படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

சும்மா இருக்கிறது என்கிறது சுலபமில்லை. பிறந்த குழந்தை கூட கை காலை உதைக்கிறதே? அதுக்கு என்ன தெரியும்? நாம் எல்லாருமே அறியாமலே பல விஷயங்களை செய்து கொண்டு இருக்கிறோம். இதயம் துடிக்கிறதுலேந்து, மூச்சு விடுகிறது போல பலது. ஒரு கதை. ஒரு கோவில். புதுசா ஒரு மணியக்காரர் வந்தார். எல்லா விஷயங்களையும் ஒரு அலசல் செய்யணும்ன்னு பார்த்தார். கோவில்ல நடக்கிர ஒவ்வொரு காரியத்தையும் கவனித்தார். சுவாமிக்கு நைவேத்தியம் செஞ்ச பிறகு பிரசாத உருண்டை வினியோகத்தை பாத்தார். ஏதோ ஒரு நியமத்தில அதை எல்லாம் வினியோகிச்சாங்க. சும்மா கோவில் தூண்ல சாஞ்சு கொண்டு இருந்த ஒத்தனுக்கும் கொடுத்ததை பாத்தார். அப்புறமா அர்ச்சகரை கூப்பிட்டு "யார் அது? ஏன் கொடுத்தீங்க?" ன்னு கேட்டர். "அவர் ஒரு சாது. ரொம்ப நாளா கொடுத்து வரோம்'" ன்னு சொன்னாங்க. எதுக்கு தண்டமா இப்படி கொடுக்கிறீங்க, நிறுத்துங்கன்னு உத்திரவு போட்டார். அடுத்த நாள் சாதுவுக்கு உருண்டை கிடைக்கலே. என்ன விஷயம்ன்னு விசாரிச்சார். மணியக்காரர் "ஏன் சும்மா உக்காந்து இருக்கிறவனுக்கு பிரசாதம்? கொடுக்காதேன்னு உத்திரவு போட்டுட்டார்" ன்னு பதில் கிடைச்சது. "அப்படியா? அந்த மணியக்காரரை கூப்பிடு" ன்னார். மணியக்காரரும் வந்தார். "ஏம்பா, நீதான் சும்மா இருக்கிறவனுக்கு பிரசாதம் கொடுக்காதேன்னு சொன்னாயா?” ன்னு கேட்டர்.” ஆமாம், அதுக்கு என்ன இப்போ?” "சரி, இங்க வா. இந்த தூண் பக்கத்திலே கொஞ்ச நேரம் அசையாம சும்மா உக்காரு" ன்னார். மணியக்காரரும் உக்காந்தார். நாலு ஐஞ்சு நிமிஷம் ஆச்சு. அவருக்கு இருப்பு கொள்ளலே. அசைய ஆரம்பிச்சார். "அட அசையறியே? நான் சும்மாதானே உக்கார சொன்னேன்?” திருப்பி முயற்சி பண்ண மணியக்காரருக்கு இது கஷ்டம்ன்னு புரிஞ்சு போச்சு. அர்ச்சகரை பாத்து "இனிமே இவருக்கு 2 உருண்டை கொடுங்க" ன்னு உத்திரவு போட்டார். அது மாதிரி யாராலேயும் ஒரு வேலையும் செய்யாம இருக்க முடியாது.இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.


Close (X)

வழி : இன்னமுதம் கருத்துகள் : 0 பார்வை : 283
3

வணக்கம். இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக முக நூல் வழி ஒரு தொடர்... ஆகஸ்ட்1ம் தேதி முதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் எனது முக நூலில் 30 நொடி நேரம் படிக்கிற அளவில் "அதோ.. முகம் " நாவல் தொடராக வெளிவர இருக்கிறது . இதுவே முக நூலில் வெளிவரும் தொடர் நாவல் என்ற சிறப்பிற்குரியதாகும். உங்கள் பகிர்வுகள் இப் புதினத்தைப் பலர் சந்திக்க துணை புரியட்டும். உங்கள் கருத்துக்கள் எம் படைப்பிற்கு உரமாகட்டும். இத் தொடர் வெளியாகும் முக நூலில் இணைய, என்னை நண்பனாக்க.. https://www.facebook.com/cpsivarasan "செல்லும் வழியில் வலிகள் இருந்தாலும் வெல்லும் வழியில் விதிகள் செய்வோம்" அன்புடன் செ.பா.சிவராசன் www.vahai.myewebsite.com


