எண்ணம்
(Eluthu Ennam)
கஷ்டத்தையும்,கவலையையும்துன்பத்தையும்,துயரத்தையும்,மறக்க,கடவுள் தந்த சொர்க்கம்; குழந்தை. அகிலா. தி... (Ahila)
24-Feb-2020 11:22 am
கஷ்டத்தையும்,கவலையையும்
துன்பத்தையும்,துயரத்தையும்,
மறக்க,
கடவுள் தந்த சொர்க்கம்; குழந்தை.
அகிலா. தி
கண்ணின் மணி போல என்னை
கருவறையில் காத்தவளே!
பூமிக்கு நான் வந்தவுடன்
புலம்புவது ஏனம்மா!
பெண் என்ற கலக்கமா
பெற்றவளே உன் நெஞ்சில்!
கள்ளமில்லா என் தாயே உன்
உள்ளம் நினைப்பதென்ன!
நெல்லின் மணி கொண்டு
நெஞ்சை நிறுத்தவா!
கள்ளி பால் வார்த்து
கல்லறை படைக்கவா!
வேண்டாம் தாயே
விபரீத எண்னம்!
அள்ளி அணைக்க மனமில்லை!
என்றால் அரசு தொட்டிலில்
போட்டுவிடு!