படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

http://www.eraeravi.blogspot.in/ .


Close (X)

வழி : eraeravi கருத்துகள் : 0 பார்வை : 725
1

பரவலாகவே இந்தியர்கள் வெள்ளைத்தோலுக்கு மயங்கும் குணம் கொண்டவர்கள் என்ற எண்ணம் உள்ளது. உதாரணத்திற்கு மேட்ரிமோனியல் இணைய தளங்களை எடுத்துக் கொள்ளுங்கள். வெண்மையான (ஃபேர் லுக்) மற்றும் நல்ல தோற்றம் கொண்ட மணமகன் அல்லது மணமகள் தேவை என்ற வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். அழகான மணமகளாக தோற்றமளிப்பதற்கும், எடுப்பான மணமகனாக தோற்றமளிப்பதற்கும் வெள்ளைத் தோல் மிகவும் முக்கியம் என்பது தான், இதில் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக உள்ளது. பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக் காலத்தில் தான் வெள்ளைத் தோல் மோகம் உருவாகத் துவங்கியது. வெள்ளைத் தோலுடைய பிரிட்டிஷ்காரர்கள் நம்மீது ஆளுமை செலுத்தி வந்ததால், நமக்கும் வெள்ளைத் தோல் மீதான மோகம் வரத் துவங்கியது எனலாம். இவ்வாறு வெள்ளைத் தோலின் மீது இந்தியர்கள் மோகம் கொண்டிருப்பது ஏன் என்பதற்கு சில காரணங்களை பட்டியலிட முடியும். இந்த காரணங்களை ஒன்றாக்கி, உங்களுக்கு தமிழ் போல்ட் ஸ்கை வழங்குகிறது.


வழி : vinayaka கருத்துகள் : 0 பார்வை : 178
0

போட்டியுலகில் உனக்கென்று ஒரு அடையாளம் அங்கீகாரம் கிடைக்காவிட்டால் உன் நிலைமை என்னாகும்...... விளம்பர வெளிச்சம் உன்மேல் படுவதற்காய் எத்தனை உயிர்களை இருட்டில் தள்ளியிருப்பாய்....... கவிதைக்கு விளம்பரம் குறைகாணா விமர்சனம்.. நகைக்கு விளம்பரம் தேவதையின் மேனி.... வியாபாரம் செழிக்க அத்தனையும் கவர்ச்சியாய்.. யாவரையும் சென்றடைய வேண்டுமே விளம்பரம்.... உண்ணும் உணவு முதல் உயிர்கொல்லும் கிருமிநாசினி வரை அத்தியாவசிய யுக்தியாய்.... செல்வத்தில் மிதப்பவனுக்கு செல்வாக்கு கைகொடுக்கும் ஆனால் ஏழையின் நிலையை உலகறிய வழியென்ன......... பணமும் புகழும் தேடி முன்னது துரிதமாய்... பலரை அடையவேண்டுமெனும் ஆதங்கத்துடன் பின்னது ...!!! ===================== தோழி துர்க்கா


வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வை : 152
4

உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார் இசைஞானி இளையராஜா. உலகளவில் புகழ் பெற்ற சினிமா இணையத்தளமான 'டேஸ்ட் ஆஃப் சினிமா' என்ற இணையதளம் உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்பதாவது இடத்தைப் பெற்று தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பெருமை வாங்கி தந்துள்ளார் இளையராஜா. இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே. சிறந்த இசைக்கோர்ப்பு, இன்ஸ்ட்ருமென்டலிஸ்ட், இசை ஒருங்கிணைப்பு, பாடகர், பாடல் ஆசிரியர் ஆகிய பிரிவில் இளையராஜா சிறப்பான பணியை வழங்கியிருப்பதாக ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’ இணைய தளம் பாராட்டியுள்ளது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் 4500-க்கும் மேற்பட்ட பாடல்கள் கொடுத்து, 950-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து, ஏராளமான சர்வதேச மேடை நிகழ்ச்சிகள் நடத்தியவர் இளையராஜா.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 123
1

தீப்பிடிக்கும் இரவுகள்! பனி இரவுகள் பிரம்மச்சரியத்தில் அத்தனைக் குளிரே - இந்த இரவுகள் இப்படி தீப்பிடிப்பது எப்படி ? பனி பெய்யும் இரவுகளில் ஆர்வமாய்ப் - பணி செய்யும் பறவைகளாய் நாம் மாற- இரவுக்கும் தூக்கத்திற்கும் என்னடா சம்பந்தம் என நம் தூக்கம் நமை கேட்க- நாணம் சென்றது வானம் தூரம் ! காரிருள் கண்மூடி கருப்புச் சுவராய் மாற தூரிகையாகும் காயங்கள் வரைவது எத்தனை மாயங்கள் ? இரவை உறங்க வைக்கத் தடுமாறும் காலிடையே தாலாட்டும் கொலுசொலி... நரம்புகள் புடைக்கவும் வரம்புகள் உடைக்கவும் கற்றுக்கொண்டது எப்படி ? ஏகாந்த இரவுகளில் ஒவ்வா முனைக் காந்தங்கள், ஓட்டுவதும் பிரிவதும் கச்சிதமாய் நடக்குமென கண்டுப் பிடித்தபோது - கலைஞானி கூட விஞ்ஞானி ஆகிவிட்டான் ! இதயத்துள் ஒவ்வொரு நொடியும் - பகலெல்லாம் எப்போது மடியும் ? இரவுகள் எப்போது விடியும் - என்ற வினாக்கள் எழுவது சகஜம் காரணம் யாதெனில் – இது கனாக்கள் நனவாகும் தருணம் !


வழி : KS.Kalai கருத்துகள் : 0 பார்வை : 142
0

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



புதிதாக இணைந்தவர்

மேலே