1976-BHARATHA RATHNA :Vikatan · #கர்மவீரர் #காமராஜர்...
1976-BHARATHA RATHNA :Vikatan · #கர்மவீரர் #காமராஜர் #எளிமை'' 'அவர் இறந்தபோது அவரது வீட்டை வீட்டு உரிமையாளர் எடுத்துக்கொண்டார். அவரது காரை காங்கிரஸ் கட்சி எடுத்துக்கொண்டது. அவரது உடலைப் பூமி எடுத்துக்கொண்டது. அவரது பெயரை மட்டும் வரலாறு எடுத்துக்கொண்டது' -
'காமராஜர் ஒரு சகாப்தம்’ நூலில் கோபண்ணா எழுதிய வரிகள் இவை."** 'பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!'
**கார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி அலுவலகத்துக்கு வந்தார் காமராஜர். டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி உதவியாளரிடம் கூறி விட்டு,தன் அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார். உதவியாளர் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து இரசீது பெற்றுக் கொண்டார்.அன்றைய வரவு செலவினைச் சரிபார்த்த காமராஜர், டாக்சிக்கு கொடுத்த பணம் அதிகம் என உணர்ந்து உதவியாளரைச் சாடினார்."டாக்சி மீட்டர் எவ்வளவு ரூபாய் காட்டியது என்று பார்த்தாயா?" - காமராஜர்."டாக்சி டிரைவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன் ஐயா.""நீ மீட்டரைப் பார்த்து, அதன் படிதானே பணம் தர வேண்டும்? மீட்டரைப் பார்க்காமல், டாக்சி டிரைவர் கேட்ட ரூபாயை நீ கொடுக்கலாமா? இது பொதுப்பணம் இல்லையா? அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்ன்னு, பொது மக்கள் கிட்ட வசூலிச்ச பணத்தை நாம நெருப்பு மாதிரிக் கையாளணும். சிக்கனமாகச் செலவழிக்கணும். கட்சிப் பணத்தை, காமராஜர் தன் இஷ்டத்துக்குச் செலவு பண்ணி, வீணாக்கிட்டார்னு குற்றச்சாட்டு வரக் கூடாது," எனக் கூறினார்..
எனக்கு முகநூலில் வந்த செய்தி.: படிக்க & பகிர்க