எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தீண்டாமையை எதிர்த்து போராடி, சமபந்தி போஜனங்கள் ஏற்பாடு செய்து, தாழ்த்தப்பட்ட மக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அழைத்து சென்ற சமதர்ம சிந்தனையாளர், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கக்கனை தலைமையேற்க செய்த மஹான் மதுரை வைத்தியநாத ஐயர் பிறந்த தினம் நேற்று  16/5/2018

மேலும்

அரிய தகவல். அருமை. வாழ்த்துக்கள். 21-Jul-2019 2:34 pm
அருமையான தகவல் . செயற்கரிய செய்த பெரியவரை அவர் பிறந்த தினத்தில் பெருமையுடன் நினைத்துப் பாப்போம் . 17-May-2018 4:29 pm

#தமிழக #MBBS #அட்மிஷன் #எப்படி #நடைபெறும்?ப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமா?நீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமா?அனைவரும் படித்து பகிர வேண்டிய பதிவு! 
-----------------------------------------------------------------------
1) தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப் படும்.2) இந்தப் பட்டியலில் இருந்து +2ல் தோல்வி அடைந்தவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படும்.3) அடுத்து, 
இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும், ஒவ்வொரு பாடத்திலும் 
குறைந்தது 40 சதம் மதிப்பெண் பெறாத SC/ST/OBC 
மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.அதுபோல 50 சதம் மதிப்பெண் பெறாத பொதுப்பிரிவு (unreserved) மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.4) இவ்வாறு தகுதி பெறாதவர்களை நீக்கிய பிறகு மீதம் உள்ளவர்களின் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கும். 
இந்தப் பட்டியல் ELIGIBILITY உள்ளவர்களின் பட்டியல் ஆகும்.5) அடுத்து, மேற்கூறிய பட்டியலில் இருந்து,
நீட் தேர்வில் தகுதி பெறாத (not qualified)
மாணவர்களின் பெயர்கள் நீக்கப் பட்டு, நீட்டில் தகுதி பெற்ற (QUALIFIED) மாணவர்களின் மதிப்பெண்கள் 
பதியப்பெற்ற பட்டியல் தயாரிக்கப் படும்.6)(SC/ST/OBC பிரிவின் QUALIFYING தகுதி: 40th percentile ஆகும்.பொதுப்பிரிவின் QUALIFYING தகுதி: 50th percentile ஆகும்.)PERCENTILE வேறு, PERCENTAGE வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.7) பத்தி 5இல் கூறிய பட்டியலே மிகவும் முக்கியமான பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை (RANK) அடிப்படையில் பதியப்படும்.8) இந்தப் பட்டியல் தயாரிக்கப் படும்போது, தமிழகத்தில் உள்ள 69 சத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.9) அதாவது, தமிழகத்தில் சுமார் 3000 MBBS இடங்கள் என்று வைத்துக் கொண்டால், இந்த 3000 இடங்களில் 69 சதமுள்ள இடங்கள் SC/ST/OBCக்கும் மீதியுள்ள 
31 சத இடங்கள் பொதுப்பிரிவினரைக் கொண்டும் தயாரிக்கப் படும்.10) இதுவரை கூறிய அனைத்தும் தமிழ் நாட்டுக்குரிய 85 சதம் இடங்களுக்கானது என்பதை வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும். எனவே இந்த இடங்களைப் 
பெறுவதற்கு, மாணவர்கள் இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.அ) மாணவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும். (domicile status: Tamilnadu)ஆ) மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப் பள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து இருக்க வேண்டும்.11) இப்படித்தான் MBBS அட்மிஷன் நடைபெறும்.12) இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும் 
மூன்றாம் பாலினத்தவரையும் குறிக்கும்.13) பொதுப்பிரிவு உடல் ஊனமுற்றோருக்கு 
முன்னர்க்கூறிய 50 சத மதிப்பெண்கள் என்பது
45 சதம் ஆகும்.14) இப்படித்தான் MBBS அட்மிஷன தெளிவாகவே நடை பெறுகிறது!!!
குழப்பம் தேவையில்லை!தகுதி பெற்று வெற்றி பெரும் மாணவ மாணவியர்களுக்கு உங்கள் உழைப்பிற்கும், குடும்பத்தாரின் அளவிடமுடியாத தியாகங்களும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் &வாழ்த்துக்கள்!மரு. தி. சு. செல்லக்குமாரசாமி MBBS., MD.,

