எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் மடி மீது சாய்ந்து நான் உறங்க... உன்...

உன் மடி மீது சாய்ந்து

நான் உறங்க...
உன் கைகள் என்​
தலையை வருடி விட....

நீ முத்தமிட- என்
கவலைகள் கறைந்துப் போக
எத்தனை அற்புதம் நீ!!!!

அம்மா- நீ
உணர்வுகளின் மொத்த உருவம்!!!
அம்மா-நீ
            அன்பின் வண்ணம்!!!
            அன்பின் நிறைவு!!!
            அன்பின் நிறைவு!!!
உன்னை விளக்க 
வார்த்தைகளே இல்லைம்மா!!!!

உன் சோகம் மறைத்து
என்னை மகிழ்விக்கும் அன்னையே!!!
உன்னைப் போல் 
யாருண்டு இவ்வுலகில்!!!

வேருக்கு நீராக
இருப்பவள் நீ தானே!!!!
உன் அருமைப் புரியாதோர்
இம்மானுடத்தின் தகுதி அற்றவர்களே!!!

                                           தோழமையுடன்,
                                                சோஃபியா.

பதிவு : சோஃபியா
நாள் : 11-Jun-17, 2:36 pm

மேலே