சேர்த்தவர் : KS.Kalai, 16-Jan-15, 1:00 am

தைப்பொங்கல் கவிதை திருவிழா

தைப்பொங்கல் கவிதை திருவிழா போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

வணக்கம் தோழர்களே....

மீண்டுமொரு புத்தாண்டின் வருகைக்காக காத்திருக்கும் தோழர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்...
வருடாவருடம் அண்ணன் நிலாசூரியனின் அர்ப்பணிப்பிலும் அக்கறையிலும் விளைந்த “தைத்திருநாள் கவிதைத் திருவிழா”வினை இம்முறை ஏற்று நடாத்தும் பொறுப்பினை ஏற்றிருக்கிறேன். பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இயந்திரமாய்ச் சுழலும் உலகில் சொற்ப நேரத்தைக் கூட ஒதுக்கிக் கொள்ள முடியாத சூழலில் நின்று இந்த போட்டியினை நடாத்த தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

போட்டிகளில் தோழர்கள் பலரும் கலந்துக் கொள்வதோடு, சக தோழர்களை இணைத்துக் கொள்ளவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரச்சினைகள், சிக்கல்கள் இல்லாமல் இந்தப் போட்டியினை நடாத்த தங்களின் பேருதவியை எதிர்ப்பார்க்கிறோம்.

மூன்று தலைப்புகள் படைப்புகளை ஆக்குவதற்காக வழங்கப் பட்டுள்ளன. தலைப்புகளை தெளிவாக உள்வாங்கி சமுதாய எழுச்சியையும் விழிப்புணர்வையும் நோக்காக கொண்டு படைப்புகளை உருவாக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

ஒவ்வொரு தலைப்பிலும் வெற்றிப்பெறும் படைப்புகளுக்கு பணப்பரிசில்கள் உண்டு.(பரிசு தொகை இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும். ஆகக் குறைந்த பரிசுத்தொகை 6000(ஆறாயிரம்) இந்திய ரூபாய்கள்)

பெருவுள்ளம் கொண்டு பரிசுகளை வழங்க முன்வந்துள்ள நலன்விரும்பிகள் குறித்த விபரம் மற்றும் நடுவர்கள் விபரம் போட்டி முடிவுகளுடன் சேர்த்து அறிவிக்கப்படும். இவர்களுக்கு எங்களின் முற்கூட்டிய நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம்.

உயரிய எண்ணங்களுடன் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

கவிதைப் போட்டிக்கான தலைப்புகள்
``````````````````````````````````````````````````````
• சாதி ஒழி ! மதம் அழி! சாதி !
• நாளைய தமிழும் தமிழரும் !
• இப்படி நாம் காதலிப்போம் !

நிபந்தனைகள்
`````````````````````
1.படைப்பை பதிவிடும்போது தவறாமல் தலைப்போடு அடைப்பு குறிக்குள் “பொங்கல் கவிதை போட்டி 2015” என்று குறிப்பிடல் அவசியம்.

2.சனவரி முதலாம் திகதி முதல் சனவரி (2015) பதினைந்தாம் திகதி நள்ளிரவு வரை நீங்கள் உங்கள் படைப்புகளைப் பதிவிடலாம், அதன் பிறகு பதிவிடும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

3.கவிதைகள் 24 வரிகளுக்குள் இருத்தல் வேண்டும். 24 வரிகளுக்கு மேற்பட்ட படைப்புகள் முதல் சுற்று தேர்விலேயே நிராகரிக்கப்படும்.

4.ஒழுங்கீனமான, ஆபாசமான, தரக்குறைவான சொற்பிரயோகங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

5.எழுத்துப் பிழைகள் தவிர்க்கப்படல் வேண்டும்.எழுத்துப் பிழைகளால் படைப்புகள் நிராகரிக்கப்பட வாய்ப்புண்டு ! பிறமொழிக் க்லப்பையும் தவிர்த்தல் அவசியம் !

6.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரு கவிதை மட்டுமே பதிவு செய்ய வேண்டும், ஒரே தலைப்பில் ஒன்றிற்கு மேல் பதிவு செய்யப்படும் கவிதைகளை நடுவர் குழு நிராகரிக்கும். (மூன்று தலைப்புகளிலும் தலா ஒரு கவிதை வீதம் எழுதலாம்.)

7.படைப்புகள் “பொங்கல் கவிதைப்போட்டி 2015” என்று அடைப்புக்குள் குறிப்பிடப்பட்டு தளத்தில் வழமையைப் போல பதிவு செய்யப்படுதல் வேண்டும்.
மேலும், போட்டிக்கு சமர்பிக்க என்ற இருக்கும் இடத்தில்
"மற்ற போட்டிகளுக்கு சமர்ப்பிக்க" என்ற விடயம் தெரிவு செய்யப்பட்டு பதிவேற்றப்பட வேண்டும் !

8.அதே படைப்பினை “பொங்கல் கவிதைப்போட்டி” என்ற பெயரில் இருக்கும் கணக்கிற்கு விடுகை மூலம் அனுப்பப்படல் வேண்டும்.தளத்தில் பதியப்படும் போது, அவற்றை தொகுத்து எடுத்துக் கொள்வதில் உள்ள சிரமம் காரணமாக இவ்வாறு “பொங்கல் கவிதைப்போட்டி” என்ற கணக்கிற்கு விடுகைச் செய்ய கேட்கப் படுகிறீர்கள்.

9.அனுப்பப்படும் படைப்புகளுக்கு தானே முழு உரிமையாளர் என்ற உறுதிப்படுத்தலுடன், தமது பெயர், வயது, வதிவிடம், நாடு மற்றும் அழைப்பிலக்கம் போன்றவற்றை படைப்புடன் இணைத்து விடுகை செய்தல் வேண்டும்.(கட்டாயமானது)

10.படைப்பின் இணைப்பை மட்டும் விடுகை செய்தல் தவிர்க்கப்பட வேண்டும். இணைப்பை (வெப் லிங்க்) மட்டும் அனுப்பப் படும் படைப்புகள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.

11.சமுதாய எழுச்சியையும் விழிப்புணர்வையும் மட்டுமே நோக்காகக் கொண்டு உயரிய சிந்தனையில் படைப்புகள் உருவாக்கப்படல் வேண்டும் !

12.தளத்தில் பதிவிடப்படும் போது சக படைப்பாளிகளால் வழங்கப்படும் கருத்துகள், புள்ளிகள், மதிப்பெண்கள் மற்றும் பகிர்வுகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

13. எழுத்து தளத்தின் உறுப்பினர்கள் மாத்திரம் பங்குபற்ற முடியும்.உறுப்பினர் இல்லாத படைப்பாளிகள் தளத்தில் கணக்கொன்றினை ஆரம்பித்து படைப்புகளை அளிக்கலாம். (போலி கணக்குகள் மூலம் பதிவிடப்படும் படைப்புகள் நிராகரிக்கப்படும்)

13.மூன்று சுற்று தேர்வுகள் நடைபெறும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

14.சனவரி மாத இறுதியில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

பரிசு விவரங்கள்

விரைவில் அறிவிக்கப்படும்

ஆரம்ப நாள் : 01-Jan-2015
இறுதி நாள் : 15-Jan-2015  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 30-Jan-2015

தைப்பொங்கல் கவிதை திருவிழா போட்டி | Competition at Eluthu.com



மேலே