மங்காத்தா- கருத்துகள்

வடமொழி இலக்கணம். அதற்கு தமிழில் விளக்கம் கேட்டால் எப்படி கிடைக்கும்? விலக்கம் கேட்டால் (விலக்கு) கிட்டும்.

அரசியல் வணிகமானதும். வணிகத்தில் அரசியல் புகுந்ததும் தான். வணிகர்கள் அரசை தமது கைக்குள் போட்டுக் கொள்ள லஞ்சம் கொடுக்க, அதை திருப்பி எடுக்க அரசியல் வாதிகளின்செல்வாக்கை பயன்படுத்தி வளங்களை சுரண்டும் வணிகமாக்க, அரசியல் வாதிகளோ தமது அதிகாரத்தை பணத்திற்கு விற்கும் வணிகமாக்க இந்த சூழலில் சுழலில் சிக்கி காய்ந்ததுதான் இந்த தண்ணீர். அத்னால் தனியார் மயமாக்கலால் தண்ணீர் வணிகப் பொருளாய் மாறி, அதன் வணிகத்திற்கு குந்தகம் வராமல் பார்த்துக் கொள்ள இருக்கும் நீர் வளங்களை எல்லாம் மாசுபடுத்தினால்தான் நீரை விற்கலாம் எனும் நோக்கம் பெருக, சூழல் நீரை மாசுப்படுத்தி, குடிநீரை விற்கத் தொடங்கினர்.

அ+ரசன் அதாவது ரசனை இல்லாதவன். சத்தியம், அசத்தியம். சாத்தியம், அசாத்தியம் என்பதுபோல, ரசன் - ரசனை உள்ளவர்ன். அ ரசன் ரசனை இல்லாதவன்.
எப்பூடீ..... கிகீகிகீகிகீ

சின்னம்ம்! = சின்னம்மா

சினம் இதை நீட்டித்தால் அது சீனம். அழுத்தினால் அது சின்னம். குறுக்கினால் அது சின. எழுப்பினால் (கேள்வி) அது சினமா? அழுத்தி எழுப்பினால் அது சின்னம்ம்! இவற்றில் ஆறுவது சினம் என்று இருந்தால்.ஆறாதது எதுவென கேள்வி எழும். சினம் ஆறுவது என்றால் ஓடுவது எது எனும் கேள்வியும் எழும். பாதி ராவுல (raw வுல) உட்கார்ந்து தட்டச்சு செய்தாலே இப்பிடித்தான் கன்னா பின்னான்னு எதனாச்சும் வந்திருது. தூங்கி எழுந்திருச்சி அப்புறமா தட்டச்சு செஞ்சி சொல்லுதேங்.... சரியா...?

கவர்ச்சி, ஈர்ப்பு ஏற்படும் எதிலும், அதை நோக்கி, இதுல ஒன்னுமே இல்லியே, என்ன அதிசயம் இருக்கு எனும் ஒரு சலிப்பு உணர்வோடு அணுகிப் பாருங்கள். மனம் அலைபாயும் நிலை குறையும். அலைபாயும் நிலை குறைந்தாலே சலனமில்லா நிலை நோக்கி நகர்வீர்கள். பிறகு தன்னாலேயே மனம் அமைதி அடையத் தொடங்கி இறுதியில் ஒரு நிலைப்படும்

இதை அறிய சரியான இடமும் சந்தர்ப்பமும் மனையாளின் முன் ஒரு ஆடவன் கொள்ளும் நிலைதான். அதே விதி மகளிருக்கு எனில் அவள் தன் கணவனிடம் எதிர்வினையாற்றும் நிலையில் இருந்து தெரிந்து கொள்ளாலாம்.

இன்னும் இருக்கு. ரூம் போட்டு யோசிச்சிட்டு வந்து சொல்றேன்.

"ஆ"பாச கவிஞர்களுக்கு நடுவில் திரை உலகில் உணர்வுகளுக்கு மதிப்பு தரும் வரிகளை தந்து சமூகத்தின் திருந்திய சிந்தனைக்கு விருந்தளித்து மதிப்பு பெற்று குறுகிய வாழ்வில் காலத்தால்
நிலைத்து நிற்கும் கவிஞர்.

