எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Bull Fight.​ 

பாலுவுக்கு ஒரு வருத்தம் . தனது நண்பன் குணா இருக்கும் போது அப்பா தன்னை திட்டிவிட்டார் என்று .

அதுவும் ஒன்பதாவது வகுப்பின் கால் ஆண்டு தேர்வில் 25 மார்க் ஆங்கிலத்தில் வாங்கியதற்கு .

அந்த நிகழ்வு நடந்து 30 வருடங்கல் கடந்து ஓடின.

பாலு வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றான் .குணா ஆசிரியர் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றான்.

பாலுவும் , குணாவும் தற்செயலாக ஒரு புத்தக கண் காட்சியில் சந்தித்து கொண்ட னர்.

" எப்படி இருக்கு வாழ்க்கை "

"மாடு மேய்த்து இருந்தால் நன்றாக இருந்து இருப்பேன் ".

" ஏய் என்ன சொல்ற "

"ஆமாம் , உடம்புக்கு எல்லா நோயும் வந்துவிட்டது " .

'என்ன ஆச்சு ' குணா வினவ , சற்றும் எதிர் பார்க்காமல் பேச ஆரம்பித்தான் பாலு ,

பிடித்த தொழிலை விட்டு , கிடைத்த தொழிலுக்கு சென்றால் விளைவு என் மாதிரி தான் இருக்கும் .

சுருக்கமாக சொன்னால் , மாடு மேய்த்து இருந்தால் நன்றாக இருந்து இருப்பேன் .

என் அப்பா மாட்டு தொழுவம் கட்டி 2O மாடுகளை வளர்த்தார் . அவரிடம் உண்மை இருந்தது . உழைத்தார் உயர்ந்தார் .

படித்த என்னை , மதித்தார் . ஆனால் என் எண்ணங்களை புரிந்து கொள்ளவில்லை .

ஆனால் என்ன . சமுதாயத்தில் நான் ஒரு Retired Hurt Bank General Manager .

50 வயதில் , உடல் நலம் காரணம் காட்டி ஓய்வு பெற்றேன் .

என் அப்பாவோ , இன்று உலக புகழ் பெற்று விட்டார் .

அவர் வளர்த்த காளை , அலங்கா நல்லூர் ஜல்லி கட்டில் CAR வென்று முதல் பரிசும் பெற்றது.

அவர் மாடு வளர்ப்பை தொழிலாக செய்யாமல் , அந்த வாழ்க்கையாகவே மாறினார்.

எனக் கோ , !!!! ????அந்த கோ ,!!!!????

நண்பன் அழுதான் .

நான் சிரித்தேன் .

அப்பா என் முன்னனே தோன்றி மறைந்தார் .

--Best Regards,

Selvaraj Ramanselvaraj.raman1961@my.com

மேலும்

ஜல்லிக்கட்டு

இளைஞர்கள்  நடத்தும் போராட்டம்
இமைகள் உறங்க கூடாது
வழித்தெழு தோழா
தோளோடு தோள்கொடுத்து
தேசத் துரோகிகளை
துரத்திவிடலாம்...

அறப்போராட்டம் தொடரட்டும்...

மேலும்

ஏலே பித்துக்குளி - ஜல்லிக்கட்டு!

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

'ஏன்டா இந்த ஜல்லிக்கட்டு விவகாரம்? '
"வீரத்தை வயிற்றினிலே, 
வெடிமருந்தாய் 
வைத்திருக்கும், 
சில சிங்கார தமிழனையும் ஓர்நாள் , 
ஏறிலே ,
கொஞ்சம் ஏற்றிவிட்டால்
தான் என்ன? 
காலமெல்லாம் 
காத்திருக்கும், 
காளைகளுக்கும் 
ஓர் நாள், 
மையிட்டு, 
மலர்சூட்டி, 
கள் கொடுத்து,
கவிபாடி, 
கூச்சலிட்டு, 
குதிக்கவைத்து, 
கொம்பைகொஞ்சம் 
கூரிட்டு, 
குரிபார்த்து, 
வேண்டாத பல, 
அரசியல்வாதிகள் மேலே, 
மோத, 
விட்டால்தான் என்ன? 
நம்ம ஊராம் , 
தண்ணியில்லா, 
அலங்காத குலுங்காத, நல்லூரையும்நயமாக, 
ஓர் நாள், 
அரைஜட்டியுடன்
ஆர்வமுடன் 
வந்திட்ட , 
அமெரிக்கனையும் அரவணைத்துஆடவைத்து
நம்முடன் 
குதிக்கவைத்தால் 
தான் என்ன?

