் ஒருவர்;
இலவசமாக பிரசவம் பார்ப்பது பெரும் புண்ணியத்தைத் தருகின்றது;
இந்த படத்தை பார்த்ததும் சிறு வயதில் அம்மாவின் புடவையை சுற்றிக்கொண்டு விளையாடியது நினைவிற்கு வருகிறது.
நம் மனநிலை மாறிக் கொண்டே இருக்கும்.
மகிழ்ச்சிக்கு இருக்கு வழி
மகிழ்ச்சி, என்ன விலைக்கு கிடைக்கும்; மகிழ்ச்சியை தன் பக்கம் வைத்துக் கொள்ளாதவர்கள் எழுப்பும் கேள்வி இது. இதைக் கொண்டாட, பல வழிகள் இருக்கின்றன. மனைவி, குழந்தைகள், நல்ல நண்பர்களை நேசியுங்கள். நமது இடத்திற்கு ஏற்ப, நமது அக்கறை, அன்பு வளர்த்துக் கொண்டால், மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.பிரச்னை வரக்கூடாது என்று நினைக்க கூடாது. பிரச்னை வந்தால், அதை தாங்கும் வலிமை வளரவேண்டும் என்று நினைக்க வேண்டும். சமாளிக்கும் திறனை வளர்த்தால், எவ்வித பிரச்னை வந்தாலும், தூசியாய் பறந்து போகும். நமக்கு பிடித்த விஷயங்களை செய்யம்போது, மனம் குதூகலிக்கும். அடிக்கடி கவலைப்படுவதால், நமக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த காலத்தை நினைத்து, நிகழ்காலத்தை வீணாக்கி விட வேண்டாம். மகிழ்ச்சிக்கு பெரிதும் கைகொடுப்பது, நகைச்சுவை உணர்வு. சிரிப்பு, மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் அரிய பரிசு; அதை பயன்படுத்த வேண்டும்.
கோபம் என்பது, அடுத்தவர்களின் தவறுக்காக, நமக்கு நாமே கொடுத்து கொள்ளும் சுய தண்டனை. அதை ஏன் அடிக்கடி அனுபவிக்க வேண்டும்? அவர்களை மன்னித்து பாருங்கள். மறப்போம், மன்னிப்போம் என்ற கூற்றை, எப்போதும் வைத்திருங்கள்.
ஒருவர் உங்களுக்கு உதவி செய்கிறார் என்றால், நன்றி சொல்ல மறக்காதீர்கள். உறவின் பலத்தை, இது அதிகரிக்கும். குறிப்பிட்ட செயலை, முயன்றாவது முடிக்க கற்றுக் கொண்டால், உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள தியானம் முக்கியம். தியானம் செய்தவர்களின் மூளையில், தியானம் செய்யாதவர்களின் மூளையை விட, கற்றுக்கொள்ளும் திறன், நினைவாற்றல், 20 சதவீதம் அதிகரிக்கிறதாம்.