சிறார்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை போதிப்பது இல்லாமல் போவதும், எதையாவது எழுதலாம் என நினைக்கும்போது, சமூகத்தில் பரப்பட்டுள்ள மாயை நிலையான "எல்லாம் இணையத்தில் கிடைக்கிறது, நூல்கள் எங்கே படிப்பார்கள்" எனும் அங்கலாய்ப்பு ஒலிதான். தவிர, அச்சு அடக்கவிலை அதிகரித்து இருக்கும்போது பெற்றோர் நூல்களுக்காக செலவிடும் பணம் வீண் என நினைப்பதும் ஒரு காரணமே. தவிரவும் நீதிபோதனைகள் பரவலாக இருந்தால்தான் அதை தேடிப் படிக்கும் தாகம் சிறார்களிடையே ஏற்படும். பள்ளிகளில் அவை தொடர்ந்து காணாமல் போய்க் கொண்டிருக்கின்றனவே. அதனால்தான் சிறார் இலக்கிய நூல்கள் தமிழில் அருகி வருகின்றன.

மதவாதம் என்பதை முதலில் வரையறுத்தால் இந்த குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும். மதவாதம் என்பதை நாம் "மத வெறியை" குறிப்பதற்காக பயன்படுத்துகிறோம். வெறி, தீவிரவாதம் இவை எது இருந்தாலும் அது உதவாது என்பதை பொதுவாழ்வில் பலரும் நிரூப்பித்து வாழ்ந்து காட்டி உள்ளனர்.
அடுத்ததாக, மதச் சார்பின்மை என்பதை வரையறுக்க வேண்டும். மதச் சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராதது என்பதாக பொருள் கொள்ளும்படியாக நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் மெய்ப்பொருள் அதுவல்ல. ஏனெனில் இந்தியாவில் உள்ள நிலப்பகுதியில் மதம் சாராமல் எந்த ஒரு மனிதராலும் வாழ முடியாதபடி அது சமூகத்தின் ஒவ்வொரு நிலையிலும் ஊறிப் போயுள்ளது. அது எந்த மதமானாலும் சரி. சமூகம் மதம் சார்ந்ததாக இருக்கும்போது அது தேர்ந்தெடுக்கும் ஒரு தலைமை அதாவது அரசு எப்படி மதச் சார்பின்மையுடன் இருக்க முடியும். ஏனெனில் அரசு ஊழியர்களும் சமூகத்தில் இருந்து வரும் சாமானியர்கள்ளே. அவர்களும் ஏதாவது ஒரு மதத்தில் இருந்து உருவாக்கப்படுபவர்களே. அப்படியிருக்க மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் எந்த ஒரு நபரும் தனது சமுதாயத்தை மேம்படுத்துவேன் எனும் வாக்குறுதியை வீசி வழங்கியே தேர்தலில் வெற்றி பெறும்போது, வெற்றி பெற்ற பின் எப்படி மதத்தை உதறித் தள்ளி வைத்து சமூம சேவை செய்வது? எனவே மதச் சார்பின்மை என்பது நடைமுறைக்கு ஒவ்வாத கோட்பாடே.
சரி அப்படியெனில் மதச்சார்பின்மை என்பது ஏன் பேசப்படுகிறது என்றால், அதன் பின்புலத்தை அறிந்து கொள்ள வரலாற்றை சற்றே திரும்பி பார்க்க வேண்டும். முகலாயர்கள் ஆண்ட ஆட்சியாளர்கள் பிற மதத்தை சார்ந்தவர்களை வலுக்கட்டாயமாக ஒரு மதத்திற்கு மாறும்படி தொடர்ந்து வற்புறுத்த, அந்த இஸ்லாமிய மயப் படுத்தலை எதிர்க்கவே மதச்சார்பின்மை எனும் சொல்லாடல் முதன் முதலில் நசுக்கபட்டவர்களால் கையாளப்பட்டது. அதாவது இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்க்க மதச்சார்பின்மை பரப்புரை செய்யப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பின் அதையே புரட்டிப் போட்டு, இஸ்லாமியர்களுக்கு என்று தனி நாடு கேட்டுப் பெற்ற பின்பு இந்த மண்ணில் இந்துக்களுக்கு எதிரான பரப்புரையாக மதச்சார்பின்மை எனும் சொல்லாடல் அதாவது இந்து விரோதம் எனும் பொருள் பொதிந்து வரும்வகையில் கையாளப்படுகிறது.
ஒவ்வொரு நிகழ்விலும் நாம் இதை கண்கூடாக காணமுடியும். இந்து விரோத பேச்சுகளும் செயல்களும் இருப்பின் அது மதச்சார்பின்மை. அதாவது இந்துக்கள் தமது மதத்தை விட்டு விலகி இருந்து பிற மத சடங்குகளை மேற்கொண்டு நடந்தால் அது மதச்சார்பின்மை. அதே நேரம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு எனும் போர்வையில் இஸ்லாமியர் மற்றும் கிறித்துவர்களை ஆதரித்து பேசுவது மதச்சார்பின்மைக்கு எதிராகாது எனும் மாயை உருவாக்கப்பட்டு இருக்கிறது., மதச்சார்பின்மை எனில் அந்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கு ஆதரவாக பேசாமல் இருக்க வேண்டும்தானே. அதே நேரம் அந்த மதத்தைச் சார்ந்தவர்களும் இந்து மத சடங்குகளை ஏற்றுக் கொண்டால்தானே அது மதச்சார்பின்மை. அப்படி இல்லாமல், ஒரு திசைப் பயணமாக இந்துக்கள் பிறமதச் சடங்குகளை ஏற்றுக் கொள்வது மட்டுமே மதச்சார்பின்மை, மற்ற மதத்தினரும் இந்துக்களுக்கு எதிராக பேசினால் அதுவும் மதச்சார்பின்மை, அவர்கள் இந்து மதச் சடங்கை ஏற்காமல் இருப்பது மதச்சார்பின்மை என்று பிதற்றுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
மதவாதம் என்பதே இஸ்லாமியரும் கிறித்துவர்களும் தங்கள் மத சடங்குகளை விடாமலும் பிற மதச் சடங்குகளை விடச் சொல்வதும் தானே.
மதச்சார்பின்மை அனைத்து மதத்தினராலும் கடைபிடிக்கப் பட்டால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது இல்லையெனில் அனைவரும் அவரவரது மதத்தை வெளிப்படையாக பின்பற்றுவதே சிறந்த ஆரோக்கிய சமுதாயத்திற்கு வழிவகுக்கும்.

