படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

சங்க கால மக்களின் வாழ்க்கை முறையை விளக்கும் புற நானூறு நூல் போன்று இந்திய சுதந்திரத்திற்குப் பின் இந்தியரின் வாழ்க்கைமுறையை விளக்கும் நூல் ஒன்றினை கீதம் பப்ளிகேசன்ஸ் மூலம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பிரபல சிறப்பு விருந்தினர் ஒருவரால் வெளியிட உள்ளோம். இந்த நூலில் ஆசிரியராக இணைய தமிழ் தெரிந்தவர்களுக்கு வாய்ப்பு. இது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு http://www.vahai.myewebsite.com/ தகவல்களைப் பதிவிறக்கம் செய்ய


Close (X)

வழி : செ.பா.சிவராசன் கருத்துகள் : 0 பார்வை : 76
6

நாகரீகம் என்ற பெயரில் நாசமாகிக் கொண்டிருக்கும் இளம் பெண்கள். கணினி முன்பு அமர்ந்துக்கொண்டு அயல் நாட்டிற்கு வேலை செய்வதை பெருமையாக சொல்லிக்கொள்ளும் படித்தவர்கள். வீட்டையும் கெடுத்து நாட்டையும் கெடுக்க - எந்நேரமும் போதையிலே தள்ளாடும் குடிமகன்கள். டேட்டிங் என்ற கலாச்சாரத்தை காப்பாற்ற போராடும் பேஸ் புக் பிரியர்கள். கைபேசி வாங்கியதும் காதலனை கண்டெடுக்கும் யுவதிகள். காதலன் என்று கண்டவனோடு பழகி கற்பிழந்து பின் தற்கொலை செய்துக் கொள்ளும் கோழைகள். பெண்ணை பெற்றவரை மண்ணை தின்ன வைக்கும் வரதட்சணை. அழிக்க முடியாத சின்னங்களாக அங்கங்கே பிச்சை எடுக்கும் சாலையோர சிறுவர் / சிறுமியர்கள். பணத்திற்காக ஒட்டு போடும் பைத்தியக்காரர்கள். குறைக்கும் நாய்க்கு எலும்பு துண்டாக பணத்தை கொடுத்து பதவி வாங்கும் அரசியல்வாதிகள். காவி உடையை திரையாக்கி கலவி கொள்ளும் கள்ள சாமியார்கள். ஏழைக்கு உதவ மனமின்றி, நிம்மதி தேடி இவர்களிடம் ஏமாறும் பணக்கார மூடர்கள். பேரமாகி போன கல்வி. ஆரோக்கியத்தை அழிக்கும் கலப்பட உணவு. மரங்களை அழித்து மமதையுடன் நிற்கும் அடுக்குமாடி கட்டிடங்கள். ஏர் பிடித்தவனின் ஏழ்மை. IPL போட்டிக்கு கோடிக்கணக்கில் செலவு. அதிகரிக்கும் அநாதை குழந்தைகள். நிரம்பி வழியும் முதியோர் இல்லங்கள். மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் ஈழ தமிழர்கள் விஷயத்தில் அரசாங்கம் கடைபிடிக்கும் அமைதி. நான்கு புறம் கடல் நடுவிலே உலகம் என்பது போல் அவலங்களுக்கு இடையில் சிக்கி தவிக்கிறது சமூகம். இல்லையெனில் இப்படியொரு தலைப்பில் கவிதை எழுத நேரிடுமா? எழுந்திடுவோம் கவிஞர்காள் - நம் எழுத்தால் இவைகளை மாற்றியமைப்போம். \\\"சமூக அவலம்\\\" என்ற சொல்லை அகராதியை விட்டே அகற்றுவோம்.


வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வை : 99
5

கரையில் கொதிக்கும் உலை... கடலில் தகிக்கும் அலை... இடையில் தவிக்கும் நிலை... 0 பன்னாட்டுப் பகாசுர சீமாட்டி நிறுவனங்களின் மினுக்கும் மின்சாரப் பசிக்கு கடலை விழுங்க கரையில் காத்திருக்கும் அணுப் பிழை...0 இன்னும் பதினைந்து நாள் இன்னல்கள் தீரும்... சொல்லும் குடுகுடுப்பைக்காரன் குரலில் குடும்பங்கள் அதிரும்...0 வலை உலர்த்த வழி தேடி... உயிர் உலர்ந்த வலி கோடி... 0 ஒரு கரையில் துப்பாக்கி மூக்கு சிங்கள நாரை... 0 மறுகரையில் கண்மூடி வாய்மூடி மோனத் தவம் இருக்கும் ஒற்றைக் கால் இந்திய கொக்கு... 0 இரண்டும் சேர்ந்து விரித்த கூட்டுச்சதி வலையில் சிக்கித் தவிக்கும் மீன் அவன்...0


