கல்லா தவரும் நனிநல்லர் - கல்லாமை

குறள் - 403
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.

Translation :


The blockheads, too, may men of worth appear,
If they can keep from speaking where the learned hear!


Explanation :


The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.

எழுத்து வாக்கியம் :

கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

நடை வாக்கியம் :

கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

பொருட்பால்
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.

காமத்துப்பால்
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
மேலே