கொடியார் கொடுமை உரைக்கும் - உறுப்புநலனழிதல்

குறள் - 1235
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

Translation :


These wasted arms, the bracelet with their wonted beauty gone,
The cruelty declare of that most cruel one.


Explanation :


The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.

எழுத்து வாக்கியம் :

வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.

நடை வாக்கியம் :

வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

பொருட்பால்
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

காமத்துப்பால்
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
மேலே