எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
தளத்தில் கவிதைகளை விட.. ஓவியங்கள் பின்னி எடுக்கின்றன.. நல்ல ஒரு சிந்தனை...தோழர்களிடம் இன்னும் என்ன என்ன திறமைகள் எல்லாம் இருக்கிறதோ.. வியப்பாக இருக்கிறது..! வாழ்த்துக்கள் எழுத்து சிற்பிகளே..!
தினம் தினம் கொட்டும் கவிதைகள்.. விருப்பமானவற்றை தேட முடியவில்லை.. தளம் அலுப்பூட்டுகிறது..!
அண்ணன் ராம் வசந்த் அவர்களின் கவிதை "பரிவார தேவதைகள்" இந்த வார ஆனந்த விகடனில்.. படித்து மகிழுங்கள்.. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா .. இப்போது தான் பார்த்தேன்.. வேறு யாரும் பகிர்ந்து இருக்கிறார்களா தெரியவில்லை ...பெருமையாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது.. வாழ்த்துக்கள் அண்ணா... இன்னும் இன்னும் மேலே செல்ல தம்பியின் பேரார்வம்.
தலைக்கு ஆயிரம் ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்கி போடுறதுக்கு கூப்பாடு போடுறவனுக தான் அராபிய நாடுகள் போல தவறுக்கு தலை எடுக்கும் சட்டம் இந்தியாவுல வேணும்னும் கூப்பாடு போடுறானுக..!
பைத்தியம் எனப் படுபவர்கள் எல்லாவிடத்தும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள்.. நாம் தான் வேறு வேறு பைத்தியங்களாக இருக்கிறோம்...!
சென்னை திணறுகிறது....!!!!!!!!!!!!!!!!
இன்றைய ஆனந்த விகடனில் அண்ணன் ராம்வசந்த் அவர்களில் கவிதை சொல்வனம் பகுதியில்..! இன்னும் பல சிகரங்கள் தொட அன்புத் தம்பியின் விருப்பங்கள்.. வாழ்த்துக்கள் அண்ணா
எல்லோருக்கும் எல்லோர் மீதும் கொஞ்சம் கசப்பு இருக்கத்தான் செய்கிறது.. இனிப்பும் கூட...!
உப்பைத்தவிர..!
சித்தார்த்தன்
புத்தன் இல்லை ...!
.
.
.
புத்தன்
நல்ல சித்தார்த்தன் இல்லை..!