மேலும்

இந்திய பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் போர் புரிந்திருக்கிறது.. இந்த நாட்டின் மீது போர் தொடுக்கும் நாட்டை சேர்ந்தவர்களின் சொத்துக்களை முடக்கி பாதுக்காக்க காங்கிரஸ் அரசு 1968 ல் Enemy Property Bill என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்தது.. அந்த சட்டத்தின் படி, எதிரி நாட்டு பிரஜைகளின் இந்தியாவில் இருக்கும் சொத்தை நம் நாட்டு அரசு கையகப்படுத்தி பாதுகாக்கலாம் என்கிற சட்டம்.. இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று தெரியவில்லை..


அவர்கள் சொத்தை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்? பாகிஸ்தான் கூட 1971 அங்கே இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்தது.. ஆனால் இந்தியர்களின் சொத்துக்களை பாதுகாக்கவில்லை, மாறாக அதை வித்து பணம் பார்த்தது... நாம்தான் அதை இன்று வரை பாதுகாத்துக்கொண்டிருக்கிறோம்..ஆனால் நரேந்திர மோதி அவர்கள் பிரதமரான பிறகு, அப்படிப்பட்ட சொத்து இந்த நாட்டில் எவ்வளவு இருக்கிறது என்று கணக்கெடுக்க சொன்னார்.. 

அதில் அவருக்கு கிடைத்த தகவல் மிகவும் அதிர்ச்சியளிக்க கூடியது.. ஆம்.. கிட்டத்தட்ட 9000 க்கும் மேற்பட்ட சொத்துக்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல்.. ஆனால் இந்திய அரசு அதை விற்க முடியாது.. இதற்கிடையில் பாகிஸ்தானை சேர்ந்த மஹ்முதாபாத் நகரின் (Pakistan) ராஜா, 2005 ஆம் ஆண்டு வந்து, என் சொத்துக்களை திரும்பக்கொடு என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட்டப்படி, இந்திய அரசு சொத்துக்களை பாதுகாக்கத்தான் முடியுமே தவிர, உரிமை கொண்டாட முடியாது..ஆனால் மோடி விடவில்லை.. 

2017 ல் enemy property act எனும் புதிய சட்டதிருத்தத்தை கொண்டு வந்தார்.. அதாவது, இந்த நாடு வேண்டாம் என்று குடியுரிமையை துறந்து, நம் எதிரி நாடுகளுக்கு சென்றவர்களுக்கு, இந்த நாட்டின் சொத்து மீது எந்த உரிமையும் இல்லை.. அதை இந்திய அரசு தாராளமாக சொந்தமாக்கி, விற்கலாம் என்கிற சட்டம்.. இந்த நாடே வேண்டாம் என்றவருக்கு, இந்த நாட்டின் சொத்து மீது உரிமையில்லை என்ற சட்டத்திருத்தம்..அதின் அடிப்படையில்,

இப்பொழுது இந்திய அரசாங்கத்துக்கு 1 லட்சம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்க போகிறது.. அந்த சொத்துக்களின் ஏல நடவடிக்கை தற்போது ஆரம்பமாகி இருக்கிறதுஅதுமட்டுமின்றி, சீனா போன்ற நாடுகள், இந்தியாவுடன் போர் புரிய தயக்கம் காண்பிக்கும்.. ஏனெனில் , பல சீனா நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்திருக்கின்றன.. அவைகளின் சொத்து மதிப்பு பல லட்சம் கொடிகள் தேறும்.. அப்படி போர் (சிறிய போரோ பெரிய போரோ) வந்தால், அந்த நிறுவனங்களின் சொத்துக்களெல்லாம் இந்திய அரசுக்கு போய்விடும்.. அதின் தாக்கம் அவர்கள் நாட்டில் பிரதிபலிக்கும்..
  

