செற்றவர் பின்சேறல் வேண்டி - நிறையழிதல்

குறள் - 1256
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.

Translation :


My grief how full of grace, I pray you see!
It seeks to follow him that hateth me.


Explanation :


The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?

எழுத்து வாக்கியம் :

வெறுத்து நீங்கிய காதலரின் பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்த காமநோய் எத்தன்மையானது? அந்‌தோ!

நடை வாக்கியம் :

என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே நான் போய்ச் சேர வேண்டும் என்று என்னைப் பிடித்த இந்தக் காதல் நோய் தூண்டுவதால் இது மிகமிகக் கொடியது.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று.

பொருட்பால்
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

காமத்துப்பால்
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
மேலே