படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

சென்னை, ஏப். 16– மதுரையைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் ஜோசப் (வயது 49). லாரி பாடி கட்டும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கம்பெனிக்கு பணம் தர வேண்டிய ஒருவரிடம் பணம் வாங்குவதற்காக நேற்று முன்தினம் சென்னை சேத்துப்பட்டிற்கு வந்தார். அங்கு அவர் எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் மதுரை செல்ல முடிவு செய்தார். தாம்பரம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் மதுரை செல்ல திட்டமிட்ட அவர் மின்சார ரெயிலில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கினார். 1–வது பிளாட்பாரம் ஓரமாக நடந்து சென்ற ஆல்பர்ட் ஜோசப் திடீரென தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். அப்போது திருமால்பூரில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரெயில் ஒன்று தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு நுழைந்தது. இதை சற்று எதிர்பார்க்காத ஆல்பர்ட் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். இதை பார்த்த அங்கு இருந்த பயணிகள் அலறினார்கள். ‘‘ரெயிலை நிறுத்துங்கள்’’ என்று கூச்சல் போட்டனர். ஆனால் ரெயிலை நிறுத்த முடியவில்லை. அதன் வேகத்தை மட்டும் டிரைவர் குறைத்தார். ரெயில் அவர் அருகில் நெருங்கும்போது பயணிகள் ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று அதிர்ச்சியில் உறைந்து இருந்தனர். அப்போது சமயோகிதமாக ஆல்பர்ட் தைரியமாக முடிவு எடுத்தார். தண்டவாளத்திற்கு நடுவில் தரைமட்டமாக படுத்து கொண்டார். ரெயில் என்ஜின் அவரை கடந்து சென்று நின்றது. ஒரு சில பெட்டிகளும் அவரை கடந்து நின்றன. உடனே ரெயிலில் பயணம் செய்த பயணிகளும் அங்கு கூடியிருந்தவர்களும் கீழே இறங்கி ஆல்பர்ட் என்ன ஆனார் என்று பார்த்தனர். தண்டவாளத்தில் நடுவில் பெட்டிக்கு அடியில் படுத்து கிடந்த ஆல்பர்ட் எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நன்றாக இருக்கிறேன். என்னை வெளியே தூக்குங்கள் என்றும் மட்டும் குரல் கொடுத்தார். இதையடுத்து ரெயில்வே ஊழியர்களும், பயணிகளும் அவரை மீட்டனர். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது உடலில் சிறு காயம் கூட ஏற்படாமல் இருந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். ஆல்பர்ட்டை உடனடியாக அங்குள்ள ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அழைத்து சென்று முதலுதவி அளித்து மதுரைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்திற்கு நடுவில் படுத்து உயிர் தப்பிய ஆல்பர்ட் மறுபிறவி எடுத்ததாக கருதி பயணத்தை தொடர்ந்தார். அவர் உயிர் பிழைக்க வேண்டும். அவருக்கு எதுவும் ஆகக்கூடாது என்று அபாயக்குரல் எழுப்பியதன் விளைவாக டிரைவர், ரெயிலின் வேகத்தை உடனடியாக குறைத்தார். இதனால் அவர் சாதுர்யமாக உயிர் தப்ப முடிந்தது.


Close (X)

