படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

வணக்கம். இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக முக நூல் வழி ஒரு தொடர்... ஆகஸ்ட்1ம் தேதி முதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் எனது முக நூலில் 30 நொடி நேரம் படிக்கிற அளவில் "அதோ.. முகம் " நாவல் தொடராக வெளிவர இருக்கிறது . இதுவே முக நூலில் வெளிவரும் தொடர் நாவல் என்ற சிறப்பிற்குரியதாகும். உங்கள் பகிர்வுகள் இப் புதினத்தைப் பலர் சந்திக்க துணை புரியட்டும். உங்கள் கருத்துக்கள் எம் படைப்பிற்கு உரமாகட்டும். இத் தொடர் வெளியாகும் முக நூலில் இணைய, என்னை நண்பனாக்க.. https://www.facebook.com/cpsivarasan "செல்லும் வழியில் வலிகள் இருந்தாலும் வெல்லும் வழியில் விதிகள் செய்வோம்" அன்புடன் செ.பா.சிவராசன் www.vahai.myewebsite.com


Close (X)

வழி : செ.பா.சிவராசன் கருத்துகள் : 0 பார்வை : 211
3

நமது கணிணியில் நாம் ஏதாவது ஒரு இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் நமது மோபைலில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் தனியாக காசு செலவழித்து மொபைலில் இன்டர்நெட் pack ஐ Activate செய்வோம். இது போன்று நாம் செய்யத் தேவையில்லை. நீங்கள் உங்கள் கணிணியில் பயன்படுத்தும் இன்டர்நெட்டையே உங்கள் மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் மொலை மட்டும் அல்ல, tablet மற்ற கணிணி என அல்லா wifi enabled டிவைசிலும் உங்கள் இன்டர்நெட்டை பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் உங்கள் இன்டர்நெட்டை பகிர்துந்து கொள்ளலாம். இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம் Virtual Router எனும் சிறந்த மென்பொருளின் மூலம் நீங்கள் பயன்டுத்தும் இன்டர்நெட்டை wifi மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும். http://virtualrouter.codeplex.com 2.Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும் அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும் Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும். மேலும் தாங்கள் எந்த இன்டர்நெட் இணைப்பை பகிர விரும்புகின்றீர்கள் என்பதையும் தேர்வு செய்து கொள்ளவும். 3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம். நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் கணிணியில் wifi enable ஆக இருக்க வேண்டும். இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 115
5

அகவைகள் ஐந்தில் அடி எடுத்து வைத்த அழகிய தேவதை இவள்..!!! வடிவுகள் வழித்தெடுக்கப்பட்டு வனத்திலே கசக்கி எறியப்பட்டு உருமாறிக்கிடக்கின்றாள்..!! குழந்தை என அறிந்திடாமல் குதறிக்கிழித்த வெறி நாயின் பற்களின் தடமங்கே - இளம் பிஞ்சின் பட்டு வண்ணக்கன்னங்களில் தொட்டு ருசி பார்த்த வடுக்களாய் புதைந்து கிடக்கின்றது...!! பெண்மை உணர்வே அறியாத பிஞ்சானது பெண்மை குறி கொண்டதால் பஞ்சாகப் பிய்த்தெறியப்பட்டதோ...? துளை ஒன்று வேண்டும் என்றால் மண்ணுக்குள் துளையிடுங்கள் மரத்தினில் துளையிடுங்கள் மரணிக்கும் வரை உங்களைச் சொருகிக்கொள்ளுங்கள்...!! உணர்ச்சிகள் பிறக்காத சிசுவில் உணர முடிகின்ற காமத்தினைச் சடப்பொருளிலும் உணரமுடியும்..!! ஆண்மைத்தன்மையினை அற்பமாக பெண்மை யில் வக்கிரம் பாய்ச்சி மென்மை யினை வன்மை கொண்டு நோக்கி மலர எத்தனிக்கும் மொட்டைத் தாக்கி அழித்து கசக்கி போடும் கோழைகளே..! உக்கிப்போன உங்கள் வீரம் இது தானோ?? மக்கிப்போகும் மண்ணில் உங்கள் குறிகள் தொக்கி நின்று அரசாளுமோ?? சிக்கித்தவிக்கும் பெண்மையினை ரசித்தவனே..! விக்கி நிற்கும் பாலகியைச்சிதைப்பதிலும் நக்கிப்பிழைக்கும் பிழைப்பு மேல்..! தொட்டு தடவிப்பார்க்க பெண்மை வேண்டின் - உனை நட்டு வைத்த தாய்மையிடம் தடவிக்கொள் விஷச்செடி ஒன்றின் வித்தினை மண்ணில் விதைத்து விட்டவள் வினையறுக்கட்டும்...!! அரசி நிலவன்


வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வை : 134
6

மண்ணச்சநல்லூர் திருச்சியில், இறந்தவர் உடலை பெண்களே சுமந்து சென்று இறுதிச் சடங்குகளை நடத்தினர். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பிச்சாண்டார்கோவில் காந்தி நகரைச் சேர்ந்தவர் வைரமுத்து (75). இவர் நேற்று உடல் நலக்குறைவால் இறந்தார். பெரியார் கொள்கையில் பற்று கொண்டிருந்த இவரது இறுதிச் சடங்கை பெண்களை கொண்டு நடத்துவதற்கு அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை வைரமுத்துவின் உடலை கருப்பு உடை அணிந்த 6 பெண்கள் அவரது வீட்டில் இருந்து சுமந்துகொண்டு டோல்கேட் வழியாக கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள மயானத்திற்கு சென்றனர்.


வழி : vinayaka கருத்துகள் : 0 பார்வை : 134
2

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



புதிதாக இணைந்தவர்

மேலே