எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தளம் தினமும் ஒரு பயனுள்ள விஷயமாக ஆக்கப்பூர்வ...

எழுத்து தளம் தினமும் ஒரு பயனுள்ள விஷயமாக ஆக்கப்பூர்வ செயலாக உணரப்படுவதில் மிகுந்த உற்சாகம் தருகிறது.

கவிதைகள் சரம் சரமாய் இலக்கிய ரசனை, ஆனந்த பெருக்கு, மனக்கிலேசம் என்று தாலாட்டுகிறது. (அவ்வப்பொழுது கல்லூரிச்சாலையில் காகிதப்பூக்கள் மட்டும் காதல் காதல் என்று மிளிர்கின்றன; அவை கவிதை உலகின் வாயிற்படியாக அமையும் வரை புதிய கவிஞர்களுக்கு வரவேற்பு அளிப்பதில் தவறில்லை. ஆனால் கவிதை வடிவில் இன்னும் ஆயிரம் ஆயிரம் எண்ணங்களை வெளிப்படுத்த எல்லோரும் முயல வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்.

களவாடி பதியும் கவிதைகளுக்கு தணிக்கை முறையில் சீர்படுத்தினால் ஆக்கப்பூர்வமாக இருக்கும்.

கதை, கட்டுரை, நகைச்சுவை - பகுதிகள் நூலகம் சென்று சுவைக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவது இத்தளத்திற்கு மெருகு சேர்க்கிறது.

அரிய  செய்திகளை அனைவரும் பகிர்வோம், அறிவை பெருக்கி ஆனந்தம் அடைவோம்!.

      

பதிவு : செல்வமணி
நாள் : 25-Dec-15, 8:40 pm

மேலே