எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் உண்டு... அதை...

எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம் உண்டு... அதை இன்று கேட்டு விடுகிறேன்...

இது யாரையும் குறிப்பிட்டு கேட்கப்பட்ட கேள்வி அல்ல... பொதுவாக கேட்கப்பட்ட கேள்வியே...

ஊருக்குள் இருக்கும் மிக பிரபலமானவர்கள் யாரேனும் ஏதேனும் ஊருக்கோ ஜனங்களுக்கோ நன்மைகள் செய்தால் , அது ஒரு விளம்பரத்திற்காக மட்டுமே செய்கிறார்கள் என்று நாம் அவர்களை சொல்கிறோம்...

உண்மையில் , நாம் அனைவருமே எதோ ஒரு வகையில் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த நன்மைகளை செய்து கொண்டு தானிருக்கிறோம்... அவர் அவர்களால் எந்த அளவு முடியுமோ அந்த அளவு...

இப்படி இருக்க , ஒரு வேளை , நம்மில் யாராவது ஒருவரோ அல்லது பலரோ திடிரென்று ஊர்ப் புகழ் உலகப் புகழ் அடைந்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.. அதன் பிறகு அப்போது இருக்கும் வசதி வாய்ப்புகளுக்கு தகுந்த படி இன்னும் பெரிய அளவில் நன்மைகள் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்... அதன் பிறகும் நாம் இதற்கு முன் செய்து வந்த நல்ல விஷயங்களை இன்னும் பெரிய அளவில் தொடர்ந்து செய்து வரும் வேளையில் , நம்மையும் , விளம்பரத்திற்காக தான் செய்கிறோம் என்று தான் மற்றவர்கள் சொல்லுவார்களா......

அப்படி மற்றவர்கள் நம்மை சொல்லும் வேளையில் நம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா..


- கிருத்திகா...

நாள் : 30-Oct-14, 4:14 pm

மேலே