மேலும்

கர்னாடகா மாநிலம் தும்கூரு மாவட்டம்,க்ருஷ்னாபுரம் பகுதியினைச் சேர்ந்தவர் நரசம்மா! இவரை கலகட்டி நரசம்மா என்று அழைப்பார்கள்

இவர் தனது பாட்டியிடம் இருந்து சுகப்பிரசவம் பார்ப்பது எப்படி ? என்பதைக் கற்று கொண்டார்;தனது 20 ஆம் வயதில் (கி.பி.1940) தனது சித்திக்கு முதன் முதலில் பிரசவம் பார்த்தார்;

இன்று இவரது வயது 97!!!

இந்த 70 ஆண்டுகளில் இவர் 1,500 பெண்களுக்கு இலவசமாக சுகப்பிரசவம் பார்த்திருக்கின்றார்;

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவின் நாடித் துடிப்பையும்,தலைப்பகுதி வயிற்றின் எந்தப் பகுதியில் இருக்கின்றது என்பதையும் துல்லியமாக சொல்லும் இந்து வைத்திய பாரம்பரியம் இவர் மூலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது;

இவருக்கு தும்குரு பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்திருக்கின்றது;

கர்நாடக மாநில அரசு இவருக்கு "ராஜ்யோத்சவா" என்ற விருது கொடுத்து நமது இந்துப் பாரம்பரியத்தை கவுரவப்படுத்தியுள்ளது;

தற்போதைய மோடி அரசு "பத்மஸ்ரீ"விருது வழங்கி இருக்கின்றது;

கர்னாடக அரசு பள்ளிப்பாடத்திட்டத்தில் 9 ஆம் வகுப்பு பாடத்தில் இவரது வாழ்க்கை வரலாறு இருக்கின்றது;

நரசம்மாவிடம் 180 பெண்கள் இந்த இந்து தர்மக் கலையை கற்றுள்ளார்கள்;இதில் இவரது கடைசி மகள் ஜெயம்மாவும் ஒருவர்;

இலவசமாக பிரசவம் பார்ப்பது பெரும் புண்ணியத்தைத் தருகின்றது;

மேலும்

இந்த படத்தை பார்த்ததும் சிறு வயதில் அம்மாவின் புடவையை சுற்றிக்கொண்டு விளையாடியது நினைவிற்கு வருகிறது.

மேலும்

எனக்கும் என் அம்மாவின் ஞாபகம் வந்ததே அம்மா சுப்புலக்ஷிமி புடவை முந்தானையைப் பிடித்துக் கொண்டு அன்று சுற்ற முடிந்தது இன்று தங்கள் படைப்பு படித்து தாய்ப் பாசம் உணர முடிகிறது தாய்மை படைப்புகள் தொடரட்டும் பாராட்டுக்கள் தமிழ் அன்னை ஆசிகள் 26-Mar-2018 5:22 pm

நம் மனநிலை மாறிக் கொண்டே இருக்கும். 

அதற்கேற்றவாறு நம் செயல்களும்.
கோபப்பட்டால் கோபத்துடனே இருப்பார்கள் என்றில்லை. 
அமைதியும் இருக்கும்.

மேலும்

#அண்ணே, அண்ணே நம்ம வருங்கால ஜனாதிபதி தலீத்தாம்ணே !

#அட_நாயே, அப்படின்னு அவரு சொன்னாரா நாயே !

டேய், அவா் சட்டம் படிச்சி உச்சநீதிமன்றம்,உயா்நீதிமன்றம் என பல ஆண்டுகாலம் வக்கில் பணிபுரிந்து...

மெராஜ்தேசாய் பிரதமார இருந்தப்ப அவருக்கு தனி செயலாளரா இருந்து...

12 வருடம் ராஜ்யசபா எம்பியா நாட்டுக்கு சேவை செய்து....

இப்ப, பீகாா்ல கவா்னரா இருக்காரு...

இவ்வளவு தகுதியான ஒரு ஆள நாட்டின் உயா்ந்த பதவிக்கு எந்த பாகுபாடும் பாா்க்கமா அமர வச்சா...

நீங்க, எந்தவித தகுதியும் இல்லாம ஒரு சான்றிதழை மட்டும் வச்சிட்டு...

கல்விஉதவிதொகை,வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு,தோ்தல் இட ஒதுக்கீடுன்னு வாங்குற பயலுக....