ஒரு நாள், கூத்துக்கு, 
உலகமெல்லாம் 
கூவலிட்டு, 
வாழ்நாள் எல்லாமே
விரையமாவதுமுண்டோ? 
மூளையில்லா நாட்டினிலே, 
மாட்டிக்கிட்டோமேடா 
பித்துக்குளி! 
ஏர்பிடிக்கும் 
ஏழைக்கு 
குரல்கொடுக்க யாருமில்லை! 
நாட்டிலிருக்கும் பிரச்சனையிலே, 
மழைபெய்யா, பூமியிலே, 
விஷமருந்தி விவசாயி, விடைஎடுக்கும் வேதனையிலே,
கயவர்கள், 
காவிரியை தடுத்துவிட்ட போதினிலே, 
ஏறுஏற, 
எங்கிருந்து மனம்வரும் தெரியலைடா, 
பித்துக்குளி ! 
வீரத்தை காட்டிட 
வேருவழி இருந்தாலும், 
ஏறுவழியை காட்டிடவே, 
துடி துடிக்கும் 
தமிழனையும், 
அனைத்து ப்போக 
அறிவில்லை! 
பாடத்தை படிக்காமல் 
பவனிவரும் மக்கட்க்கு 
கருத்துக்கூற ஆளில்லை! 
கோடீஸ்வரன்
பிள்ளைகள், 
எப்படியும் தேரிடுவான்! 
தெருவோரம் கடைவிரித்து 
காலமெல்லாம் 
பூ வித்து, 
மாரியப்பனையே நம்பிநிற்க்கும்
மதிப்புமிக்க தாய்கட்க்கு 
கருணைகாட்டஆளில்லை! 

காலத்தை வீணடிக்காமல், பாடம் கொஞ்சம் படித்திடடா, பைத்தியக்கார பித்துக்குளி! "



மேலும்

கத்தியின்றி ரத்தமின்றி புத்தம் புது யுத்தம்
வென்றெடுக்கும் வழி கண்டது பார் தமிழ் இளரத்தம்

இது பீட்டா போட்ட கணக்கு யாவும் தூளாகும் கட்டம்
இனி தொட மாட்டோம் கோலாவை உசுர் இருக்கும் மட்டும் 

இது பீட்டா போட்ட கணக்கு யாவும் தூளாக்கும் திட்டம் 
இனி தொட மாட்டோம் கோலாவை உசுர் இருக்கும் மட்டும் 

கோலா பாட்டிலில் இருக்குதடா விவசாயி ரத்தம்
அதை உறிஞ்ச நமக்கென்ன ஐந்தறிவா மிச்சம் 

கோலா பாட்டிலில் இருக்குதடா விவசாயி ரத்தம்
அதை உறிஞ்ச நாமென்ன மானத்தையா விற்றோம்

வாடி என்ன தடை போட்டால் வாடிடுமா பேடி
திமிறுகின்ற காளைகளாய் பாய்ந்திடுவோம் மீறீ

இது அம்பானி அதானி பேமானிங்க சட்டம்
இதில் கானி நிலம் இருந்தாலும் தேராதுங்க சொச்சம்

விவசாயி நமெக்கெல்லாம் போட்டால் தான் சோறு
அவன் நிலைகாக்க நாம் என்ன செய்தோம் கைமாறு

அலங்கை பாரு மெரினா பாரு எட்டுத்திக்கும் பாரு
இனி இளைஞர் தாம் இளைஞர் தாம் ஊரு சொல்லும் பாரு

அதிருது பார் அதிருது பார் அதிருது ஊர் மொத்தம்
தமிழர் தாம் தமிழர் தாம் புகழ் வான் உலகு எட்டும்

#JusticeForJallikattu  

மேலும்

நன்று, வெளி நாட்டு குளிர் பானங்களை முழுவதுமாக ஒதுக்கிவிட்டு நம் நாட்டு தயாரிப்பிற்கு ஆதரவு தர வேண்டுகிறேன் - மு.ரா. 20-Jan-2017 10:28 pm

தமிழன் என்ற திமிரு எனக்கும் இருக்கு

மேலும்

திமிரு என்று ஏன் சொல்கிறீர்? வீர் (இந்தி) = வீரம் ( தமிழாக்கம்), = மறம் ( தமிழ்), மறவன், மறவர் (தமிழ்) = வீரன். வீரர் ( தமிழாக்கம்). திமிரு = திரைத் தமிழ். திமிர் என்ற தமிழ்ச் சொல்லுக்கு பல்வேறு அர்த்தங்கள் உ ள்ளன. அவற்றில் ஒன்று 'சோம்பல்'. 05-Jan-2017 10:11 pm
எனக்கும் தான் தோழியே 05-Jan-2017 3:52 pm

ஜல்லிக்கட்டு!!

மேலும்


மேலே