எனது கனவுகள் ஈஸ்ட்மென் வண்ணத்தில் மதுர மனோகரமாயே
விரிகின்றன . பிளாக் அன்ட் ஒயிட்டில் வருவதே இல்லை .ஏன் ?
உங்கள் அனுபவம் என்ன ?

நீங்க இன்னும் அந்த காலாத்திலேயே இருக்கீக அதாங்...
ப்ளாக் அண்ட் ஒயிட் படம் போய், ஈஸ்ட்மென் கலர்ல படங்கள் வந்து, இப்ப எல்லாம் செய்தித் தாள்கள் கூட வண்ணக் கலர்ல (இது எங்க ஊர் பாஷை- நடு செண்டர், வண்ணக் கலர்) வர தொடங்கிருச்சு.
சின்னத்திரை எல்லாமே பெரும்பாலும் கலர்லதான் இருக்குது இப்ப எல்லாம். உங்க வூட்டாண்ட இருக்குற சின்னத்திரை அதோங் ..... இருக்குதே.... ப்ளாக் எண்ட் ஒயிட்டுலெ அத்தெ மாத்துங்க.... உங்க கனவு எல்லாம் வண்ணக் கலர்ல வந்து போகும். அப்பிடியும் வரலீன்னா, என்னய கூப்பிடுங்க... வந்து அந்த பொட்டிய பை-பேக் (BUY BACK ) Scheme ல ஓசியில எடுத்துக்கிட்டு போய், புதுசா ஒன்னு குறைஞ்ச விலையில தந்துட்டு போவேனுல்லா...

தமிழ் இன்னும் திராவிடத்தில் சிக்கித் திணறுவதால் அதையே தமிழ் என்று குறிப்பிட்டு தமிழில் ஐயம் என்றேன். இதையே ஐயாம் (I am ) என்று இருந்தால் அது ஆங்கிலமாகி இருக்கும் அல்லவா? ஹிஹிஹிஹி... தெளிவாக குழப்புகிறேன் என நினைக்கிறேன்.

