சேர்த்தவர் : ச இரவிச்சந்திரன் s, 28-Mar-16, 5:32 pm
Close (X)

இந்திய தேர்தல் ஆணையர் அவர்களுக்கு

மதிப்பிற்குரிய உயர் திரு இந்திய தேர்தல் ஆணையர் அவர்களுக்கு
அய்யா தற்போது நிலவும் தேர்தல் தொடர்பாக தங்கள் ஆணையம் எடுத்து வரும் அணைத்து முயற்சிகளும் ஒரு நேர்மையான தேர்தல் நடத்தி அதன் மூலம் ஒரு நேர்மையான ஆட்சியை தமிழகதிற்கு கொண்டு வருவதற்காக என்பதை நாங்கள் நன்கு அறிவோம் .

தேர்தல் நேரத்தில் பணம் அல்லது பொருட்களை பெற்று கொண்டு வாக்களித்தால் நிருபனமாகும் போது ஓர் ஆண்டு சிறை தண்டனை என்ற தற்போதைய சட்டமும் மிக நன்று அத்தோடு அரசியல் வாதிகளும் அதே நேர்மையாக ஆட்சியை சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டல் அவர்கள் மீது நம்பிக்கை மோசடி வழக்கு தொடர்ந்து அவர்களை ஆட்சியை விட்டு இறக்கும் அதிகாரமும் எங்களுக்கு [ வாக்களர்களுக்கு ]
தரும்படியான சட்டமும் இயற்ற வேண்டும் .

மேலும் தேர்தல் காலங்களில் மட்டும் காட்சி தரும் சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர்கள் தேர்தல் காணாமல் போகும் இவர்களை திரும்பபெறும் உரிமையையும் வாக்காளர்களுக்கு தர வேண்டும் அவ்வாறு செய்யாத வரையில் வாக்காளர்களுக்கு மட்டும் நிபந்தனை விதிக்கும் எந்த ஒரு சட்டத்தினாலும் பயன் ஏதும் விளைய போவதில்லை வருமான வரிதுறையும் கட்சிகளை மிக கவனமாக கண்காணித்து கட்சி உறுப்பினர்களின் சொத்துக்கள் பற்றிய விபரங்களை சேகரித்து அவர்களிடம் உள்ள கருப்பு பணத்தை மீட்பதன் மூலம் தேசிய வருவாயை உயர்த்தலாம் பொருளாதார ஏற்ற தாழ்வுகளை ஓரளவு சமப்படுத்தலாம் இதனை செய்யுமா தங்கள் தேர்தல் ஆணையம் ?

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 1 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

இந்திய தேர்தல் ஆணையர் அவர்களுக்கு மனு | Petition at Eluthu.com



திருக்குறள் - காமத்துப்பால்

மேலே