உன் மொழிகள் கேட்கத்தான் தவிப்பேன். உன் மொழிகள் கண்டு...
உன் மொழிகள் கேட்கத்தான் தவிப்பேன்.
உன் மொழிகள் கண்டு பின் ரசிப்பேன்.
உணர்வுகள் மறந்து நான் இருப்பேன்.
உன் உணர்வால் மீண்டும் நான் பிறப்பேன்.
உறவுகள் அனைத்தும் நான் தவிர்ப்பேன்.
உன் உறவை மட்டும் நான் ஏற்பேன்.
கருமையாய் இருந்த என் நிழல் கூட
உன் பார்வையால் வெளிச்சம் ஆனதே….
காத்திருந்த என் கண்களுக்கு வரமும் இங்கு கிடைத்ததே…..
உன் நினைவால் என்னை நான் துறந்தேன்.
உன் கனவால் காலங்கள் தொலைத்தேன்.
உன்னுடன் நடக்க என் நெஞ்சம் ஏங்கும்
என்னை பிரிந்து உன்னை தொடரும்.
மொழிகள் இன்றி தவிக்கிறேன் உன்னை பற்றி கூற….
மெளனம் மட்டுமே பாஷையாய் தொடர்கிறது
உன்னை நினைக்கயில்….
காட்டாற்று வெல்லத்தில் கரைந்தாற்போல்
கரைந்தேன் உனக்குள்….