ஞாலங் கருதினுங் கைகூடுங் - காலமறிதல்

குறள் - 484
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

Translation :


The pendant world's dominion may be won,
In fitting time and place by action done.


Explanation :


Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place.

எழுத்து வாக்கியம் :

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

நடை வாக்கியம் :

ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

பொருட்பால்
உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

காமத்துப்பால்
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
மேலே