மயில்வாகனன்- கருத்துகள்

பெண்களும் ரௌத்திரம் பழகுவதை வணங்குவதா? இல்லை அவர்களை ரௌத்திரம் பழக்கச் செய்த எடப்பாடி மக்களுக்கு சேலையை அனுப்புவதா??? யாம் அறியேன் பராபரமே.....

அவரிருந்த நாட்களில் தாயை புகழ்ந்தால் அவள் நாணுவாள், ஆனால் தந்தையை புகழ்ந்தால் அவள் ஆர்ப்பரிப்பாள்.. அதனால் "என் தந்தையின் நாடு என்று தன் தாயை" ஆர்ப்பரிக்க வைத்திருப்பாரோ ??????????

இருப்பினும் அவள் போகமாய் போகாமல். தாகமாய் என்னுள் வாழும் "நயங்கெட்ட இடத்தில் மேயாதா கவரி மான்"

- சாரலனின் பதிலில் அவர் விட்டுவிட்ட வரிகள்

உங்கள் கை தட்டச்சை விடுத்து உங்களுக்கு உண்மையில் உதவி செய்தால், "நாங்கள் நலம்" :)

"மஞ்சள் மனிதர்களின் வணிகங்கள்.. "... சீனத்தில் தயாரான தட்டச்சு, அமெரிக்காவில் தயாரான மென்பொருள், கறுப்பர்களின் கடலைத்தாண்டி வரும் இங்கு ஒருவர் "yellow" என்று சொல்வதற்கு :)

Man dominated and then he brought in manly shiva to pray. He then was surprised with the creations, concluded only a person with 4D view can make it and then came brahma. He then cursed the one for bringing I challenges in his life and then the director Vishnu came. A married man then needed a break, and that is when he introduced Shakthi as shiva's wife to keep his wife engaged. And then all gods had wife. The gods got kids when he had one as well. And then people worshiping one family of gods met the others who had a different family handy. They started fight. Some made wealth with believers and some made it with non believers. And then came science. It wowed people and made our kids to carry ton of books behind and ton of loans to offer them that. And now we pray the gods to get our child good score from the books science offers. 🤔😂😂😂😂😂😂😂 now why don't our god's kids go to schools as well 👀🤔🤔

பாதை தவறினாலும் அவள் இன்றும் கண்ட இடத்திலும் "மேயாத மான்"

வையகக் கவி அல்லவோ பாரதி???? நாடென்று இந்தியாவை சொன்னாரா? அல்லது தமிழகத்தை சொன்னாரா? உலகத்தையே நாடாக்கினாரா???????

மன்னிக்கவும்... மனிதர்களுக்குத்தான் நான் பிறந்தேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கும் வரை "பிறப்பால் நான் மனிதனே", நான் யார் என்று அடையாளம் காட்ட எனக்கு சுதந்திரம் வேண்டாம், அதுவே ஆகின், 1947க்கு முன் என் தாத்தாவை யார் அடையாளம் காட்டியிருக்கக்கூடும்????? என் குணம் இந்த இனத்திற்கு ஒப்பாத போது நான் மனிதனல்லாதவன் என்றாகிறேன் அவ்வளவுதான்.... ஆனால் என் குணம் பெரும்பாலும் என் கையில் என்றாலும், சில நேரங்களில் என் குணத்தை மற்றோரு மனிதன் தீர்மானிக்கிறான், அப்போது எனக்காக என் குணத்தை மாற்றினேனா அல்லது என் சக மனிதருக்காக என்னை மாற்றினேனா என்பதில் தான் நான் மனிதனாக உணரப்படுகிறேனா என்பது ஒழிந்துள்ளது.... இறக்கிவிட்டதால் சுதந்திரத்தை தேடிய காந்தியும், ஏற்றிவிட்டதால் கடைசிப்படிகளையம் ஏறிவிட துடித்த சுபாஷும் தான் இதற்கு உதாரணம்....

அவன் செய்தான், இவன் செய்ய தூண்டினான்... இதுவே நியாயம். குடும்பம் காக்க கொலை செய்தவனும், லஞ்சம் வாங்கியவனும் நியாயவான் இல்லை என்ற சமூகத்தில், தான் தவறு செய்து தன தாயை இழிவானவள் ஆக்கியவனும் நியாயவான் இல்லை... நம் தரம் நம் முன் யார் என்பதிலோ அல்லது யாரை நம் முன் நாம் வைத்துள்ளோம் என்பதை பொறுத்தே

இதுவே உங்கள் மனதின் எண்ணமெனின் நீங்கள் 100% நல்லவரே சகோ, அதை நடைமுறைப்படுத்துவதில் நீங்கள் வல்லவரானால்.....

