படைப்புகள் பதிவு செய்வதில் சில தயக்கங்கள்சந்தேகங்கள்

நண்பர்களுக்கு வணக்கங்கள்,

சமீபத்தில் நான் எழுத்தில் இணைந்திருக்கிறேன். சில கவிதைகளை இங்கு பதிவிட்டிருக்கிறேன். எனினும் இன்றுதான் விதிமுறைகள் பக்கத்தை படித்தேன். இதில் கீழ்க்கண்ட வரிசை எண்களில் நான் கோரும் வார்த்தைகளுக்கு சற்று விளக்கம் தேவை.

6. தனி நபர் ஒருவரை/குழுவைப் பற்றி இழிவான/தவறுதலான/அந்தரங்க கவிதைகளை எழுதுதல் கூடாது.
7. கவிதையின் உட்பொருள் / உள்ளடக்கம் நயமற்றதாகவோ அல்லது ஆபாசம் நிறைந்ததாகவோ இருக்கக் கூடாது. அவ்வாறான கவிதைகள் சமர்பிக்கப்படின், எழுத்து இணையத்தளத்தில் தங்களுடைய கணக்கு (account) முடக்கி விடப்படும்.

மேலும் முதல் பதிவிலிருந்தே பதிவேற்றும் முன் கீழ்க்கண்ட குறிப்புக்கு ஒப்புதல் அளித்தே பதிவும் செய்கிறேன்.

[குறிப்பு:உங்களின் படைப்பு அல்லது கருத்துக்கள் ஒருவரை தாக்கிப்பேசுவதாகவோ, கொச்சைப்படுத்துவதாகவோ, காயப்படுத்துவதாகவோ, அபாயகரமானதாகவோ, பயமுறுத்துவதாகவோ, சட்டத்திற்கு புறம்பானதாகவோ, தரம்குறைவானதாகவோ மற்றும் பெருமை குலைப்பதாகவோ இருந்தால் அது சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் .]

சரி, என் சந்தேகம் இதுதான். பொதுவாக நாம்(ன்) அன்றாட வாழ்வில் நிகழும் விசயங்களை, மனிதர்களையொட்டித்தான் நாம்(ன்) நம்(என்) உணர்வுகளை ஏதோ ஒரு பரிமாணத்தில் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறோம்(றேன்). அப்படியிருக்க, அவற்றின் தரம் ஆராய்வதோ, யாரையாவது காயப்படுத்துமென்றோ (சம்பந்தபட்டவர்களை பெயர் கொண்டே, என்னை அடையாளமிட்டோ - குறிப்பிடாதபோதும்) அல்லது அதன் பாதிப்பு எவ்வகையிலிருக்குமென்றே அனுமானிக்க முடியாத என்னால் மேற்கொண்டு என்ன செய்வது?



கேட்டவர் : சிவாஜி
நாள் : 18-Jun-16, 6:55 pm
0


மேலே