இப்போது நிறைய மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் இது போன்ற குழப்பங்கள் வந்து போவது இயல்பாக உள்ளதால் அவ்வப்போது இது போன்ற பதிவேற்றங்களை தொடர்வேன் என நம்பலாம்.

கனவுகள் - கற்பனைகள்

பகல் கனவு - நமது கற்பனை
இரவு தூக்கத்தில் மனதின் கற்பனை - நமது கனவு

இங்கே மனதையும் "நாம்" எனும் சொற்பதத்தையும் பிரித்து அறியவேண்டியது அவசியம்

மனது கட்டுக்குள் அடங்காது போனால் நாம் தோற்கிறோம்.

நாம் கற்பனை செய்தால் அது விருப்பம், ஆசை, துடிப்பு, இஷ்டம் (அதி விருப்பம்), லட்சியம், கனவு என பரிணமிக்கிறது.

இதுல பகிடி என்னான்னா, நானு எதையோ சொல்ல வந்தேன், என்னத்தையோ சொல்லிட்டு இருக்கேன். எனக்கு கனவே வரலை! ஆமாங் சொல்லிப்புட்டேன்!

கனவு வரும்போது வந்து பதிவு செய்யுறேன். சரியா....ஈ...ஈ...ஈ...ஈ

நாங்கள் கனவு காணக் கூடாது என்பதற்காகவே
எங்கள் கண்கள் பிடுங்கப்படுகின்றன!

இந்த வரிகளில்
கண்களுக்கும் கனவுகளுக்கும் தொடர்பு உண்டா என்ன?

அதைத்தான் சீதையின் வாயிலாகவே தெளிவுபட, இடத்தின் பொருள்பட, (நிர்பந்தம் காரணமாக) விளக்குகிறாரோ? என்றே எண்ணத்தோன்றுகிறது.

எழுத்துகளை வாசித்தல் - (கதை, கட்டுரை, கவிதை, கடிதம், விளக்க உரை ஆகியன)

வாய் விட்டு வாசித்தல், மனதுக்குள்ளேயே வாசித்தல்,
நிதானமாக பலமுறை வாசித்தல்,
வேகமாக வாசித்தல்,
வாசித்துக் காட்டுதல் (ஒலிப்பு முறைகளை வெளிப்படுத்துதல்)
பொருள் புரியும் படி வாசித்தல்
பிரித்து வாசித்தல், இணைத்து வாசித்தல்
மனதில் பதியாமல் வாசித்தல் (ஒரு முறை வாசித்து விட்டு மறந்து விடுதல்)
மனதில் பதிந்து நினைவாற்றல் கொள்ளும்படி வாசித்தல்
பொருள் புரிந்து வாசித்தல் - வாசிக்கும்போதே ஆய்வில் ஈடுபடுதல்.
குழப்பும்படி வாசித்தல், தெளிவாக வாசித்தல்
ஒலிப்பு சரியின்றி முணுமுணுப்பாக வாசித்தல்
உரக்க காது செவிடாகும்படியாக ஓலமிட்டு வாசித்தல்
அவசரமாக, விரைவாக வாசித்தல் (விளம்பரத்தின் கடைசிக் குறிப்புகள் போல)
இழுத்து இழுத்து ராகம்போடுவது போல (பேட்டரி தீர்ந்த வானொலி போல) வாசித்தல்
தொண்டை செருமி செருமி வாசித்தல்
நமுட்டு சிரிப்புடன் வாசித்தல்
கோபமாக வாசித்தல், ஏளனமாக வாசித்தல்
நையாண்டியாக வாசித்தல், நக்கலாக வாசித்தல்
ஏதாவது ஒருவர் போல- பிறரை போல வாசித்தல்
முனைப்பாக வாசித்தல், மூச்சு விடாமல் வாசித்தல்
யோசித்து வாசித்தல்,
யோசிக்க வைக்க வாசித்தல் (இடைவெளி விட்டு பிறரின் வெளிப்பாடுகளுக்காக காத்திருத்து பின்பு தொடர்ந்து வாசித்தல்)
எழுதத் தூண்டும் வாசித்தல் (குறிப்பெடுக்க உதவிடும் வாசிப்பு)
கட்டளையாக வாசித்தல் (செயல்களை செய்யத் தூண்டும் வாசித்தல்)
கீழ்படிய வாசித்தல்,
மனமுருக வாசித்தல் (பக்திப் பாடல்களை, பண்களை வாசித்தல்)
மனது மயங்க வாசித்தல் (இசையாக வாசித்தல்)

கருவிகளை இசைத்தல் (வாசித்தல்)

போதுமா இன்னும் வேண்டுமா?

