எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இளைஞனே !!! இளவல் இதயங்களே பசுமை கண்ட புதுமைகளே...

இளைஞனே !!! 


இளவல்  இதயங்களே
பசுமை கண்ட புதுமைகளே
பாசம் கொண்ட பதுமைகளே

ஒரு நேசம் பேசும்
உணர்வை கேளீர்
உயர்வாய்  வாழ்ந்திட வாரீர்

பார்வை மொத்தமே
புதுமை பயணம் காணும்
பார்க்கும் எதுவுமே சொந்தம் கேட்கும் மனமாகும்,

நித்தம் நாளும் நிலை
மாறும் நினைவை காண்பாய்
எதுவும் உண்மை ஆகாது

செத்தும் உடலும்
அழகாய் தோன்றும் சிறு மதி
கொண்டவன் இளைஞன் தானே

மாற வேண்டும் மனதில்
என்றும் உறுதி வேண்டும்
மயங்கா மனமே கேளாய் தினமும்

வாழ்க்கை பயணம்
ஒரு நாள் வாழ்வே மாயம்
தீர்க்கும் நிலையை நினைப்பே பெரிது

யார்க்கும் வணங்கா 
இருமாப்பு கொண்டால் - மனதில் 
பார்க்கும் யார்க்கும் சிறிதாய்  போவோம்...,

இளைஞா  விழித்திடு
கடமை  உண்டு  நடை போடு...,

                       - கலைவாணன் .

பதிவு : கலைவாணன்
நாள் : 6-Dec-16, 1:30 pm

மேலே