டிஜிட்டல் இந்தியா ??

ஒரு மூதாட்டி ரயிலில் அடிபடுகிறார். அருகில் மகன் துடிக்கிறான். தாய் உயிர் போனதும் ரயில்வே போலீஸ் வருகிறது. போஸ்ட்மார்ட்டம் செய்ய அந்த ஊர் ஆஸ்பத்திரியில் வசதி இல்லை. அடுத்த ஊருக்கு போக வேண்டும். ஆம்புலன்ஸ் கேட்கிறது. கிடைக்கவில்லை. வாகனம் தேடுகிறது. கட்டணம் கட்டுபடி ஆகவில்லை.

ரயிலில் கொண்டு செல்ல தீர்மானிக்கிறது. இரு தொழிலாளிகளை அழைத்து, சடலத்தை ரயிலில் ஏற்ற சொல்கிறது.

துணியில் கட்டி தூக்கிச் செல்ல சடலத்தின் நீளம் இடைஞ்சலாக இருக்கிறது. இரு தொழிலாளிகளில் ஒருத்தர் சடலத்தின் இடுப்பில் ஒரு காலால் மிதித்து அழுத்தி, அதன் கால்களை மடக்குகிறார்.

சடலம் இரு துண்டுகளாக உடைகிறது. பொட்டலமாக கட்டி மூங்கிலில் பிணைத்து தூக்கி செல்கிறார்கள்.

”அய்யோ அம்மா.. என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. மன்னித்து விடு அம்மா” என்று மகன் கதறுகிறான்.

ஒருபுறம் ஜாதியின் கொடுமையில் தாரம்...
மறுபுறம் ஏழ்மையின் கொடுமையில் தாய்...!

யார் காதில் விழப் போகிறது..!!

இதுதான் நவீன நமது டிஜிட்டல் இந்தியா ..!!



கேட்டவர் : குமரிப்பையன்
நாள் : 29-Aug-16, 2:24 pm
0


மேலே