பொருள்:

தழைத்த - சீரிய அழகிய
பொன் முலைத் தடம் = தங்கம் போன்ற மார்புகளின் மேல்

தடம் கடந்து = அந்த தடையை கடந்து

கண்ணீர் அருவி போல் விழுகிறது. விழும்
கண்ணீர், அந்த மார்பகங்களால் தடை படுகிறது.

கடந்து, = தாண்டி

அருவி போய்த் தாழப் = கீழே விழும் அருவி போல்

புழைத்த போல,= புழை என்றால் துளை.

கண்ணில் யாரோ துளை இட்டால் எப்படி கண்ணீர் விடாமல் கொட்டிக் கொண்டே இருக்குமோ, அது போல்

நீர் = கண்ணீர்

நிரந்தரம் = நிரந்தரமாக, எப்போதும்

பொழிகின்ற பொலிவால், = பொழிகின்ற அழகால் (அதில் கூட ஒரு பொலிவு)

இழைக்கும் = நூல் இழை போன்ற. இழைக்கும் என்பதற்கு மூச்சு வாங்கும்
என்றும் பொருள் சொல்லலாம்.

"ஏன் இப்படி இழைக்க இழைக்க ஓடி வருகிறாய்..கொஞ்சம் நிதானமாய் வரக் கூடாது ? ". தனங்களின் பாரத்தால் இழைக்கும் இடை.

நுண்ணிய மருங்குலாள்,= சிறிய இடையியை கொண்டவள் ( சீதை)

இணை நெடுங் கண்கள்,= இணைந்த இரண்டு நெடிய கண்கள்

'மழைக்கண்' = மழைகண்

என்பது = என்று கூறுவது

காரணக் குறி என வகுத்தாள்.= காரணப் பெயர் என்று ஆக்கினாள்

மழைபோலத் தொடரோட்டம் கொள்ளும் கண்களை மழைக் கண் என்று விளிக்கலாம் எனும் நினைப்பை தந்து தனது கண்ணை மழைக் கண் என்று கூறுவதாக இருப்பின் அது காரணப் பெயர், காரணக்குறி என இலக்கணம் வகுந்தாள் அந்த சீதை.
இதை இலக்கிய நயம் என்றே சொல்ல வேண்டும்.
சீதை தனது கண்ணுக்கு இலக்கணம் வகுத்து அதற்கு "மழைக்கண்" என்பது காரண குறி என்று விளக்குவதாக கம்பன் கூறுகிறார்.

கனவுகள் என்பவை ஆழ்மனதில் கட்டளைகளுடன் மூளையின் கற்பனையும் சேர்ந்து நமது விருப்பங்கள் (ஆசைகள்) ஏக்கங்கள், மன நிறைவுகள் (சந்தோஷங்கள்) மற்றும் துயரங்கள் (துக்கங்கள்) ஆகியவற்றுடன் உலா வரும் நகரும் ஓவியம் (நகர்படம் அல்லது காணொளி எனலாம்).

இதில் முக்கியமாக ஆழ்மனம் என்பதை புரிந்து கொள்வது அவசியம். அதில் பதிவது குறிந்த புரிதல் வரவேண்டும்.
பிறகு ஆழ்மனக் கட்டளையை புரிந்து கொள்வது அவசியம்.
அதன் பிறகு மனதின் கற்பனையை புரிந்து கொள்வது.
அதற்கும் பிறகு இவற்றின் கலவை விகிதத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
இவைகளை புரிந்து கொண்ட பிறகே கனவுகளின் பலன்கள் மற்றும் பலிதங்கள் ஆகிவற்றை புரிந்து கொள்ள முயல வேண்டும்.

மேற்சொன்ன நிரல் படி முயற்சி செய்யாமல் நேரடியாக கனவுகளின் பொருளையும் அதன் பலன்களையும் புரிய முயல்வதால்தான் குழப்பம் விளைகிறது.

ஆழ்மனது - இது கண்களில் உள்ள திரையைப் போன்றது.