நீர் வேணுமுன்னு குடங்களுடன் போராடும் பெரும்பாலனவர்கள் இங்கு "சீட்டு" சேர்த்தாவது "முன்னாள் குளத்தில்" வீட்டு மணை வாங்கியவர்கள்தான். தண்ணீர் தேடிவரும் மிருகங்கள் வீடுகளை தாக்குவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் அதே மிருகக்குடும்பம் அந்த இடத்தை மீண்டும் தாகுவதில்லை என்பது யாருக்கு தெரியும்??? அதேப்போல் தான் நீறோட்டம் இங்கு மாறியுள்ளது, ஏரியை தேடிய வெள்ளம் வீடுகளால் மலைத்துள்ளது... அதன் புதிய பாதையை கண்டுபிடித்தாலே போதும்.....

பெரும்பான்மையானவர்களை கெட்டவர்களாக பார்ப்பதனால்

யாருக்கு என்பதே... உங்களுக்கு உங்களை என்றால் "உள்ளே உருத்தல் இல்லையென்றாலே போதும்", அனைவரும் என்றால், உங்கள் கண்களுக்கு பார்க்கும் அனைவரையும் நல்லவராக பார்க்க முடிந்தால் 100% முடியும் உங்களால்.....

மகனின்/மகளின் செய்கை தாயின் நடத்தையில் வந்தடைகிறது.. சரி தவறு விவாதம் வேண்டாம், ஆனால் "ஏன் இது சொல்லப்பட்டது?" என்ற கேள்வியின் ஆழ்ந்த பதில் "நான்தான்" என்றே முடியும்.

என் உரிமை நீ - என்று அன்பை பொழியும் ஆண்களும் இங்கு உண்டு. உன் உடைமைக்காகவே நான் என்று - வெட்டி எறியும் பெண்களும் இங்கு உண்டு. பெண்ணுரிமை பற்றிய பேச்சுகள், இங்கு உண்மையில் பெண்கள் ஓட்டுக்காகவே முளைக்கும் அங்கங்கு, அவ்வப்போது. நமக்கெதுக்கு இது. மனித உரிமை பத்தி பேசுங்களேன்.

மக்கள் பெரும்பாலும் திரையரங்கில்தான் உள்ளார்கள், அதனால்தான் அலுவலகம், வயல்வெளி, கல்வி நிலையங்கள் இதையெல்லாம் விடுத்து திரையரங்கை குறிவைக்கிறது உச்ச நீதிமன்றம், தேசப்பற்றை வளர்க்க. தன் பலத்தை காண்பிக்க அதற்கு ஒதுவே வழி என்று தோன்றியிருக்கலாம். மேலும் விரைவில், மதுக்கடையில் கூட, தேசியகீதம் பாடிவிட்டே குவாட்டர் வாங்க முடியும் என்று தீர்ப்பு வரலாம். (வழக்கு தொடர்ந்தால்). என் தேசம் ஒளிமிக்கதுதான், என்ன செய்ய எங்களை ஆளும் மக்களின் கண்களில் அது இல்லையே.

தோழா, இந்த கேள்விக்கான விடையை நான் தனியாக பதிவு செய்கிறேன், நீதிமன்றம் ஆளும் அரசுக்கு செயல்படாவிட்டால், ஊழலுக்கு உடனடியாக சிறையில் தள்ளப்பட்ட ஜெயலலிதாவும், கொலைக்கு உடனடியாக ஜாமினில் (சிறைக்கே செல்லாமல்) விடப்பட்ட சல்மானும், எப்படி சமம் சட்டத்தின் முன்? கொலைக்குற்றவாளி, ஊழல் குற்றவாளி என்பதை கடந்து நீதிமன்றங்களும் விளம்பரத்தை தேடும் காலம் இது என்பதைதானே இது காட்டுகிறது????

மது ஒழிப்பு அவரவர் வீட்டில் இருந்து ஆரம்பமாக வேண்டும், கருப்புப்பண ஒழிப்பு அரசாங்கத்தில் இருந்து ஆரம்பமாக வேண்டும், இரண்டும் எப்படி ஒன்று?????


மயில்வாகனன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே