எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ரதியே ரதியே.. நில் போகிறாய்... சகியே சகியே... சாரல்...

ரதியே ரதியே.. 
நில் போகிறாய்... 
சகியே சகியே... 
சாரல் வீசினாய்... 
நதியே நதியே... 
நாணம் கொள்கிறாய்... 
பனியே பனியே... 
நீ என்னுள் தூவினாய்.... 

உடலும் உயிரும்
இடம் மாறுதே.... 
இரவும் பகலும் 
ஒன்று சேருதே.... 
நட்பும் காதலும்
இரு பாதைகளானதே... 
பாதைகளில் நம் பயணம் தொடருதே... 

நட்பில் காதல் பூக்கும் 
தருணம் இன்பமானது... 
காதல் நட்பாய் மாறும் 
வலியோ நரகமானது... 
பொழியும் மழையும் 
நின்று போனது.... 
போகும் பாதையும் 
நீண்டு போனது... 

வாழ்வில் துன்பம் 
இரு இதயங்களின் மோதல் தானடி... 
வாழ்வில் இன்பம் 
இரு இதயங்களின் காதல் தானடி... 
காதல் செய்யதால் 
துன்பம் என்பது விதிவிலக்கு... 
காதலே இவ்வுலகின் 
ஒளிவிளக்கு.... 

by bmh arun 😌😌😌🚶🚶🚶🚶🚶

பதிவு : பிஎம்ஹெச்
நாள் : 16-Aug-17, 4:58 am

மேலே