வழி : செ.பா.சிவராசன் கருத்துகள் : 0 பார்வை : 211
3

ராமநாதபுரம் அருகே உள்ள சின்ன அக்கிரமேசி கிராமத்தில் உள்ள விவசாயிகள், விவசாயத்தில் சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகின்றனர். வறட்சி மாவட்டம் என பெயரெடுத்த ராமநாதபுர மாவட்ட விவசாயிகள் ஏற்படுத்தும் விளைச்சல்கள் பெரும் வியப்பை உண்டாக்கியுள்ளது. செடி அவரை:- பொதுவாக காய்கறி வகைகளில் ஒன்றான கொடி அவரைக்காய் பற்றித்தான் பெரும்பாலும் பலரும் அறிந்திருப்போம். கொடி அவரை பயிரிட்டால் தனியாக அதற்கென்று பந்தல் போட வேண்டும், செலவு அதிகமாகும், ஊடு பயிர் எதுவும் விளைவிக்க முடியாது. இதற்கு மாற்றாக விவசாயிகளின் செலவை குறைக்கவும், காய்கறி வகைகளில் அவரை விளைச்சலை அதிகரிக்கவும் இந்த முறை பயன்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சின்ன அக்கிரமேசி கிராமத்தில் சுப்பிரமணி என்ற விவசாயியும் தங்களது விளைநிலங்களில் அரை ஏக்கர் மட்டும் பரிட்சாத்த முறையில் செடி அவரை பயிரிட்டுள்ளனர். செடி அவரை பயிரிட்டால் காய்ப்புத்திறன் அதிகமாக இருக்கும். அதிக உரம் போடத் தேவையில்லை. பூச்சியும் அதிகம் தாக்காது, நிலக்கடலை, தக்கைப்பூண்டு போன்று வேர்களின் மூலமாக தேவையான உரத்தை தானாகவே காற்று மற்றும் சூரிய ஒளி மூலம் எடுத்துக் கொள்ளும் குணமுடையது. பயிரிட்ட அறுபதாவது நாளிலேயே அவரைக்காய்கறிகளை பறிக்கத் தொடங்கி விடலாம். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கல்வித்துறை உதவி இயக்குநர் இளங்கோவன் கூறியது: செடி அவரை பயிரிட்டால் கொடி அவரையைப் போன்று பந்தல் அமைக்கத் தேவையில்லை. கிரை வகைகளையும், கொடி வகைக் காய்கறிகளான பீர்க்கங்காய்,புடலங்காய், சுரைக்காய்,பாகற்காய் போன்றவற்றையும் கூட ஊடு பயிராக சேர்த்துப் பயிரிடலாம். ஆனால் கொடி அவரையில் ஊடுபயிர் எதுவும் விளைவிக்க வாய்ப்பில்லை. மாப்பிள்ளை சம்பா:- வறட்சியை தாங்கி விளையக்கூடிய “மாப்பிள்ளை சம்பா’ என்னும் நெல் ரகம், ஏழு அடி உயரத்தில் வளரக்கூடியது. அதிகளவு மாவு சத்து காணப்படுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ரக அரிசி மிகவும் பிடிக்கும். இந்த அரிசியில் சமைக்கப்படும் சாப்பாடு எளிதில் கெட்டுப்போகாது. ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டைகள் வரை சாகுபடி கிடைக்கும். சிறப்பு வாய்ந்த இந்த நெல் ரகத்தை, ராமாநாதபுரம் அருகே சின்ன அக்கிரமேசி விவசாயி கிருஷ்ணன், சாகுபடி செய்து சாதித்து வருகிறார். அவர் கூறியதாவது: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிய அறிவுரைபடி, நான்கு மாதங்களுக்கு முன்னர், ஒரு ஏக்கரில் “மாப்பிள்ளை சம்பா’ சாகுபடி செய்தேன். அவ்வப்போது, விட்டு விட்டு பெய்யும் மழையில், தற்போது ஆறரை அடி உயரம் வரை பயிர் வளர்ந்து, நெல் மணிகள் கொத்து… கொத்தாக தொங்குகின்றன. பூச்சி தாக்குதல் இல்லை. உரச் செலவும் கிடையாது. மற்ற பயிர்கள் எல்லாம், மழை இன்றி வாடும் நிலையில், இந்த ரகம் மட்டும் பச்சை பசேல் என, வளர்ந்துள்ளது. மகசூல் பருவத்தை எட்டியுள்ளதால், தைப்பொங்கலையொட்டி அறுவடை செய்யவுள்ளேன். பழமையான இந்த நெல் ரகத்திற்கு, தற்போதும் மவுசு இருப்பதால், இந்த ரகத்தை விரும்பி சாகுபடி செய்தேன், என்றார். சொட்டு நீர் பாசனம்:- இதே கிராமத்தில் பஞ்சவர்ணம் என்ற விவசாயி சொட்டு நீர் பாசானத்தை அந்த பகுதியில் முதன் முதலாக அறிமுகப்படுத்தி கரும்பு சாகுபடி செய்து வருகின்றார். சொட்டு நீர் பாசன முறையை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றார். இதற்கென தனியாக பம்பு செட்டுகள் அமைத்து அதில் சொட்டு நீர் பாசான கருவிகளை இணைத்து அதன் மூலம் செடிகளுக்கு தேவையான உரங்கள் மற்றும் தண்ணீர் அளிக்கபடுகின்றது. இதன் மூலம் விளைச்சல் மற்றும் மகசூல்கள் அதிகரிப்பதாகவும், பாசான நேரம் மிச்சப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் கத்தரி மற்றும் வெண்டை பயிரிட்டு விற்பனை செய்து வருகின்றனர். விவசாயத்தில் சத்தமில்லாம் சாதித்து வருகின்றனர் இந்த கிராமத்து விவசாயிகள். விவசாயங்கள் அழிந்து வரும் இந்த கால கட்டங்களில் இது போன்ற கிராமப்புறங்களில் மட்டுமே இன்னும் விவசாயத்தை மதித்து அதை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல நினைக்கின்றனர். இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தால், வரும் நாட்களில் விவசாயத்தை மறுபடுயும் தலை தூக்க வைத்துவிடலாம். இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 201
7

