இறைவனை தரிசிக்க நுழைவுக்கட்டணம் வேண்டாமே !
அனைவருக்கும் வணக்கம் !
ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் மனதின் குறைகளை சொல்லி ஆறுதல் தேட ஆலயத்திற்கு வருகிறார்கள் !
ஒரு கிறித்தவர் தேவாலயத்திற்கு செல்ல சிறப்பு நுழைவுச்சீட்டு வாங்குவதில்லை.
ஒரு இஸ்லாமியர் மசூதிக்கு செல்ல சிறப்பு நுழைவுச்சீட்டு வாங்குவதில்லை !
ஏனெனில் அங்கே ஏழைக்கும், பணக்காரனுக்கும் வேற்றுமை இல்லை !
ஒரு ஏழை இந்து தன் கடவுளை தரிசிக்க சிறப்பு நுழைவுச்சீட்டு வாங்காவிடில் நெடுநேர காத்திருந்து அவதிப்பட வேண்டி உள்ளது !
பணக்காரர் ஒருவர் சொல்கிறார், பணத்தை கொண்டு தான் இறைவனையும் விலைக்கு வாங்கிவிட்டதாக !
இந்த நிலை மாறுமா ? தெய்வ தரிசனம் மக்கள் அனைவருக்கும் பொதுவானதாக ஆக்கப்படுமா ?
சிறப்பு தரிசன திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு மற்றும் இந்திய அரசு உத்தரவு பிறப்பிக்க ஆவண செய்ய வேண்டுகிறோம் !
இவண்,
பொதுமக்கள்
இறைவனை தரிசிக்க நுழைவுக்கட்டணம் வேண்டாமே ! மனு | Petition at Eluthu.com