திரையில் ஒன்றுமே பதிவதே இல்லை என்று நாம் நினைத்திருந்தாலும், சில நொடிப் பொழுதுகள் அந்த திரையில் பிம்பம் ஏற்படுத்தப் பட்ட பிறகே அவை மூளையின் பதிவு மண்டலத்திற்கு செல்கின்றன.

பார்த்த அரை நொடியில் கண்களை மூடி, இமை மீது விரல் வைத்து கருவிழியை லேசாக பஞ்சு போல அழுத்தினால், பார்த்த காட்சியின் பிம்பம், நிழலாக மீள்காட்சி ஒளி வடிவில் பிரதிபலிக்கும். ஆனால் அது நிலைத்து நிற்பது இல்லை. மூளையின் பதிவுப் பகுதியில் சென்று மேல் மனம் அதாவது தர்க்க மூளை மண்டலம் சென்று அங்கே பதிவு செய்யப்பட்டு பகுத்தறியப்பட்டு புரிதல் ஏற்படுத்தப்படுகிறது.
இந்தத் திரையைப் போன்றதுதான் ஆழ்மனது. யதார்த்த நிலையில் தற்காலிக நிகழ்வுகளை கிரகிக்க கூடியது இந்த ஆழ்மனம். நம்மை அறியாமல் உள்வாங்கும் நிகழ்வுகள் அதில் பதிகின்றன.

இது காற்றில் உள்ள தூசியை தன்னையறியாமல் நாம் சுவாசிப்பது போல, நம்மைச் சுற்றி உள்ள சூழலில் இருந்து எதையாவது எப்போதுமே கிரகித்துக் கொண்டே இருக்கும்.

ஆழ்மனதில் பதிவுகள் - இது காதில் வைத்து ஒரு பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும் போது எங்கோ கேட்கும் தொடர்பில்லா ஒலிகள் காதில் விழுவது போன்றது நிகழ்வுகள். பாட்டு கேட்டு புரிதல் நடந்து கொண்டிருக்கும்போது தொடர்பில்லாமல் தெருவில் ஓடும் வாகன ஒலிப்புகள் அல்லது மாடியில் இருக்கும் பறவைகளின் ஒலிகள் அல்லது அடுத்த வீட்டு குக்கர் விசில் போன்ற ஒலிகள் கேட்டாலும் அதை புரிந்து உணர்ந்து எதிர்வினையாற்றும் புரிதல் இன்றி புறந்தள்ளும் நிலையில் நாம் இருப்போம். மீள் பார்வை செய்து வீட்டு உறவினர் ஏதாவது சொல்ல பின்பு ஞாபகப் படுத்தி உணரும் வாய்ப்புகள் வரும். புரிந்து கேட்கும் ஒலி பாட்டு - இதனோடு உறவாடும் நிலையில் புரிதல் இருக்கும். ஆனால் தொடர்பில்லா ஒலிக்கு எதிர்வினை ஆற்றும் நிலையிலோ உள்வாங்கும் நிலையிலோ நாம் இருக்க மாட்டோம். ஆயினும் அந்த ஒலியில் காதில் விழுந்து கொண்டுதான் இருக்கும். அது போன்றது ஆழ்மனதில் பதிவுகள்.
அது எவ்வாறு பதிவுகளாக தங்குகின்றன என்பதை பார்ப்போம்.
கடையில் சென்று ஒரு பென்சில் வாங்க விரும்பி கடைக்காரரிடம் பென்சில் தாருங்கள் என்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது அவசரமாக ஒரு வந்து வேகமான குரலில் பற்பசை கேட்டு அழுத்தம் கொடுக்கிறார். அதே நேரத்தில் ஒரு குழந்தை ஏதாவது ஒரு பொருளை கடையில் இருந்து எடுக்க எத்தனிக்க, கடைக்காரர் அதனிடம் கோபித்துக் கொள்ள, பற்பசை கேட்பவர் அழுத்தமாக விரைவுப் படுத்த, நீங்கள் அமைதியாக பென்சில் கேட்க... இந்த மூன்று நிகழ்வுகள் அப்பால் ஒரு நாய் அருகே ஒரு நொடியில் கடந்து செல்கிறது.
இவற்றில் அழுத்தம் காரணமாக பதிவு மண்டலம் விரியும், தர்க்க மண்டலப் பகுதி அழுத்தத்தைப் பதிவு செய்ய விரும்பும். ஆனால் இவற்றின் விளைவாக ஏற்படுத்தப்படும் தாக்கம் நொடியில் கடந்து செல்லும் நாயை அரை நொடியில் காரணமே இன்றி கிரகித்து வைத்திருக்கும். அதுதான் ஆழ்மனது பதிவு.