உலகில் உள்ள கட்டிடக்கலையில் சிறப்பு மிக்க பாலம், நார்வே நாட்டில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள பாலமும் ஒன்று. 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பாலம் ஆறு கிலோ மீட்டருக்கு கடலுக்கு அடியில் செல்கின்றது. கடல் மட்டத்தில் இருந்து 220 அடி ஆழத்தில் ஆறு கிலோமீட்டர் தூரம் கடலுக்கு அடியில் இப்பாலம் அமைக்கப் பட்டுள்ளது. 1983-ல் இந்த பாலம் கட்டத் துவங்கி 1989-ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலம் அமைத்திருக்கும் இடம் அதிக கடல் சீற்றம் கொண்ட இடம். பெரிய அலைகள் தாறுமாறாக மோதியும் கூட கம்பிரமாக நிற்கின்றது. இந்த பாலத்தை பார்க்கும் போது ஏதோ படங்களில் வரும் கிராபிக்ஸ் கட்சிகள் போற்று தான் தோன்றும். அந்த அளவிற்கு நம்பமுடியாத கட்டுமானம். இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 251
10

சாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்ற முடியுமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். சாதாரண non-touch screen laptop அல்லது Desktop Computer-களை தொடுதிரையாக மாற்றுவதற்கான கருவி ஒன்றை Portronics என்ற நிறுவனம் Handmate Digital Pen என்ற பெயரில் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சாதாரண கம்ப்யூட்டர் திரையை , Touch Screen ஆக மிக எளிதல் மாற்றிக் கொள்ளலாம். விண்டோஸ் 8 இயங்குதளத்தின் முழுமையான பயன்பாட்டை நீங்கள் பெற வேண்டுமெனில், இந்த Handamte விண்டோஸ் 8 பேனா நிச்சயமாக பொருத்தமான கருவியாகும். விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரில் இச்சாதனத்தைப் பொருத்தி செயல்படுத்திட முடியும். இதில் Infrared and Ultrasound டெக்னாலஜி, ரிசீவிங் யூனிட் மற்றும் அல்ட்ராசோனிக் டிஜிட்டல் ஸ்டைலஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துவிதமான non-touch லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் திரைகளை Touch Enable Screen ஆக மாற்றக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் கணினியில் நிறுவப்பட்ட அனைத்து மென்பொருள்களிலும் செயல்படுத்த முடியும். இந்த கருவியை எப்படி பொறுத்தவது மற்றும் இது எப்படி வேலை செய்யும் என்பதை விளக்கும் வீடியோ: இந்த கருவியின் சிறப்பம்சங்கள்: 1. Plug & Play, turn your existing PC to touch as easy as 1-2-3. 2. Cost-effective accessory, much better than buy an expensive touch screen laptop. 3. Slide, swap, drag to operate. 4. View Web &mail, zoom in & zoom out pictures, playing games, annotate on office document freely 5. Activate all software icons with a simple touch like it happens on Tablets 6. Slide, swap, drag to operate 7. Uses Ultrasonic and Infrared Technologies 8. Ultra simple user experience கருவின் தொழிநுட்ப விபரங்கள் Technology: Ultrasonic and Infrared Coverage area: up to17″(MAX) Resolution: 100 DPI Accuracy: 0.2mm Communication: USB 2.0 Full Speed , USB Cable Power Source: Pen: 2 x SR41 batteries Pen Battery Life Time:500 hours of continues writing/hovering.(The ratio of the pen’s working and standby time is 1:9 ) Note: Lifetime of the batteries may vary and cannot be guaranteed Standards: FCC/CE Platform Support: Windows® 8 Sampling rate:58 samples/second Power consumption: Operating Temperature: +10°c to +35°c. Storage Temperature: -10°c to + 50°c. Operation Relative Humidity Range: 20% – 80 % (40°c). Storage Relative Humidity Range: 20% – 80 % (40°c). Size: L * W * H: 68.01*26.32*7.70 (mm) Weight: about 9gr. Color: Black இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 147
5

