என் செந்நீரில் ஆசுவாசம் ஆகட்டும் உன் உயிர் !!........
என் செந்நீரில் ஆசுவாசம் ஆகட்டும் உன் உயிர் !!.....
-------------------------------------------------------------------
மாதுளை நீ எனில்!
அதன் விதை உன் உயிர்...
நான் !
என் செந்நீரை ...
உன் உயிரின் மேல்
ததும்பத் ததும்ப
உருக்கி ஊற்றிவிட்டேன்...
எந்த கனிக்கும்
இல்லாத சிறப்பு
மாதுளைக்கு மட்டுமே!
உண்டு...
அதை விதையோடு தான்
உண்ண முடியும்...
என் ஜீவநதியே...
என் உயிரே...
என் அமுதே...
உன்னையும் என்னையும்
எவராலும் எந்த
சிறுபொழுதும்
பிரிக்க முடியாது...
நீயும் நானும்
சேர்ந்ததே
இந்த
சிவப்பு முத்துக்கள்...
இதை மாதுளையும் அறிய வேண்டாம்!
அந்த மாதவனும் அறிய வேண்டாம்!
நீ மட்டும் உணர்ந்தாலே போதும்...