சேர்த்தவர் : Drvr Sathis Kumar s, 6-Oct-15, 2:31 pm
Close (X)

சுகாதாரம் என்பதெல்லாம் பணக்காரர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தான்

சிட்லபாக்கம் துணை சுகாதார மையம் எனும் பெயர் கொண்ட தாய் சேய் நல விடுதியில், கர்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது,பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது என சிட்லபாக்கம் பேருராட்சிகுட்பட்ட 18 வார்டுகளை சேர்ந்த ஏழைமக்கள் இவ்விடுதியின் மூலம் பயன்பெறுகிறார்கள்.சுகாதாரம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று கேள்வி கேட்கும் அளவிற்கு இந்த கட்டிடம் முகப்பை தவிர மற்ற மூன்று புறமும் அங்கே கொட்டப்பட்ட பராமரித்துவரும் 18 வார்டுகளை சேர்ந்த குப்பைகளால் அது தீ மூட்டி எரிக்கப்படும் போது ஏற்பட்ட தீ சுவாளைகளால் கட்டிடம் சிதிலமடைந்திருக்கும்.தூய ஆக்சிஜனை சுவாசிக்க வழியே இல்லாத படியாக அனைத்து ஜன்னல் கதவுகளும் எப்போதும் குப்பை துர்நாற்றத்தை தாங்கமுடியாமல் மூடியே வைக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பேரூராட்சியில் கால்நடைகள் கூட சுகாதாரமான முறையில் சிகிச்சை பெற கட்டிடம் போக போதிய நல்ல காற்றோட்டமான காலி நிலமெல்லாம் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது நடந்த சட்ட மன்ற கூட்ட தொடரில் மாண்பு மிகு அம்மா அவர்கள் தாய் சேய் நல விடுதிகளுக்கு ஒதுக்கிய நிதியை கொண்டு இக்கட்டிடத்தை சுகாதாரமான இடத்திற்கு மாற்ற வேண்டுகிறோம்.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்

சுகாதாரம் என்பதெல்லாம் பணக்காரர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தான் மனு | Petition at Eluthu.com



மேலே