எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடனை திரும்ப கொடுங்கள் ஒரு வியாபாரியிடம் நபிகள் நாயகம்...

கடனை திரும்ப கொடுங்கள்


ஒரு வியாபாரியிடம் நபிகள் நாயகம் கடன் வாங்கி இருந்தார். அதைத் திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது.
ஒருநாள் கடைவீதிக்கு தன் தோழர் உமருடன் நாயகம் சென்றார். கடன் கொடுத்த வியாபாரி எதிரே வந்தார். கடனைத் திருப்பித் தராததற்காக வசைமாரி பொழிந்தார்.
உமருக்கு கோபம் வந்து விட்டது. வியாபாரியை அடிக்க போய்விட்டார். நாயகம் அவரைத் தடுத்து நிறுத்தினார். “நண்பரே! நீர் செய்தது கொஞ்சம் கூட சரியில்லை. வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் அவர் என்னை திட்டியது நியாயமே! கடனைக் கொடுக்காத என்னைத் தான் நீர் கண்டித்திருக்க வேண்டுமே தவிர, அவரை அடிக்கச் சென்றது எந்த வகையிலும் நியாயமில்லை,” என்றார்.
உமர் பெருமையுடன் நாயகத்தை பார்த்தார். கடன் கொடுத்த வியாபாரிக்கு கண்ணீரே வந்து விட்டது. நாயகத்தின் பெருந்தன்மையை எண்ணி நெகிழ்ந்தவாறே அவர் சென்றார்.
வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். திருப்பிக் கொடுக்க முடியாவிட்டால், கடன் கொடுத்தவரிடம் சற்று காலஅவகாசம் தர அனுமதி பெற வேண்டும். இதைச் செய்யாவிட்டால் கடன் கொடுத்தவர் திட்டுவதை ஏற்கத்தான் வேண்டும்.

நாள் : 11-Jul-17, 9:08 pm

மேலே