3D படங்கள் இன்று நேற்றுத் தோன்றியதல்ல.. நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே 3D படங்களை உருவாக்கப்பட்டுள்ளன. முப்பரிமாண படிமம் (3D) என்பது படிமத்தில் உயரம், அகலம் தவிர ஆழத்தின் தோற்றத்தை உருவாக்கவும் முடிகிற ஒரு ஒழுங்கமைந்த தொழில்நுட்பமாகும். அதாவது மூன்று பரிமாணங்களில் காட்சித் தகவல்களை பதிய முடியும். முப்பரிமாண தொழில்நுட்பத்தை 1840 ஆம் ஆண்டு சர் சார்லெஸ் வீட்ஸ்டோன் என்பவர் கண்டறிந்தார். இந்த 3D நுட்பமானது தற்காலத்தில் பட அளவையியல், பொழுது போக்கிற்காக எடுக்கப்படும் 3D படங்களில் பயன்படுத்தபடுகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் நவீன காலத்தில் கட்டிட வரைகலைக்குப் பயன்படும் ஆட்டோகேட், 3மேக்ஸ் மென்பொருட்களிலும் பயன்படும் நுட்பம் இதுதான். 3D படங்கள் இன்று நேற்று உருவானவை அல்ல….1861 ஆம் ஆண்டிலேயே 3D படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அப்பொழுது ஏற்பட்ட உள்நாட்டு போரின் முடிவில் ஏற்பட்ட விளைவுகளை 3டி படங்களாக பதிவு செய்துள்ளனர். இப்படங்களை The library of congress கட்சி, மக்களின் பார்வைக்கு வெளியிட்டது. சிவப்பு -நீல வண்ணங்களில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ள இப்படங்களை பார்ப்பதற்கு கண்ணாடிகளும் தயார் செய்யப்பட்டிருந்தன என்பது ஆச்சரியம் கலந்த தகவல். அன்றைய காலத்தில் 3D படங்கள் உருவாக்க பல்வேறு பிரச்னைகள் இருந்தன. ஆனால் தற்பொழுது நவீனமயனமான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி சாதாரணமானவர்கள் கூட முப்பரிமாணப் படங்களை உருவாக்க முடியும். அதற்காக பயன்படும் ஒரு அடிப்படை மென்பொருள் பிளெண்டர். இது ஒரு இலவச சுதந்திர மென்பொருளாகும். அனைவரும் இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இந்த மென்பொருள் Microsoft windows, Mac OS, Linux, Solaris, NetBSD, IRIX, OpenBSD, FreeBSD என்பன போன்ற அனைத்து வகையான இயங்குதளங்களிலும் பயன்படுத்தக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வகையான கணினி என்றாலும் இம்மென்பொருளை எளிதாக பயன்படுத்த முடியும். இம்மென்பொருள் வடிவம்பெற்றதே ஒரு சுவையான கதை. டச்சு நாட்டு அனிமேஷன் நிறுவனமான NeoGeo மற்றும் Not a Number Technology (NaN) நிறுவனங்களுக்கு அனிமேஷன் உள் வேலைகள் செய்ய பயன்படும் மென்பொருளாக முதன் முதலில் உருப்பெற்றது. பிறகு இதற்கு பேபி என்ற ஆல்பத்தில் உள்ள ஒரு பாடல் மூலம் ப்ளண்டர் என்ற பெயர் வைக்கப்பட்டது. கணினியில் கட்டிட வரைபடங்கள் வரையவும் , முப்பரிமான பொருட்களை (3D) வரையவும் பல்வேறு மென் பொருட்கள் உள்ளது. அம்மென்பொருட்கள் அனைத்தும் கட்டண மென்பொருள்கள். விலையும் அதிகம். ஆனால் பிளெண்டர் மென்பொருள் முற்றிலும் இலவச சுதந்திர மென்பொருளாகும். பிளெண்டர் மென்பொருளின் பயன்கள் (Uses of Blender 3D making Software): Blender