அவரோட தகுதிய விட்டுட்டு, தலீத்ன்னு ஒரு தகுதிய மட்டும் தூக்கிட்டு வரீங்களேடா..

ஏண்டா, திருந்தவே மாட்டீங்களடா ?

அவா் தலீத் இல்லடா, தகுதியானவா்டா...

நன்றி.
படித்தது.

மேலும்

ஆன்லைன் ரம்மி… இளைஞர்களை குறிவைக்கும் ஹைடெக் ஆபத்து!

இன்றைக்கு பல்வேறு இணையதளங்களில் ஒரு விளம்பரம் நம்மை சுண்டி இழுக்கிறது. “நான் 10,000 ரூபாய் வென்றேன்” என்று  பல வகையான ஆட்கள் அந்த விளம்பரத்தில் தோன்றி நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்கள். இணையதளங்களில் மட்டுமல்ல, தொலைக்காட்சியிலும் அந்த விளம்பரம் இப்போது அடிக்கடி தென்பட ஆரம்பித்துவிட்டன. அந்த விளம்பரம், ஆன்லைன் ரம்மி.

நம்மூரை பொறுத்தவரை, சீட்டு விளையாட்டு என்பது சமூகத்தினால் புறக்கணிக்கப் பட்டது.  இன்று நாடு முழுவதும் உள்ள ரம்மி விளையாடப்படும் கிளப்புகளில் கூட, வயது வந்தவர்கள் பொழுதுபோக்கத்தான் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை யார் வேண்டுமானாலும் வயது வித்தியாசமின்றி  விளையாட முடியும் என்பதில் இருந்தே, இதனால் ஏற்படப்போகும் ஆபத்து பெரிய அளவில் இருக்கும் என்பது தெரிகிறது.  ஆன்லைனில் நீங்கள் கேண்டி க்ரஷ் விளையாடுகிற மாதிரியோ, ஆங்கிரிபேர்ட்ஸ் விளையாடுகிற மாதிரியோ அல்ல  ஆன்லைன் ரம்மி   விளையாட்டு. 

என்னதான் ஒரு இணையதளம் ‘https’ என அங்கீகாரம் பெற்ற பாதுகாப்பான இணையதளம் என்று சொல்லக்கூடியதாக இருந்தாலும், ஆன்லைனில் நீங்கள் யாருடன் விளையாடு கிறீர்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.  மேற்கு நாடுகளில் இருப்பதுபோல, இந்தியாவில் வலுவான டிஜிட்டல் கண்காணிப்போ அல்லது தவறு ஏற்பட்டால் பணம் திரும்பக் கிடைக்கும் என்றோ உறுதியாகச் சொல்ல முடியாது.  நிஜமான ரம்மி விளையாடு கிறோம் எனில், நம் எதிரில் இருக்கும் நபர் சீட்டுகளை கலைத்துப் போடுவார். இருவரோ, மூவரோ ஆடுவோம். ஒருவேளை பணம் வைத்து ஆடினால்கூட அதை கையாள்வது நாமாகத்தான் இருப்போம். ஆனால், ஆன்லைன் ரம்மியில் நாம் முதலில் குறிப்பிட்ட தொகையை நம் வங்கிக் கணக்கில் இருந்து ஏற்றவேண்டும். அதன் பின்னர் 5 ரூபாய் வைத்து (ஆம், குறைந்த ஆட்டம் ஐந்து ரூபாயிலிருந்து துவங்குகிறது) ஆடும் ஆட்டத்தில் பங்கெடுத்தால், குறிப்பிட்ட தொகையை சேவைக் கட்டணமாக எடுத்துக்கொள்கிறது ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனம்.

ஆன்லைன் ரம்மியில் எதிரில் இருப்பவர் வென்றதாக அறிவிக்கும்போது உண்மையாகவே அது மனிதன்தானா அல்லது ரோபாட்டா என்கிற சந்தேகம் வந்துவிடுகிறது.இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடினால், பிற்பாடு இதிலிருந்து வெளியேறுவது கடினம். ஒருமுறை விளையாடி விட்டு இணையத்தில் நீங்கள் எங்கு சென்றாலும், அந்த தளத்தின் பேனர் விளம்பரங்கள் உங்களைத் தொடர்ந்து வந்து சீட்டு விளையாடும் ஆசையைத் தூண்டும். நிச்சயமற்ற ஆட்டம், எதிராளி யார், அவர் திறமை இதில் என்ன என்பதே தெரியாத நிலையில், பணம் மட்டுமல்ல, நேரமும் பெரிய அளவில் வீணாகும். 


இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் லாட்டரி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆன்லைன் ரம்மிக்கு எப்படி அனுமதி கிடைத்தது? கடந்த ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் லோகர் மற்றும் எஸ்.ஏ.போபர் இருவரும் கொடுத்த தீர்ப்பு இதற்கு காரணம். “ரம்மி விளையாட்டு என்பது திறன் சார்ந்த விளையாட்டுதான் என்பதில் மாற்றமில்லை. 

திறன் சார்ந்த விளையாட்டுக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பினை எதிர்பார்க்கும் சூதாட்டத்துக்கும் சம்பந்தமில்லை. அதே நேரம், இதை நடத்தும் நிறுவனங்கள் புதிய நிறுவனங்களாக இருக்கின்றன என்கிற கேள்விக்கு இந்த மனுவில் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை” என கடந்த ஆண்டு 2015 ஆகஸ்ட் 13 தேதியில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.இதனை அடுத்துதான் ஆன்லைன் ரம்மி விளையாட்டுத் தளங்கள் விஸ்வரூபம் தொடங்கின.

“முதல்ல நான் பணம் கட்டாமதான் ஆடத் துவங்கினேன். நிறைய ஜெயிச்சேன். என் கணக்குல டம்மி பணமா லட்சக் கணக்குல சேர்ந்துச்சு. அப்பதான் 100 ரூபாய் கட்டி நிஜமா ஆடலாம்னு தோணுச்சு. ஆடினேன், ஜெயிச்சேன். ஒரு மாசம் வெறித்தனமா ஆடினேன். மாசக் கடைசில பார்த்தா, 2,000 ரூபாய் தோத்திருந்தேன். அதைவிட முக்கியம், ஒரு மாசத்துல 12 நாள் லீவ் போட்டி இருந்தேன்” என்கிறார் சென்னையை சேர்ந்த ரவி.

இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதா என வழக்கறிஞர் என்.ரமேஷிடம் கேட்டோம்.‘‘2015-ல் ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம், திறன் விளையாட்டுகள் விளையாடுவது சூதாட்டம் ஆகாது என்றும்,  ரம்மி ஆட்டம் திறன் விளையாட்டு என்றும் சொன்னது. ஆனால், மற்ற சீட்டு விளையாட்டுகளைத் திறன் விளையாட்டு என்று சொல்லவில்லை.  

ஆன்லைன் ரம்மி விளை யாட்டுக்கு இந்தத் தீர்ப்புப் பொருந்தாது.ஆனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டை உச்சநீதிமன்றம் அனுமதித்துவிட்டது போல, ஒரு மாயதோற்றம் உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் புற்றீசல் போல, பல ஆன்லைன் ரம்மி தளங்கள் இன்று கொள்ளையடிக்கின்றன.  ஆன்லைன் ரம்மி விளையாட்டை திறன் விளையாட்டு எனச் சொல்ல முடியாது.

விளையாட்டு (Gaming) என்பது மாநிலஅரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பொருளாகும். அதனால்தான் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியே இதற்கென சட்டம் இயற்றி வைத்துள் ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, தமிழ்நாடு விளையாட்டுச் சட்டம் (Tamil Nadu Gaming Act)மற்றும் சென்னை நகர காவல்துறை சட்டம் (Chennai City police Act) என்ற சட்டங்களின் கீழ் சீட்டு விளையாட்டுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப சட்டத்தை உருவாக்க வேண்டியது அரசின் கடமையாகும். 

