எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முடிவுதான் என்ன எப்போது எப்படி ...? *********************************** ​எனக்கு...


முடிவுதான் என்ன எப்போது எப்படி ...?
***********************************
​எனக்கு  ஒன்றும் புரியவில்லை ..​ஒரு கட்சியின் முக்கிய பதிவியில் உள்ளவர் முதல் அமைச்சரை ...420 என்கிறார் .


அதற்கு  முதல் அமைச்சரும் அவரது பதிலாக அவர்தான் ...420  என்கிறார் .

இதை அதே கட்சியில் உள்ள வேறு அணியினர் ரசித்து , சிரித்து கொண்டிருக்கின்றனர் . 

அப்படி எனில் இங்கு  நடப்பது 
ஒரு கட்சி ஆட்சியையும் இல்லை சரியான அரசாங்கமும் இல்லை நேர்மையான நிர்வாகமும் இல்லை ...
என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது . 

இப்படியே மாதங்கள் ஓடி , வருடங்களும் சென்று அடுத்த தேர்தல் வரும் வரை ....
பாதிக்கப்படுவது  பொதுமக்கள், 
சீர்குலையும் தமிழக முன்னேற்றம்,
 அடிப்படை தேவைகள் அடிபாதாளத்தில்,
 செயல்படுத்தாத தீட்டிய திட்டங்கள்,
 சீர்கெட்ட கல்விக்கொள்கை , 
நீட் உட்பட மாநிலத்தின் உரிமை பறிக்கப்படும் நிலை 
இன்னும் பலபல ..

காரணங்கள் இதுவாக இருக்குமோ ?????

பலவீனமான ஆளுமையால்  பன்முக அதிகார மையங்களால் பணம் படுத்தும் பாட்டால் பதவி ஆசையின் உச்சத்தால் 
முடிவுதான் என்ன எப்போது எப்படி ...?
தமிழ்நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும் ...!

  ----------------------------------------------------------------------

(((( படத்தில் உள்ளது போல ஒரு ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடுவதற்கு மூன்று பேருக்கு போட்டி நடக்குது ...)))))உண்மைதானே...

உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.  

பழனி குமார் 

நாள் : 12-Aug-17, 6:21 am

மேலே