வழி : அஹமது அலி கருத்துகள் : 0 பார்வை : 91
3

நல்லதும் கெட்டதும் நடப்பது யாரால்? நேரத்தாலா? எது நல்ல நேரம்? எது கெட்ட நேரம்? நல்ல நேரம் என குறிக்கப்படும் நேரத்தில் நல்லது மட்டும்தான் நடக்கிறதா? நல்ல நேரத்தில் செய்யும் செயல் எல்லாம் நல்ல செயல் என்று சொல்லலாமா? உனக்கு கெட்டது நடக்கும் நேரத்தில் எனக்கு நல்லது நடந்தால் அது என்ன நேரம்? செயலைப் பொருத்து நேரத்தை குறிப்பிடுவதா? நேரத்தைப் பொருத்து செயலை குறிப்பிடுவதா? ஒரு செயல் நடப்பதால் ஒருவருக்கு நன்மை மற்றொருவருக்கு தீமை அப்போது அது யாருக்கு என்ன நேரம்? நல்ல நேரம் என்பது பொதுவாக எல்லோருக்குமா? குறிப்பிட்ட நபருக்கு மட்டுமா? நல்ல நேரத்தில் நடந்த நல்ல காரியம் நன்மையில் மட்டும்தான் முடிகிறதா? எங்கோ திரிந்து கொண்டிருந்தவனை வெற்றியின் முதல்படிக்கு இழுத்து வந்தது 'தோல்வி ஏற்ப்பட்ட நேரம்'. அது நல்ல நேரமா? இல்லை கெட்ட நேரமா? ''நேரம் கிடைப்பதென்பதே நல்லதுதானே'' நல்லநேரத்தில் திட்டமிட்டு செய்யப்படும் தீய செயல் நல்லநேரத்தில் நடந்ததால் நற்செயலா? தீய செயல் என்பதால் கெட்ட நேரமா? சிந்திப்பீர்!!! தனக்கென வரும் பொழுது தடுமாற்றம் வேண்டாம். நல்ல செயலால் நன்மை நடக்கிறதோ தீமை நடக்கின்றதோ நல்ல செயலால் வெற்றி கிடைக்கின்றதோ தோல்வி கிடைக்கின்றதோ அது காலத்தின் வரலாற்றில் 'நற்காலம்' 'பொற்காலம்' ----------------------------------


வழி : susaana கருத்துகள் : 0 பார்வை : 87
3

ஈரைந்து மாதம் சுமந்து வறுமையிலும் செம்மையாய் உனை வளர்த்து ஆளாக்கி துணையாய் இருப்பாயென்று கல்லூரி அனுப்பிவைத்தால் என்ன செய்கின்றாய் நீயங்கு..? பெற்றவரின் கனவுகளை புறம்தள்ளிவிட்டு - உன் ஒளிமயமான எதிர்காலத்தை புதைகுழியிலிட்டு வயதுக்கோளாறில் வலைவீசுகின்றாய் கன்னியர்க்கு ... சீரழிக்கும் சில நண்பரின் உசுப்பேத்தலில் உருமாறிப்போகிறாய் அழகில் சிறந்தவளை குறிவைத்து காதல்வலை வீசுகின்றாய் .... அவள் பணியமறுத்தால் அமிலம்தனை வீசுகிறாய் ..! காதலென்ன பஞ்சுமிட்டாயா அழுது அடம்பிடித்து - நீ வாங்குவதற்கு .... கனியாத இதயத்தை இரக்கமின்றி நீயேன் காயப்படுத்த விரும்புகிறாய் ..! பிடிக்கவில்லையெனில் கௌரவமாய் விலகிவிடு விரும்பாத இதயத்தை தூக்கி எறிந்துவிடு எதற்காக நீ அமிலமதை வீசுகிறாய்..!? உனக்குக் கிடைக்காததை நாசமாக்கிய திருப்தியில் புளகாங்கிதமடைகின்றாய்.. சிதைந்து போனது அவள் முகம் மட்டுமல்ல உன் வாழ்வும் சேர்ந்துதான் ... எல்லோர் கனவையும் தீயில் பொசுக்கிவிட்டு நிமிர்ந்து நடக்கின்றாய் எதுவுமே நடவாததுபோல...! கண்ணீரில் மிதக்கும் பெற்றவரையும் பொருட்படுத்தாமல் ...! உன் வாலிபத் திமிரில் பெண்ணைப் பெற்றவரின் கண்ணீரைப் பார்த்திருக்கமாட்டாய் பார்த்திருந்தால் மனிதனாக மாறியிருப்பாய் உன் மிருக குணம் தொலைத்து ..! -------------------------------------------------------------------- தோழி துர்க்கா


