எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அழகாய் இருக்கிற யாவும்
உன்னையே நினைவுபடுத்துகின்றன
உன்னை நினைவு படுத்தும்
யாவுமே அழகாய்த்தான் இருக்கின்றன
-இது தபூ சங்கர்
அவர் காதலிக்காக சொல்லிருப்பார்...
புதுசா எதாச்சும் சொல்லு.......!!
அப்போ அதை நான்
வழிமொழிகிறேன்னு மட்டும்
சொல்லிக்கறேன்........ப்ளீஸ்!!??????
பொழச்சு போய்க்கோ...!!
விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தாய்
பெண் மீன் விழியில்
எனையே *********.................!!
நான் நீயாகித்
தோற்கிறேன்
நீ நானாகி
வெல்கிறாய்
பரிசு
இருவருக்குமா,,,?
கிழக்கு வெளுக்காத
நாளெனினும்
வழக்குத் தொடுக்காத
நாளில்லை
இப்பாரினிலே
காதலோ
காமமோ
உறவோ
துரோகமோ
பாவிகளின் கால்தடங்கள்
கொண்டே அஸ்தமிக்கிறது........!!
புதைந்தே கிடக்கிறது
மன்னவன் தாலி
அழுதே விடிகிறது
தேவியவள் வீதி
ஒரு சகாப்தம் முடிந்தது........!!
விரிந்த விழிகளுக்குள்
சுருங்கிக்கொண்டது
வானம்
விளக்கிச் சொல்ல
ஏதுமில்லை
என்னைத் தேடாதீர்...........!!
நாட்குறிப்பின் பக்கங்களில்
பேனா உருகும்போது
மனம் லேசாகிறது
அதே நாட்குறிப்பின்
பக்கங்களைப் புரட்டும்போது
மனம் கனத்து
கண்கள் குளமாகிறது
எனைத் தேடாதீர்
என எழுதிவைத்து விட்டு
வானம் தேடி
மலை உச்சிக்கோ
பூமி தேடி
பாதாளத்திற்கோ
பயணப்படப் போகிறேன்
உங்களுக்கும்
நல் கவி தருகிறேன்
எனைத் தேடாதீர்.........!!!
ஏதேதோ எண்ணம்
நான் விட்டுச் சென்ற
இடத்தில் இன்னும் நிற்கிறாய்
நான் தான்
தொலைந்துவிட்டேன்
மன்னித்து விடு....!!
கொஞ்சம் மூச்சு
விட்டுக்கொள்கிறேன்
உரக்க உன்னோடு பேசாமல்
மௌனமாகக் கண்ணோடுப் பேசியதில்
பிராண வாயு பற்றாக்குறை
கொஞ்சம் மூச்சு
விட்டுக் கொள்கிறேன்
வரிக்கு வரியோ
வார்த்தைக்கு வார்த்தையோ
இடைவெளி விட விருப்பமில்லை
நீண்ட இடைவெளிக்குப்பின்
எழுதும் இக்கடிதத்தில்
நிலா
வீதி உலா வரும்
பெரு வெளியெல்லாம்
கண்ணாடி சில்லுகள்
வழியெல்லாம் இரத்தப்
படிமங்கள்
பாதங்கள்
கடந்த பாதையதன்
பயணக்களைப்பின்
புன்முறுவல்கள்
துளித்துளியாய்க் கரையக்
(...)
பூத்துக் கொண்டே இருக்கிறது................!!!
விட்டுப்போன இடத்தில் பட்டுப்போன மரமாய் காத்திருக்கும் இதயங்களை ஈரப்படுத்திப் பூக்கச் செய்தது சிறு சாரல் மழை. ஒரு சாமக் கோடாங்கியின் குரல் கேட்டுக் கொண்டு விழித்திருந்தது அன்றைய இரவில் செவிகள் மட்டும். யாரையோ புறக்கணித்து விட்டு விசும்பிக் கொண்டிருந்தது காற்று. சொல்ல வார்த்தைகளற்றுப் போகும் போது மௌனம் புதைத்து அழும் விழி... வலிகள் நிரப்பிய மரபுக் கோப்பைக்குள் உற்சாக பானம்.. அருந்திக் கொண்டிஉந்தது கடவுள். விண்மீன் மழையாய் பொழிய வானம் குடைதேடிக்கொண்டு பூமி வந்ததாய் கதை எழுதுகிறேன்.... நிலவு கோபித்துக் கொள்வதாய் முடிக்கிறேன்.
பாலியல் வன் முறையன்று வரைமுறை வைத்திருக்கிறதாம் உலகம்.......... இதையெல்லாம் எழுத எனக்கு இன்னும் அனுபவம் போதவில்லை. என்ன செய்ய...? கணவனின் அத்துமீறல்கள் மனைவியின் விருப்பு வெறுப்புகளை சார்ந்தது என்பதை இவ்வுலகம் அறியும் வரை பாலியல் வன்முறைக்கு அர்த்தம் தெரியாதவர்களாகவே கருதப்படுவர்.............!!
வரைமுறைகள் தாண்டி
கைகள் நீண்டபோது
தத்துவங்கள் தடுமாறி
நின்றன.........
கவிதைகள் மண்டியிட்டன
அங்கும் ஒரு கவிஞன்
ஆத்திகம்
பேசிக்கொண்டிருந்தான்
நீயோ எனக்கு
நடைவண்டி
பழக்கிக்கொண்டிருந்தாய்
நீ என்பது
காதல் என்றிருந்திருந்தால்
காதலுக்கு முன்
காதலுக்கு பின்
என என்
சுயஅலசல் இருந்திருக்கும்
நீயே
என் வாழ்வான பின்
வாழ்க்கைக்கு முன்
வாழ்ந்ததற்கு பின் என
பிரித்துக் கொள்கிறேன்............!!
இது நீண்ட நாட்களுக்குப் பின் நானெழுதும் உனக்கான பிரத்யேகக் கவி........!!