எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தற்போதைய சூழ்நிலையில், குடிநீர் முழுக்க பிளாஸ்டிக் கேன்களிலேயே விநியோகம்...


தற்போதைய சூழ்நிலையில், குடிநீர் முழுக்க பிளாஸ்டிக் கேன்களிலேயே விநியோகம் செய்யப்படுகிறது. கடைகளில் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் பாட்டில்களிலும், வீடுகளுக்கு 20 லிட்டர் கேன்களிலும், சப்ளை செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் அபாயம் உணர்ந்த பெரிய கம்பெனிகள் தங்களது தயாரிப்புகளை அட்டைப்பெட்டிக்குள் அடைத்து பக்குவமான முறையில் சப்ளை செய்கின்றனர். கடைக்காரர்களுக்கு, அதன் அபாயம் புரியவில்லை. எனவே கேன்களை கடை முன் வெயிலில் அடுக்கி வைக்கின்றனர். அதேபோல் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும், பிளாஸ்டிக் கேன்களையும் வேன்களில் ஏற்றி பல மணி நேரம் அந்த கேன்களை வெயிலில் நிறுத்தி விடுகின்றனர். பிரச்னை இங்கு தான் தொடங்குகிறது. வெயிலில், சில மணி நேரம் பிளாஸ்டிக் கேன்களை வைத்திருக்கும் போது, பிளாஸ்டிக்கில் இருந்து, "டயாக்ஸின்” என்ற நச்சுப்பொருள் வெளியேறி குடிநீரில் கலந்து விடுகிறது. இந்த நீரை குடித்தால், புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் உடல் உபாதைகள் ஏற்படும், அபாயங்கள் உள்ளன.


"டயாக்ஸின்” நச்சுப்பொருள் பிளாஸ்டிக் கேன்களின் வெயில் படும் போதெல்லாம் உருவாகும். இந்த நச்சுப்பொருள் கேனின் தன்மைக்கும் தரத்திற்கும், ஏற்ப அதிகமாகவோ, குறைவாகவோ உருவாகும். எவ்வளவு நச்சு உருவானாலும், இதனை குடிப்பதால் ஆபத்து தான்.இதனால் பிளாஸ்டிக் கேன்களை வெயில் படாத இடங்களில் வைத்து பயன்படுத்த வேண்டும். நம்மிடம் அந்த கேன் வந்து சேரும் முன் பல மணி நேரம் வெயிலில் இருந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பு. அது நமக்கு தெரியாமல் போகும். எனவே முடிந்த அளவு பிளாஸ்டிக் கேன்களை தவிர்த்து விட்டு, கண்ணாடி அல்லது சில்வர் பாட்டில்களை பயன்படுத்துவது சிறந்தது.

நாள் : 9-Apr-14, 10:13 am

மேலே