வழி : vinayaka கருத்துகள் : 0 பார்வை : 118
1

அண்மையில் படித்த புத்தகம் : தொட்டில் சூரியன் எழுதியவர் : தி.அமிர்த கணேசன் ஆங்கில மொழியாக்கம் : டி.ஜோசப் சூலியஸ் வெளியீடு : தருண் பதிப்பகம், சீர்காழி- சட்ட நாத புரம் முதல் பதிப்பு : 2013, பக்கங்கள் : 104, விலை ரூ 75. புதுச்சேரியின் முதல் பேரத் தமிழ் நூல் என்ற குறிப்போடு வெளி வந்திருக்கும் இந்த நூல் , பேரனைப் பற்றி தாத்தா எழுதிய நூல். புதுமையான முயற்சி. எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்பது ஒரு எழுத்தாளரின் உரிமை. எப்படி இந்த நூல் புதுமை என்றால், தமிழ்க் கவிதை இடது புறத்தில், அதற்கு ஒரு அருமையான மொழி பெயர்ப்பை- ஆங்கிலத்தில் டி.ஜோசப் ஜீலியஸ் அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதையை ஒரே நேரத்தில் படிக்கலாம், 'தொட்டில் சூரியனுக்குத் தாத்தாவின் தாலாட்டு ' என்று அணிந்துரையை கவிஞர் ஈரோடு தமிழன்பன் கொடுத்திருக்கின்றார். அணிந்துரையும் கூட அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதையைப் போல துள்ளி விளையாடுகிறது " அமிர்தகணேசனுக்கும் அவர் வார்த்தைகளுக்கும் இடையே கவிதையும் தன்னை இழந்த இன்பமயக்கத்தில் கூத்தாடுகிறது; கொண்டாட்டம் போடுகிறது,வாழ்வின் பொருண்மைகள் வியப்புத் தளங்களைக் கைப்பற்றி வெளிச்சம் பாய்ச்சுகின்றன. கொண்டாட்டமான கவிதை-தொட்டில் உற்சவம் நடத்துகிறது, ஒளிக்கள் அருந்திய மதர்ப்பு விசித்திர வண்ணக் கோலங்களைப் படைத்துத் தள்ளுகிறது....." எழுதிக் கொண்டே போகலாம். கரந்தைப் புலவர் அய்யா ந.இராமநாதன் அவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் பற்றிப் பாடம் எடுத்தது ஞாபகம் வருகிறது எனக்கு. அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்கள் அவ்வளவு ஈடுபாட்டோடு இந்த அணிந்துரையை அளித்துள்ளார்கள். " This is a pure literary creation in which the author having a comprehensive view of the world is trying to teach his grandson ,every thing under the sun " என்று ஆரம்பிக்கும் டி.ஜோசப் ஜீலியஸ் அவர்களின் அணிந்துரை தொட்டுச்செல்லும் தூரங்கள் அதிகம். வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், தங்களின் மொழிபெயர்ப்புக்கு என்று சொல்லும் அளவுக்கு மொழி பெயர்ப்பும் , ஆங்கில அணிந்துரையும். " உணர்வைக் கிளர்த்தி அதன் உட்பொருளைக் கிரகித்து கொள்ளச்செய்வதன்றி, ஒரு கவிதையின் செயல் வேறு எதுவும் இருக்காது என்றே கருதுகிறேன் . சூழல் இயல் குறித்தும், மொழி உணர்வு குறித்தும் ஒரு பேரனுக்குச்சொல்வதுதான் இன்றைய ஆகப்பெரும் தேவை. அதை அமிர்தகணேசன் வெகு செப்பமாகச் செய்திருக்கிறார்..." என்று சொல்லும் கவிஞர் யுகபாரதியின் ' தமிழ்த்தாத்தாவின் அமிர்தம்' எனும் அணிந்துரை, ஆங்கிலத்தில் டி.ஜோசப் ஜீலியஸ் அவர்கள் மொழிபெயர்த்தால் நான் மரபுக் கவிதையாக இப்புதுக் கவிதையை மாற்றுகிறேன் பார் என ' மடிக்குள் பெய்த மழை ....' என அய்யா எசேக்கியல் காளியப்பன், ' ஒற்றை மலருக்கல்ல , இது....மொத்தத் தோட்டத்திற்கும் 'என சரவணன் ஜெகன்நாதன் என அனைவரும் படைப்பாளி அகன் அவர்களின் படைப்பாக்கத்தை பல கோணங்களில் படம் பிடித்துக்காட்டுகின்றனர் . தி.