தர்க்க மண்டல் மூளைப் பகுதியில் பதிவாகும் எதுவுமே ஆழ் மனதில் பதிவதில்லை.

அதாவது வெளிப்புற அழுத்தங்கள் மறைமுகப் பதிவுகளை ஆழ்மனதில் நொடிக்கும் குறைவான நிகழ்வுகளை காரணங்கள் இன்றி பதிவு செய்ய ஊக்குவிக்கும். உதாரணத்திற்கு அலுவலகத்தில் சந்திக்கச் சென்ற நபர் இல்லையென்றதும், "ச்சே" என்று ஒரு நொடியில் சலித்துக் கொண்டு வெளிப்படுத்தும் கோபம் ஆழ்மனதில் பதிவுகளாகும். சலிப்பான கோபம் - இயலாமையின் வீர்யம். அதுதான் கனவில் கையை தூக்க முயற்சித்து தோல்வியடையும் உணர்வைக் கொடுக்கும்.
(நான் கையை தூக்க முயற்சிக்கிறேன் ஆனால் முடியவில்லை-கனவினூடே வரும் உணர்வு)

இந்த ஆழ்மனக் கட்டளை எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

கனவில் மிகவும் நெருக்கடியில் உணரும்போது சிறுநீர் கழிப்பது போன்ற காட்சியும் அதில் சுகம் காண்பது போலவும் உணர்வது - அதாவது தவிப்பு வரும்போது அழுத்தங்கள் வெளியேறினால் சுகம் வருவதை ஆழ்மனது புரிந்து அந்த உணர்வை வெளிப்படுத்தி சுக உணர்வை கொடுக்க முயல்வது. இதுவே கட்டளை.
உதாரணத்திற்கு - ஒருவர் வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வது போன்ற கனவு காண்பதில் இருந்து அவரது இலக்கு வீடு கட்டுவதோடு முடிந்து விட்டதாகவும் வீடு கட்டி குடி புகுந்த பிறகு அந்த வீட்டில் சுமூக உறவினர்களுடன் மகிழ்வாக வசிப்பது வரை ஆழ்மனக் கட்டளை பதியப் படவில்லை என்றும் பொருள் கொள்ளலாம். அதானாலேயே வீடுபுகு மனைவிழாவிற்கு பிறகான நிகழ்வுகள் மகிழ்வு தருவதாக இல்லை என்று அவர் வருந்துவதை காணலாம்.

ஆழ்மனக் கட்டளை என்பாது வாழ்வின் நிகழ்வுகளை தானாக இயல்பாக (அனிச்சையாக) எதிர்கொள்ளும் "பிரசன்ஸ் ஆப் மைண்ட்" என்று சொல்லிப் புரிய வைக்கலாம். உதாரணத்திற்கு அடுப்படியில் குக்கர் விசில் அழுத்தத்தால் தூக்கி எறியப்பட்டு சோறு அது வழியே பீச்சி அடிக்கும் போது அங்கிருந்து தப்புவதே சிறந்த வழி என்பதை அரை நொடியில் உணர்ந்து அடுப்படியை விட்டு தாவி காயமின்றி வெளியேறுவது ஆழ்மனக் கட்டளை. மாறாக அங்கேயே நின்று என்ன நடந்தது என்று சுதாரிப்பதும் பிறகு நீராவியால் காயப்படுவதும் ஆழ்மனது பக்குவப்படவில்லை என்று கூறலாம்.