உரிய சட்டமும் முறைப்படுத்தலும் இல்லாத காரணத்தால், ஆன்லைன் ரம்மி விளையாட்டை சிறுவர்கள் விளையாடுவதை எப்படித் தடுப்பது, ஏமாற்றப்படாமல் எப்படிக் கண்காணிப்பது, எங்கே முறையிடுவது என்பதில் தெளிவு இல்லை.சில மாநிலங்களில் ஆன்லைனில் பணம் வைத்து விளையாடுவது முறைப்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக கோவா, சிக்கிம் மாநிலங்களில் இந்த வகை சூதாட்டத்தை முறைப்படுத்தி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சட்டம் இயற்றி, அரசின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்போது, ஏமாற்றப்படுவதும், சட்ட மீறல்களும் தடுக்கப்படலாம்’’ என்றார்.அரசு அனுமதியுடன் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு நடைபெற்றாலும், பணம் வைத்து விளையாடும் விளையாட்டை இது ஊக்கப்படுத்து கிறது. ஒருவர் ரூ.10,000 வென்றதாகச் சொன்னால்,  யாரோ ஒருவர் ரூ.10,000 தோற்று இருப்பார். 

ஜெயித்தவர் எதன் அடிப்படையில் ஜெயித்தவர், தோற்றவர் எதைக் கவனிக்கத் தவறியதால் தோற்றார் என்பதையெல்லாம் புரிந்துகொள்ள முடியவில்லை எனில், இதைத் திறன் சார்ந்த  விளையாட்டு என்று எப்படிச் சொல்ல முடியும்..?   இது திறன் சார்ந்த ஆட்டம் என்றால் கிரிக்கெட்டும் இரண்டு அணிகளின் திறன் சார்ந்த ஆட்டம்தானே! அதை அடிப்படையாக வைத்து செய்யப்படும் பெட்டிங்கையும் விளையாட அனுமதிக்கலாமே என்பது போன்ற கேள்விகள் எழத்தான் செய்கிறது!ஆன்லைன் ரம்மி என்ற ஆபத்து எல்லை மீறுவதற்குள் தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை!

மேலும்

மகிழ்ச்சிக்கு இருக்கு வழி

மகிழ்ச்சி, என்ன விலைக்கு கிடைக்கும்; மகிழ்ச்சியை தன் பக்கம் வைத்துக் கொள்ளாதவர்கள் எழுப்பும் கேள்வி இது. இதைக் கொண்டாட, பல வழிகள் இருக்கின்றன. மனைவி, குழந்தைகள், நல்ல நண்பர்களை நேசியுங்கள். நமது இடத்திற்கு ஏற்ப, நமது அக்கறை, அன்பு வளர்த்துக் கொண்டால், மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.பிரச்னை வரக்கூடாது என்று நினைக்க கூடாது. பிரச்னை வந்தால், அதை தாங்கும் வலிமை வளரவேண்டும் என்று நினைக்க வேண்டும். சமாளிக்கும் திறனை வளர்த்தால், எவ்வித பிரச்னை வந்தாலும், தூசியாய் பறந்து போகும். நமக்கு பிடித்த விஷயங்களை செய்யம்போது, மனம் குதூகலிக்கும். அடிக்கடி கவலைப்படுவதால், நமக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த காலத்தை நினைத்து, நிகழ்காலத்தை வீணாக்கி விட வேண்டாம். மகிழ்ச்சிக்கு பெரிதும் கைகொடுப்பது, நகைச்சுவை உணர்வு. சிரிப்பு, மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் அரிய பரிசு; அதை பயன்படுத்த வேண்டும்.

கோபம் என்பது, அடுத்தவர்களின் தவறுக்காக, நமக்கு நாமே கொடுத்து கொள்ளும் சுய தண்டனை. அதை ஏன் அடிக்கடி அனுபவிக்க வேண்டும்? அவர்களை மன்னித்து பாருங்கள். மறப்போம், மன்னிப்போம் என்ற கூற்றை, எப்போதும் வைத்திருங்கள்.

ஒருவர் உங்களுக்கு உதவி செய்கிறார் என்றால், நன்றி சொல்ல மறக்காதீர்கள். உறவின் பலத்தை, இது அதிகரிக்கும். குறிப்பிட்ட செயலை, முயன்றாவது முடிக்க கற்றுக் கொண்டால், உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ள தியானம் முக்கியம். தியானம் செய்தவர்களின் மூளையில், தியானம் செய்யாதவர்களின் மூளையை விட, கற்றுக்கொள்ளும் திறன், நினைவாற்றல், 20 சதவீதம் அதிகரிக்கிறதாம்.

மேலும்

மேலும்...

மேலே