அமிர்தகணேசன் அவர்களின் என்னுரை, இந்தப் படைப்பு எழுந்ததன் பின்னணியை, அதற்குக் கை கொடுத்தவர்களை பட்டியலிட்டுக் காட்டுகிறது,. இந்த நூலை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம். " வணக்கம் என்றே வாய் மலர்ந்து வளர் தமிழில் சுணக்கமின்றிச்சொல்லிப் பழகு . சுகம் காண் ..." என்று தொடங்கும் முதல் பாகம் , இன்று நீ .... என்று "தங்கத் தொட்டிலிடப் பெருஞ்செல்வம் இல்லையாதலால் சந்த்த் தொட்டிலில் தாலாட்டுகிறேன் உறங்கடா நீ காணி நிலமில்லை கை நிறையப் பொருள் இல்லை மேனி முழுதும் வற்றா அன்புண்டு என்னிடம் காண் ' என்று அன்பை, பாசத்தைக் கொட்டும் கவிதைகளாக, ஆலம் கட்டி மழை போல அன்பு கொட்டும் பா துளிகளாக வாசிப்போரை பரவசப் படுத்துகிறது. வார்த்தைகள் இயல்பாய் வந்து விழும் வேகம் , "புல்லினம் பூவினம் வண்டினம்- பல் புள்ளினம் துள்ளிடும் மானினம் உன்னினம் நேசங்கொள் " - வியக்க வைக்கிற்து.உணர்ச்சிக் கொட்டலாய் பக்கம் 28 முதல் 63 வரை முதல் பாகம். இவர்களோடு நீ என அடுத்த பாகம். பேரனுக்கு அவன் யார் என்பதையும், அவனது உறவுகள் சாதி கடந்த, மதம் கடந்த தமிழ் உறவுகள் என்பதையும் படம் பிடித்துக் காட்டும் பாகமாக அமைந்துள்ளது. " பொய்ம்மையை அறிந்திட மெய்யாய இருந்திடப் -பா நெய்யும் நெசவாளி 'தமிழ்ன்பன் உன் உறவு காண்.... மண்ணில் நீயுமோர் மனிதன் மண்ணன்று என்று பண்ணில் பொழிந்த பாரதிதாசன் உன் நில உறவு " என்று பட்டியலிடும் கவிஞர் , பேரனுக்கு தாய் வழி உறவுகளையும், தந்தை வழி உறவுகளையும், தமிழ் வழி உறவுகளையும் கவிதையால் பட்டியலிடும் பகுதியாக இரண்டாம் பாகம் நாளை நீ என்னும் மூன்றாம் பாகம் தன் பேரன் எப்படி வரவேண்டும் என்பதையும் , எதை எதைக் கற்க வேண்டும், என்ன என்ன ஆற்றல் பெற வேண்டும் என்பதையும் பட்டியலிடுகின்றர்ர். " பாராடா உன்னுடன் பிறந்த பட்டாளம் " என்று புரட்சிக் கவிஞர் முழுங்குவதைப் போல ' விழி, கதிர் முன் நாளும் விரி பார்வை புவியெங்கும் மொழி, தமிழில் மட்டும் உயர் வளர்ச்சி காண்.... யாரோடும் நட்புக் கொள் க்ண்டம் மற ஊரோடும் சேர்ந்து வாழ் உயர்வுண்டு காண் " என முழுங்குகின்றார். அறிவுரைக் கொத்துக்களாய், கவிதை மூலம் பரப்ப விரும்பும் நல் முத்துக்களாய் இந்த மூன்றாம் பாகம் அமைந்துள்ளது. முடிவாக புதிய ஆத்திசூடி உனக்களிப்பேன் பூபாளப் புயலே " எனப் புதிய ஆத்தி சூடி பாடி முடிக்கின்றார் நான் கொள்கை அளவில் மாறுபடும் இடங்களும் இத் தொகுப்பில் உள்ளன. 'இறை உணர்வு இன்பம் ஏற்றிடு -அன்றியும் கறை அதில் மூட நம்பிக்கை தூற்றி எறிந்திடு " எனப் பக்கம் 92-ல் குறிப்பிடுகின்றார். இறை உணர்வு என்றாலே மூட நம்பிக்கை குவியல்தானே, அதில் எப்படி நீக்குவது எனும் கேள்வி எழுந்தது என்னுள். ஒரு மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தை, பல புதுமைகளைப் புகுத்தியுள்ள ஒரு நூலினை படித்தோம் என்னும் மன நிறைவை, மழலையின் குறும்புகளை, அசைவுகளை உங்கள் மனக்கண் முன்னால் நிறுத்தும் கவிதை மழலை ஓவியத்தை நீங்கள் காண் இயலும் , இந்த தொட்டில் சூரியன் நூலை வாசிப்பதால். வாசியுங்கள், நீங்களும் அந்த மழலை உலகத்திற்குள் சென்று வாருங்கள். .


