கருவிலேயே கணிதத்தை கற்று-இந்த நானிலம் அறியா சூத்திரங்களை சுலபமாய்...
கருவிலேயே
கணிதத்தை கற்று-இந்த
நானிலம் அறியா
சூத்திரங்களை
சுலபமாய் செய்து -தன்
சுக துக்கங்களை மறந்து
வாழ்நாளெல்லாம்
கணிதத்தையே நினைந்து
உலக அரங்கில்
இந்தியாவை
திரும்பி பார்க்க வைத்த
கணிதனின் பிறந்தநாள் இன்று!
தமிழனாய் பெருமை கொள்வோம் -அந்த
"கணிதனை" நினைத்து!