தெரிந்தால் கூறுங்கள்

ஒரு ஏழை பெண் ஒருவன் மீது காதல் வசபடுகிறாள்...அவனை உண்மையாக நேசிக்கிறாள், ஆனால் அவனது காதலோ அவள் உடல் மீது தான் என்பதை தாமதமாகவே புரிந்து கொள்கிறாள்...இறுதியாக அவனை விட்டு விலகி செல்ல முடிவு செய்கிறாள்...ஆனால் அவனோ அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் அவளை மிரட்ட ஆரம்பிக்கிறான், அவன் மிரட்டலுக்கு துணையாக facebook , whatsup கைகோர்த்துவிடுகிறது...அவளுக்கு அவன் கொடுத்த ஒரு நாள் கெடுவுக்குள் அவள் அவனோடு இருக்க சம்மதிக்காவிட்டால் அவளின் பெயரை ஊரறிய அசிங்கபடுத்திவிடுவதாக மிரட்டுகிறான்...
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாட்டிகொண்ட ஒரு பெண் அவளை காப்பாற்றி கொண்டு இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர எப்படிப்பட்ட முடிவை எடுக்க வேண்டும்...
உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள், இன்று வெகுவாக விளையாடிகொண்டிருக்கும் இது போன்ற சம்பவங்க நிகழாமல் இருக்க என்ன வழி...



கேட்டவர் : ராணிகோவிந்த்
நாள் : 24-Jun-15, 2:53 pm
0


மேலே