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 70
3

திரு அகன் அய்யா மற்றும் அண்ணன் கவிஜி ஆகிய இருவரும் இன்று எங்கள் நிர்வாக இயக்குனர் திரு. ராஜேஷ்குமார் மற்றும் அலுவலகத்தில் பணி புரியும் அனைவருக்கு ஒரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை கொடுத்து விட்டார்கள். நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அகன் அய்யா மற்றும் அண்ணன் கவிஜி இருவரும் எந்த ஒரு முன் அறிவிப்பு இல்லாமல் எங்களது அலுவலகத்திற்கு ( hiox ) வருகை தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார்கள்.. அவர்கள் இருவரும் அலுவகத்திற்கு வந்து எங்களை சந்தித்து எங்களுடன் உரையாடியது மகிச்சியான தருணம். மேலும் ராஜேஷ்குமார் அவர்களுக்கு தமிழ் சேவை விருது கொடுத்து சிறப்பித்து விட்டனர் புதுவை புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இன்று அகன் அய்யா மற்றும் கவிஜி அண்ணனை இங்கு சந்தித்ததில் மறைந்தது விட்டது.. அகன் அய்யா மற்றும் கவிஜி அண்ணன் ஆகிய இருவர்க்கும் எங்களது அனைவர் சார்பாகவும் ஹயாக்ஸ் (hiox ) சார்பாகவும் மனமார்ந்த நன்றி.. அன்புடன் தவமணி