வழி : susaana கருத்துகள் : 0 பார்வை : 88
8

ஓரை பார்த்து நிச்சயித்து ===கண் இமைக்கா கனவோடு காரைபூசிக் கட்டிய வீட்டில் ===வழிதவறிக் குதித்துத் தாவும் தேரை நுழைய விரட்டிடுவாரதன் ===நீர் பட்டவிடம் மெலியுமென ! நரித்தனமாய் சிந்தித்து திட்டமிட்டு ===காரியத் தடைகள் செய்வோரை தரித்திரமாய் தன்னோடே வைத்திட்டு ===புறப்படத் தயாராவார் எங்கேனும் உரித்தான அவ்வேளை பூனையொன்று ===குறுக்கிட நிற்பார் அபசகுனமென ! வெட்டிக்கதைகள் பேசி குற்றங்கண்டு ===தன் வாயிட்டு மெல்லுகையில் எட்டிபார்க்கும் மூலையிலோர் பல்லி ; ===அதுதன் பயணவழி ஆராய்கையில் சுட்டித்தனமாய் உச்சுக்கொட்ட சகுனமென ===தேடிடுவாரதன் பலனாவது யாதென ! எச்சிலாய் மிஞ்சியதைக் கண்டதும் ===எங்கோ போகும் காக்கையோ உச்சியில் உட்கார்ந்து கரையும் ===தன்நோக்கம் குறிப்பால் உணர்த்த ; மெச்சியதனைக் கண்டு நகைப்பர் ===உறவினர் வரும் அறிகுறியென ! அதிகாலைப் பொழுது அவசரகதி ===அந்நாள் அவசியமோ துரிதபடுத்த குதிகாலும் வலிக்கும்படியே நின்று ===தயாராகி சாலையில் இறங்கினால் விதியென முகம்சுழித்து திரும்பிடுவார் ===என் விரிகூந்தலும் சகுனத்தடையாம் ! ###################### (புலமி)


வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வை : 82
3

புதிய தலைமுறைப் பெண்கள்! - ஆண் போக்கிரி களுக்குஎ மன்கள்! அழகைக் கண்டு ஆசை கொண்ட காலம் போயாச்சே! - அவள் அறிவைக் கண்டு அச்சம் கொள்ளும் காலம் வந்தாச்சே! வெட்கம் கண்டு விரட்டிச் சென்ற காலம் போயாச்சே! - அவள் வீரம் கண்டு வேர்த்துப் போன காலம் வந்தாச்சே! மௌனம் கண்டு மடக்கப் பார்த்த காலம் போயாச்சே! - அவள் பேச்சைக் கண்டு பிரமிக் கின்ற காலம் வந்தாச்சே! அடக்கம் கண்டு அதட்டப் பார்த்த காலம் போயாச்சே! - அவள் ஆற்றல் கண்டு அதிர்ந்து போன காலம் வந்தாச்சே! பொறுமை கண்டு புண்ணாய்ச் செய்த காலம் போயாச்சே! - அவள் திறமை கண்டு திகைத்து நிற்கும் காலம் வந்தாச்சே! பணிவைக் கண்டு பந்தாய் எற்றும் காலம் போயாச்சே! - அவள் துணிவைக் கண்டு துக்கம் கொள்ளும் காலம் வந்தாச்சே! மென்மை கண்டு மேயப் பார்த்த காலம் போயாச்சே! -அவள் வன்மை கண்டு வாலைச் சுருட்டும் காலம் வந்தாச்சே! என்ன செய்வாள் என்றே மிதித்த காலம் போயாச்சே! - அவள் எதையும் செய்வாள் ஏன்வம் பென்னும் காலம் வந்தாச்சே! பார்த்தாள் சிரித்தாள் படிவாள் என்று பல்லைக் காட்டாதே! - அவள் பார்வை வேறு பாதை வேறு பாழாய்ப் போகாதே!


வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வை : 87
4

பிறந்தோமே நாங்கள் பிறந்தோமே... பிறப்பில் தமிழனாய் பிறந்தோமே...! மறந்தோமே நாங்கள் மறந்தோமே... மனிதனாய் பிறந்ததை மறந்தோமே...! இழந்தோமே நாங்கள் இழந்தோமே.. இருந்தையும் இங்கு இழந்தோமே..! இதயம் என்றொரு சதையில்லையேல்.. இதையாம் நினையா இறப்போமே..! இலங்கையில் தமிழன் ரத்தம் ஓட இரங்காமல் இமைமூடி இருந்தீரே.. எம்மை இரவும் பகலும் வெடிகள் தாக்கி இறந்தும் சரிந்தும் விழுந்தோமே..! தொப்புள் கொடியென உறவுகள் சொல்லி தோரணையோடு சொன்னீரே.. எம்மை தோளோடு தூக்க இனம் கோடி இருந்தும் தோள் துண்டை வீசி போனீரே..! ............................... (பிறந்தோமே...! பத்திரமதிலே பதித்துக் கொடுத்து – இனி பத்திரமெனச் சொல்லி வந்தாய் – அங்கு அமைதிப் படையாக இனத்தை அழித்து அலங்கோலம் ஆக்கி நீ வென்றாய் ! எம்குல பெண்டிரின் கற்பொடு தாலியை எமனாகிப் பறித்தாய் கறையாய் – இப் பாதகம் செய்தோரை பறித்ததும் -எமைப் பாதியில் போட்டாய் குறையாய் ! ................................................(பிறந்தோமே... தளபதி சதியில் கொலைவெறி வலையில் தலைவனை இழந்து தவித்தோம்... எம்மை தரையோடு சுருட்டி அகதியாய் ஆக்கி தமிழ் கரையினில் இறக்கி விட்டோம்..! படைதோற்ற இனமாய் ஏற்றிடவில்லை.. பல தடைபோட்டு சிறகை கட்டி... இங்கு தன்மானம் போக்கி உயிர்மட்டும் தாங்கி தமிழனாய் வாழ்கின்ற வெட்டி..! ...................................................(பிறந்தோமே... சரித்திரம் எழுதும் சரித்திரம் படைத்தவன் சரிந்ததும் சரிந்தது ஈழம்... எம்மை தாலாட்டி வீரத்தில் நீராட்டி ஊட்டிய தலைமகன் இழந்ததே எம்ஈனம்..! சேரன் செங்குட்டுவன் சோழ பாண்டியனும் சேர்ந்து ஆண்ட எம்நாடு... இன்று செந்நாய்கள் கூட்டம் செழுமையாய் தின்று செவி கேட்காமல் ஆடுது பாரு..! ..................................................(பிறந்தோமே... தமிழனின் மண்ணில் சிங்கள நரிகள் தறிகெட்டு ஓடுது பாரு.. எங்கள் தமிழர் கடவுளும் புத்தராய் மாறி தன்மானம் இழக்குது கேளு..! புத்தன் முருகனும் ஏசு அல்லாவும் புறமுதுகை காட்டி ஓடி.. எங்கள் புண்ணிய பூமியில் புகலிடம் தேடி புறப்பட வைத்தார்கள் கூடி..! ......................................................(பிறந்தோமே.. ஈழ கொடி ஒன்று வீசி பறக்காமல் ஈழ தமிழினம் இங்கு ஏது..? நாளை ஈழம் எய்யவே இனியொரு போரில் ஈய்வது எமக்கு பெரும் பாடு..! இந்த இனமானமில்லா இனத்தோடு இனியும் இருப்பதே எமக்கு கேடு..! எம்மை ஈழ கனவோடு வீர மண்ணிலே புதைப்பீர் ஈடில்லை இப்பிறவியின் ஈடு..! .......................................................(பிறந்தோமே...


வழி : அஹமது அலி கருத்துகள் : 0 பார்வை : 90
2

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



புதிதாக இணைந்தவர்

மேலே