எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உடைந்து வரும் பிம்பங்கள்…!! அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஆட்சியாளர்கள், மன்ற...

                    உடைந்து வரும் பிம்பங்கள்…!! 



அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஆட்சியாளர்கள், மன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் சட்டம் நிறைவேற்றுகிறார்கள். அவர்களே அதனை மீறுகிறார்கள். சட்டசபையில் கலவரம் கலாட்டா செய்கிறார்கள். ஊழல் லஞ்சம் என்று பல்வேறு குற்ற செயல்பாடுகளால் தண்டனை பெற்றும் சந்தோஷமாக உலா வருகிறார்கள். ஜாமினில் வெளியே வந்துவிடுகிறார்கள். இவர்கள் தான் சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கிறார்கள் என்பதை என்னும்போது வெட்கமாகவே இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் அக்காட்சிகளை ஊடகங்களில் காண்கிறார்கள். வாக்காளர்களாகிய அவர்கள் மனதில் என்ன மாதிரியானதொரு பிம்பம் உருவாகும் என்பதை எண்ணிப் பார்ப்பதே இல்லையோ? எப்படியும் பணம் இலவசப் பொருள்கள் அள்ளிவீசியால் /  கொடுத்தால் வாக்களிக்கப் போகிறார்கள் என்ற மனோபாவத்தில் தான் இத்தனையும் செய்ய முயல்கிறார்கள். இதையே தான் சுழற்சி முறையில் எல்லா கட்சிகளுமே செய்து வருகின்றன. இப்படியே எல்லா காலத்திற்கும் தொடர்ந்து செய்துக் கொண்டிருக்க முடியுமா? மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பாடுவதற்கான வாய்ப்பே இல்லையா? “ அரசியல்வாதிகள் தான் மக்களை நன்கு பரிந்துக் கொண்டு ஏமாற்றுகின்ற தந்திரசாலிகள் ” என்று அறிஞர் ஒருவர் சொன்னக் கணிப்பைப் படித்தது நினைவுக்கு வருகிறது. எந்தவொரு மனிதனும் அரசியல் சார்ந்துதான் வாழ வேண்டியிருக்கிறது. நான் எந்த அரசியலும் சார்ந்தவனில்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது? சொல்லவும் மாட்டார்கள்.  அதற்காக அரசியல் செய்பவர்கள் எதை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று அர்த்தமில்லை. அதை அரசியல் நாகரீகத்தோடு செய்தால் யாரும் வரவேற்பார்கள். மன்னிப்பார்கள். அரசியல்வாதிகள் மீது வெறுப்பு என்பது ஏற்பாடாது. அச்செயல்பாடுகள் நல்லெண்ணத்தைப்  பெறவே உதவிபுரியும். இன்று தமிழகத்தில் நடைபெற்று வரும் அவலக்காட்சிகளும், அரசியல் செயல்பாடுகளும் எதிர்கால இளைய சமூதாயத்திற்கு ஆரோக்கியமான அரசியல் தளத்திற்கு, இக்காரியங்கள் விதைகளாக விருட்சமாக அமைந்திடுமா? உதவிடுமா? என்பதை யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில் நடந்த மெரினா தைப்போராட்டம் எதனை உணர்த்துகிறது என்று ஆய்வு செய்துப் பார்க்க வேண்டும்.   ந.க.துறைவன்.       

பதிவு : துறைவன்
நாள் : 20-Feb-17, 12:10 pm

மேலே