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 84
5

உயர்ந்த கருத்தும், எளிய வார்த்தைகளும், ஓசை நயத்துக்கும் சொந்தக்காரர் கவிஞர் அழ. வள்ளியப்பா. குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்களை எழுதியவர். ’அம்மா இங்கே வா... வா... ஆசை முத்தம் தா... தா...’ ’மாம்பழமாம் மாம்பழம்... மல்கோவா மாம்பழம்...’ ‘கை வீசம்மா கை வீசு... கடைக்குப் போகலாம் கை வீசு...’ - தலைமுறைகள் தாண்டினாலும் மாறாத குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு இது போன்ற எண்ணற்ற எளிய பாடல்களை எழுதியவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. உயர்ந்த கருத்தும், எளிய வார்த்தைகளும், ஓசை நயமும் கவிஞரின் பாடல்களின் உயிர் நாடி. பிறப்பு: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தின் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாக 07.11.1922 பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன். கல்வி: இராயவரம் எஸ்.கே.டி.காந்தி ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் கடியப்பட்டியிலுள்ள உள்ள பூமீசுவரசுவாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளிக்கு நான்கு கிலோமீட்டர் நடந்து செல்லும் போது தன் கற்பனைத் திறன் கொண்டு கவி பாடிச் சென்ற கவிஞர் ஒரு நாள் மாலையில் பள்ளி முடிந்தவுடன், நண்பர்களுடன் நடந்தே வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது அவ் வழியில் ஒரு டூரிங் டாக்கீஸ் ‘லாஸ்ட் ஜங்கிள்’ என்கிற ஆங்கிலப் படத்தை, ‘காணாத காடு’ என்று தமிழில் மொழிபெயர்த்துச் சுவரொட்டிகளில் அச்சிட்டிருந்தனர். அதைப் பார்த்தவுடன் வள்ளியப்பா ஆனந்தமாக... ‘காணாத காடு கண்டுவிட்டால் ஓடு ஒளிய இடம் தேடு ஏழைகள் படுவதோ அரும்பாடு டிக்கெட் விலையோ பெரும்பேடு’ என்று பாட நண்பர்களும் உரக்கப் பாடிக்கொண்டே வள்ளியப்பாவுடன் ஓடினார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் அதாவது தனது பதின்மூன்றாம் வயதிலேயே கவிதை இயற்றத் தொடங்கியுள்ளார் கவிஞர். எழுத்துப் பணி: தொடர்ந்து படிப்பை தொடர முடியாத நிலையில் வாழ்வாதாரம் தேடி 1940 ஆம் ஆண்டில் வை. கோவிந்தனின் சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராக பணியில் சேர்ந்தார். அப்போது சக்தி ஆசிரியராக இருந்த தி.ஜ.ர.வின் ஊக்குவிப்பின் காரணமாக சக்தி இதழிலேயே எழுத ஆரம்பித்தார். சக்தியில் பணியாற்றும் காலத்திலேயே இலக்கிய நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள். "ஆளுக்குப் பாதி" என்னும் தலைப்பில் தன்னுடைய முதல் கதையை எழுதினார். திருமணம்: சக்தி இதழ் பணியாற்றிய போது வள்ளியம்மை என்பாரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர். வங்கி பணி: சக்தியில் இவர் பணி புரியும்போது, இந்தியன் வங்கி விடுத்த அழைப்பை ஏற்று 1941ல் வங்கியில் சேர்ந்தார். வங்கிப் பணியில் இருந்தவாறு கவிதையும் கட்டுரையும் எழுதத் தொடங்கியவர் 1982 -ல் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை எழுதினார். வங்கி பணிக்கு ஓய்வு அளித்த கவிஞர் கவிதைப் பணிக்கு ஓய்வு அளிக்காமல் எழுதிக் கொண்டுதான் இருந்தார். வங்கிப் பணியில் இருக்கும்போதே பாவலர் மலர், டமாரம், சங்கு இதழ்களுக்குக் கெளரவ ஆசிரியராகப் பணியாற்றினார். இதழ் ஆசிரியர் பணி: 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஒய்வு பெற்ற பின்பு 1983 முதல் 1987 வரை கல்கி வெளியீடான கோகுலம் இதழில் ஆசிரியராக பணியாற்றினார். குழந்தை எழுத்தாளர் சங்கம்: குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950-ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை. கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். நூல்கள்: வள்ளியப்பாவின் 23 பாடல்கள் கொண்ட முதல் கவிதைத் தொகுதியான மலரும் உள்ளம், 1944 ஆம் ஆண்டு வெளிவந்ததது. 1957-ல் 135 பாடல்கள் கொண்ட தொகுதிகளையும், 1961 இல் மற்றொரு தொகுதியையும் வெளியிட்டார். குழந்தை கவிஞர்: சிரிக்கும் பூக்கள் என்ற தொகுதியை வெளியயீடுக்குப் பிறகுதான் குழந்தைக் கவிஞர் என்ற பெயரிட்டு அனைவரும் அழைக்கத் தொடங்கினார்கள். எழுதிய நூல்கள்: மலரும் உள்ளம் - 1 பாப்பாவுக்குப் பாட்டு சின்னஞ்சிறு பாடல்கள் சுதந்திரம் பிறந்த கதை ஈசாப் கதைப் பாடல்கள் ரோஜாச் செடி உமாவின் பூனைக் குட்டி அம்மாவும் அத்தையும் மணிக்குமணி மலரும் உள்ளம் - 2 கதை சொன்னவர் கதை மூன்று பரிசுகள் எங்கள் கதையைக் கேளுங்கள் நான்கு நண்பர்கள் பர்மாரமணி எங்கள் பாட்டி மிருகங்களுடன் மூன்று மணி நல்ல நண்பர்கள் பாட்டிலே காந்தி கதை (பாடல் தொகுதி) குதிரைச் சவாரி நேரு தந்த பொம்மை நீலாமாலா பாடிப் பணிவோம் (பாடல் தொகுதி) வாழ்க்கை விநோதம் சின்னஞ்சிறு வயதில் பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் மத்திய அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றுள்ளன. குழந்தைகளுக்காக இவர் ஐம்பதிற்கும் மேலான நூல்களையும், ஆயிரத்திற்கும் மேலான பாடல்களையும் எழுதியுள்ளார். நம் நதிகள் என்ற தலைப்புடன் தென்னாட்டு ஆறுகள் பற்றிய இவரது நூலை, தேசீய புத்தக டிரஸ்ட் பதினான்கு இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது. சொற்பொழிவுகள்: 1979 -ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்கி அறக்கட்டளை நிகழ்வில் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். 1981 -ல் 5வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். பாராட்டும் விருதும்: குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச் செம்மல் என்று சில அமைப்புகள் பாராட்டியுள்ளன. 1982 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழத்தினால் தமிழ் பேரவைச் செம்மல் என்ற விருது அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டார். திரைப்பட பாடல்: குழந்தை பாடல்கள் எழுதி வந்த கவிஞர் வள்ளியப்பா ‘வா ராஜா வா’ படத்தில், ‘கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா...’ என்ற பாடல் மூலம் திரையுலகிலும்தனது பங்கை பதியம் போட்டுயுள்ளார். மறைவு: பால்யத்தின் பசுமைப் பக்கங்களில் பதியம் போடப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை படைத்த கவிஞர் மதுரைப் பல்கலைக்கழகத்தின் குழு உறுப்பினர் என்கிற முறையில், ‘குழந்தை இலக்கியத்தை பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக வைக்க வேண்டும்’ என்கிற தீர்மானத்தை வலியுறுத்திப் பேசிக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தார். பின்னர், சிகிச்சை பலனின்றி அகவை 66ல் (16.03.1989) மறைந்தார்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 91
3

