எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீரிறைத்தாலும் பாலை சோலையாகாது ! நிமிர்த்தினாலும் நாய்வால் நிலைமாறாது...

நீரிறைத்தாலும் 
பாலை சோலையாகாது !
நிமிர்த்தினாலும் 
நாய்வால் நிலைமாறாது !
இமைமூடினாலும் 
வழியும்கண்ணீர் நிற்காது !
இதயம்நின்றால் 
பிரிந்தவுயிர் திரும்பாது !
வற்றியகுளத்தில் 
மீன்பிடிக்க இயலாது !
உடைந்திட்ட நட்பும் 
ஒன்று சேராது !
தூற்றிய உள்ளங்களுக்கு 
போற்றிடத் தோன்றாது !

பழனி குமார்   

நாள் : 29-Jul-16, 4:17 pm

மேலே