எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உயர்ந்தவர்கள் தமிழர்களே ************************ மொழி, மத வேறுபாடுகளைக் கடந்து...

உயர்ந்தவர்கள் தமிழர்களே

************************
மொழி, மத வேறுபாடுகளைக் கடந்து இந்தியர் அனைவரையும் நமது உடன்பிறப்புகளாகக் கருதும் உயர்ந்த பண்பு  நமக்கு உண்டு.
####
மலையாளிகளான திரு. எம்ஜிஆர், அவரது மனைவி திருமதி. ஜானகி அவர்களையும் தமிழக முதலமைச்சர்களாக்கி பெருமைப்படுத்தினோம். இங்கு பிழைக்க வந்த       கன்னட        மராட்டியரான சிவாஜி ராவை ரஜினி காந்தை சூப்பர் ஸ்டார் ஆக்கி கோடீஸ்வரர் ஆக்கினோம். நம்மில் பலர் அவரையும் இதர முன்னாள் இந்நாள் நடிகர் நடிகைகளை இதய தெய்வங்களாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
@@@###
நதி நீர் பிரச்சனையில் நமது அன்னைத் தமிழின்றி ஒரு வாக்கியத்தைக்கூட பேசவோ எழுதவோ முடியாத மொழிகளான

           கன்னடம், தெலுங்கு, மலையாளகளைப் பேசுவோர் நடந்து கொள்ளும் முறை கண்டனத்துக்கு உரியது.
@##@@##
என்றுமே நாம் வன்முறைக்கு இடம் தரமாட்டோம். அய்யன் திருவள்ளுவர் வாழ்ந்த மண் இது.
@@@
தமிழர்களின் பெரிய குறை: நம்மில் பலருக்கு தாய்மொழிப் பற்றில்லை. இந்தியாவில் பெரும்பலான மக்களால் பேசப்படும் ஒரே செம்மொழி தமிழ் மட்டுமே. இருப்பினும் தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்ட நம்மில் பெரும்பாலோர்க்கு ஆர்வமில்லை.      பிற மாநில மக்கள் நம்மைக் கேவலமாக நினைக்க இது ஒன்றே போதும்.            மொழிப் பற்று இல்லாததால் கன்னடர்கள், தெலுங்கர்கள்&மலையாளிகளிடம் நிலவும் மொழி சார்ந்த இனப் பற்றும்     நம்மிடம்         கிடையாது. 
##@@@@@@
இனியாவது தமிழர்கள் திருந்தி ஒற்றுமையைக் கற்றுக்கொளாள முன்வரவேண்டும். நமது நலனை    காத்துக்கொள்ள. பிறருக்கு கேடு செய்ய அல்ல. 
########
யாதும் ஊரே, யாவரும் கேளிர். இதுவே நமது உயர்ந்த பண்பாட்டிற்கும் பரந்த மனப்பான்மைக்கும்  தக்க சான்று.

பதிவு : மலர்91
நாள் : 14-Sep-16, 8:48 am

மேலே