உத்திரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் 11 வருடங்களுக்கு முன்னர் தேவர்னியா - பாத்வா கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சத்ரபால் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது உடலில் அசைவுகள் அற்று, பேச்சு மூச்சற்று கிடந்ததால், அவர் உயிரிழந்துவிட்டார் என்று அவர்களது குடும்ப வழக்கப்படி அவர் உடலை ஆற்றில் தூக்கி வீசிவிட்டனர். மிகமிகச் சிறிய வயதில் விதவையான சத்ரபாலின் மனைவி ஊர்மிளா அப்போது, கர்ப்பமாக வேறு இருந்தார். அவருக்கு வயதும் மிகக் குறைவு என்பதால், சத்ரபாலின் குடும்பத்தால் மிகவும் யோசித்து, சத்ரபாலின் இளைய சகோதரரை ஊர்மிளாவுக்கு மணம் முடித்து வைத்தனர். பின்னாளில் அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை, திடீரென அவர்களது வீட்டுக்கு வந்தார் சத்ரபால். அதுவும் 11 வருடங்கள் கழித்து. அப்போது தனக்கு நேர்ந்ததை அவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார். பாம்பு கடித்து விஷம் ஏறி இறந்ததாகக் கருதப்பட்ட சத்ரபாலை அவர்களது உறவினர்கள் ஆற்றில் தூக்கி வீசிய பின்னர், அவரை பாம்புக் கடி வைத்தியர்கள் சிலர் தண்ணீரில் இருந்து எடுத்துக் காப்பாற்றியுள்ளனர். அவருக்கு பாம்புக் கடி வைத்தியம் செய்து, படுக்கையில் இருந்து வெகு சிரமங்களுக்கு மத்தியில் எழும்பவிட்டு, உயிரோடு உலவ வைத்துள்ளனர். பின்னர் அங்கிங்கு பல இடங்களுக்கும் சுற்றி, சத்ரபால் அவர் வீட்டுக்கே திரும்பியுள்ளார். இந்நிலையில், சத்ரபால் மற்றும் அவரது இளைய சகோதரர் என இருவரையுமே தனது கணவர்களாக ஊர்மிளா ஏற்றுக் கொண்டுள்ளார். இருவரும் அனுமதிக்கும் பட்சத்தில் இருவருக்குமே மனைவியாக இருப்பேன் என்று கூறியுள்ளார். தற்போது, சத்ரபாலின் சகோதரருடன் இருக்கும் ஊர்மிளா, இந்த விஷயத்தில் குடும்பத்தினர் ஒரு முடிவு எடுத்து அறிவிக்கட்டும் என்று கூறியுள்ளாராம்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 78
2

கருவறை நான் கண்டதில்லை கர்ப்பத்தில் அமைதியாய் கிடந்ததுண்டு காணாத முதல் ஆலயம் கருவறையே..! பிறந்ததும் பிரித்ததும் தெரியவில்லை பிதாவும் கரங்களில் ஏந்தினாராம் பிரியத்தால் வாங்கினேன் முதல் முத்தம்..! முறித்த வாழையிலை சுருட்டி முன்வாயில் நான் உருட்டி முழங்கினேன் என் முதல் வாத்தியம்..! ஒருவரின் துணி பிடித்து ஓடுகிறவன் கால் மிதித்து ஓட்டினேன் என் முதல் வாகனம்..! புத்தகத்தின் நடு பக்கத்தில் புது குட்டி போடுமென்று புலம்பிய மயிலிறகே முதல் செல்லபிராணி..! மதிப்பெண் அட்டை கேட்டபோது மறைத்து வைத்த பைநோக்கி இல்லையென்று அப்பாவிடம் முதல் பொய்..! பப்பாளியிலை குழல் ஒடித்து பக்கத்து வீட்டு பையனுடன் இருமுனையில் பேசியது முதல் அலைபேசி..! திருவிழா ராட்டிணத்தில் ஏறி திருதிருன்னு சுற்றி சுற்றி இறங்கியது முதல் விமான பயணம்..! கடற்கரையில் கடல் ஒழிக கைகொண்டு எழுதி காத்துநின்றேன் கடல் அழித்தது முதல் கையெழுத்து..!


வழி : குமரிப்பையன் கருத்துகள் : 0 பார்வை : 80
1

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



புதிதாக இணைந்தவர்

மேலே