இப்போது கற்பனையை புரிந்து கொள்வோம். இந்த கற்பனைதான் நினைவுலக கனவு என்பது. யாராவது நமக்கு திடீரென்று வாழ்த்து சொல்லி பரிசு கொடுப்பார்கள் என்பது கற்பனையே. இன்று நடை வழியில் இருந்து ஆயிரம் ரூபாய் கண்டெடுப்போமா என்று யோசிப்பது கற்பனையே. பத்து ரூபாய் கொடுத்து குளிர்பானம் வாங்கி குடித்த பிறகு கடைக்காரர் ஐம்பது ரூபாய்க்கு சில்லறை கொடுத்தால் நல்லதே என்பதும் கற்பனையே. இது போல பயங்காட்டும் கற்பனைகள், வருந்த வைக்கும் கற்பனைகள், சோர்வுற வைக்கும் கற்பனைகள், மயங்க வைக்கும் கற்பனைகள், அதிக விருப்பம் தரத் தூண்டும் கற்பனைகள், என பலவகைக் கற்பனைகளை விவரித்துக் கொண்டே இருக்கலாம். இவை நமது தர்க்க மூளை மண்டலம் நமது பட்டறிவுகள் (அனுபவங்கள்) மற்றும் இதர பல உணர்வுகளால் எண்ணங்களை தோற்றுவிக்கத் தூண்டி உலா வருபவை.

இவற்றின் கலவையால் தூண்டப்படும் நகரும் ஓவியமே கனவு. அதாவது ஆழ்மனது, கற்பனை, மற்றும் இவற்றின் கலவையோடு ஏற்படும் சுற்று சூழலின் தற்காலிக தாக்கமே கனவு. அதாவது, தூங்கச் செல்லும் முன் உற்சாக உடலும் மனமும் இருப்பினும் எப்போதோ காலையில் ஏதோ ஒரு நிமிடத்தில் நடந்த ஒரு நிகழ்வு எண்ண அலைகளில் வந்து போவது அல்லது தற்போது யதார்த்தமான சின்னத்திரையில் கண்ட ஒரு காட்சி, வசனம் ஆகியவற்றின் நொடிப்பொழுது தாக்கம், கனவில் பிரதிபலிக்கலாம். மீன்கள் துள்ளித் திரியும் காட்சி கண்ட பின்பு தூங்கச் செல்லும் போது அந்த மீன்களுடன் பாம்பைக் கற்பனை செய்யும் மூளைமண்டலம், ஆழ்மனதின் சோர்வையும் கலந்தால், வரும் கனவுகள் பிரச்சினைகளுக்கு ஊடே ஒருவர் ஓடித் திரிவதாகவும் அதில் எதிர்வரும் தெள்வில்லாத ஒரு உதவியை தவறவிடுவதாகவும் கனவு காண நேரிடலாம்.

இந்த கோர்வையை புரிந்த பிறகே கனவுகளின் பலன்களை, பலிதங்களை அறிய, புரிய முறபடுவது நல்லது. அப்போதுதான் தெள்வு பிறக்கும்.

தமிழ் தந்தவர் அகத்தியர் என்றால், தமிழ் 20 ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்றால், பௌத்தமும் சமணமும் அவர் காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லைதானே? பௌத்தமும் சமணமும் சில நூற்றாண்டுகளாகத்தானே, அதாவது அசோக காலத்திற்கு சற்று முந்திதானே பிறந்த்தவை. பிறகு அவைகளைப் பற்றி இந்த அகத்தியர் எப்படி பாடினார்? அல்லது பௌத்தம், சமணம் பிறந்த போதுதான், அகத்தியர் வாழ்ந்த காலம் என்றால் தமிழ் அப்போது தான் பிறந்ததா என்ன?

இப்போது குழப்புவது யார்?

என் சிதையின் வெப்பத்தில்
குளிர் காய நினைத்த உனக்கு
ஏமாற்றம் தர எண்ணி
நான் இந்த கல்லறைப் போர்வையை
போர்த்திக் கொள்ளவில்லை!
உனது மவுனராகம்
என்றாவது ஒரு நாள்
தனது விரதத்தை முடிக்கலாம்
அப்பொழுது நீ என்னை உணர்ந்து
என் சுய தரிசனம் காண
என்னை தேடி வரலாம் என்ற தவறான
எதிர்ப்பார்ப்பிலும் அல்ல!

உன் வெறுப்புப் பொறி என் நினைவுகளை
சுட்டெரித்த பிறகு
இந்த நெருப்பிற்கு என்ன வேலை
என் உடலை எரிப்பதற்கு?
குறைந்த பட்சம் இந்த மண்ணாவது
அரவணைக்கட்டுமே என்ற எண்ணத்தில்தான்
என் உடலை
இந்த மண்ணின் கைகளில்
நான் தத்துக் கொடுத்தேன்!


மங்காத்தா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே