அழிவின்றி அறைபோகா தாகி - படைமாட்சி

குறள் - 764
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

Translation :


That is a host, by no defeats, by no desertions shamed,
For old hereditary courage famed.


Explanation :


That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy).

எழுத்து வாக்கியம் :

(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.

நடை வாக்கியம் :

போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

பொருட்பால்
உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று.

காமத்துப்பால்
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
மேலே