மென் பொருள் 3D படங்களை உருவாக்கப் பயன்படுகிறது. Macromedia Flash, Adobe photoshop போன்ற கிராபிக்ஸ் மென்பொருட்களில் ஏற்படுத்தக்கூடிய Photo Effects மற்றும் Text Effects களை உருவாக்க பயன்படுகிறது. கட்டிடக் கலைக்குப் பயன்படும் ஆட்டோகேட் (Auto cad), 3டி மேக்ஸ் (3d max) ரைவட் (rivet) போன்ற மென்பொருளின் தோற்றத்தை பெற்றுள்ளது சிறப்பு. அதில் செய்யும் பணிமுறைகளைப் போன்ற இந்த மென்பொருளிலும் இருப்பதால் இம்மென்பொருள்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எளிதானதாக இருக்கும். இது விண்டோஸ் 32bit, 64bit , Ox , Linux போன்ற அனைத்து இயங்கு தளத்திலும் இயங்குமாகையால் எந்த வகை கணினியை பயன்படுத்தினாலும் அதில் மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம். 40 MB கொள்ளவே கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவுவதும் எளிதானதுதான். இந்த மென்பொருளை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு இந்த வீடியோவை பார்க்கவும் இந்த மென்பொருளை download செய்ய இந்த link -ற்கு செல்லவும் http://www.blender.org/download/ இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 139
6

நமது கணிணியில் நாம் ஏதாவது ஒரு இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் நமது மோபைலில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் தனியாக காசு செலவழித்து மொபைலில் இன்டர்நெட் pack ஐ Activate செய்வோம். இது போன்று நாம் செய்யத் தேவையில்லை. நீங்கள் உங்கள் கணிணியில் பயன்படுத்தும் இன்டர்நெட்டையே உங்கள் மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் மொலை மட்டும் அல்ல, tablet மற்ற கணிணி என அல்லா wifi enabled டிவைசிலும் உங்கள் இன்டர்நெட்டை பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் உங்கள் இன்டர்நெட்டை பகிர்துந்து கொள்ளலாம். இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம் Virtual Router எனும் சிறந்த மென்பொருளின் மூலம் நீங்கள் பயன்டுத்தும் இன்டர்நெட்டை wifi மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும். http://virtualrouter.codeplex.com 2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும் அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும் Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும். மேலும் தாங்கள் எந்த இன்டர்நெட் இணைப்பை பகிர விரும்புகின்றீர்கள் என்பதையும் தேர்வு செய்து கொள்ளவும். 3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம். நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் கணிணியில் wifi enable ஆக இருக்க வேண்டும். இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 114
5

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



புதிதாக இணைந்தவர்

மேலே