அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் - சான்றாண்மை

குறள் - 983
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.

Translation :


Love, modesty, beneficence, benignant grace,
With truth, are pillars five of perfect virtue's resting-place.


Explanation :


Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests.

எழுத்து வாக்கியம் :

அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

நடை வாக்கியம் :

மற்றவரிடம் அன்பு, பழி பாவங்களுக்கு நாணுதல், சேர்த்ததைப் பிறர்க்கும் வழங்கும் ஒப்புரவு, நெடுங்காலப் பழக்கத்தாரிடம் முக தாட்சண்யம், உண்மை பேசுதல் என்னும் ஐந்தும் சான்றாண்மை என்னும் மாளிகையைத் தாங்கும் தூண்கள்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

பொருட்பால்
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

காமத்துப்பால்
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே