எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த பாடல் மிகவும் பிடிக்கும் இந்த பாடலுக்கும் நான்...


இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
இந்த பாடலுக்கும் நான் எழுத போகும் எழுத்துக்கும் ஒற்றுமையே இல்லை ....

இரவு வேளையில்
தென்றலோடு இளையராஜா
தாயின் வருடல்
இதமாக ஒரு தூக்கம் தானாக வரும்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


 தொடுதல்
தடுக்கி விழுந்தவனை தூக்கி விடுவது நல்ல தொடுதல்
வழுக்கி விழ  வைக்கும் கெட்ட தொடுதல் மகளே ...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`


அன்பு கணவா
உன்னை அன்றி
வேறு யார் என்னை தொட்டாலும்
நெருப்பை அள்ளி என் மீது  கொட்டுவதற்கு சமம்
என் சாவில் கூட நீ தான் என்னை தொட்டு தூக்க வேண்டும்
உயிரை  விட மானம் பெரியது
உயிர் போனாலும் மானம் தான் பெரியது

உனக்காகவே பிறந்தவள் கணவா
உன்  மடியில் தான்  என்னுயிர்  போக வேண்டும்
உன் பாதத்தில் தான் என்னை புதைக்க வேண்டும்
உன் கையால் என்னை கொல்ல வேண்டும் கணவா
அது என் ஆசை
உன் தோளில் நான் நிரந்தரமாகவும் எப்பொழுதும் துயில வேண்டும்
அது தானே  முறை
நான் நிரந்தரமாய் தூங்குவதை நீ அறியாமல் என்னோடு நிறைய கதைகள் பேச என் உயிர் அதை கேட்டுக்கொண்டிருக்கும் உன்னருகிலேயே
உடலுக்கு தான் இறப்பே தவிர உயிருக்கு இல்லை நம் அன்பிற்கு இல்லை ....
என்னுடனே வந்து விடு கணவா எங்கேயும் ....
நான் இல்லாமல் நீ அவதி படக்கூடாது .....


உனக்கு நான் பாரமாக இருக்க மாட்டேன்
உனக்கு பிடித்ததை நீ செய்ய தடை விதிக்க மாட்டேன் ஒரு காலமும்  சரியென்றால்
உன் நிம்மதிக்காக துடிக்கும் என் இதயத்தையும் நிறுத்துவேன்.....

உன்னை நான் என்றுமே ஏமாற்ற மாட்டேன் உயிர் போனாலும் கணவா
உன் கையில் என்றும்  குழந்தையாய் தவழுவேன்
உயிர் விட்டபின்பும்
நீ எனக்கு இறைவன் கொடுத்த வரம் எனக்கு நீ என்றுமே என் மகிழ்ச்சி
எனக்கு பாரமாய்  ஒரு காலமும் நீ இருக்க மாட்டாய் ....
நான் தான் உனக்கு அதிகம் தொல்லை தருவேன் .....அழவைப்பேன் .....பாரமாவேன் .....
உன் சோகத்தை நான் தாங்குவேன் ....
உன் வெற்றிக்காக , நீ மகிழ்ச்சியாக இருக்க உன்னுடன் போராடுவேன் ....
உன்னை என் மார்பில் சுமப்பேன் .....
யாரிடமும் உன்னை விட்டுத் தர மாட்டேன் .....
உனக்கு உண்மையாக இருப்பேன் .....

நாள் : 5-Apr-17, 10:34 pm

மேலே