எண்ணம்
(Eluthu Ennam)
மழை திருக்குறள்
" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு "
விளக்கம் : (முனைவர் ச .மெய்யப்பன் ) எவ்வகையில் உயர்ந்தவரும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது . அதுபோலத் தண்ணீரின் இடையறாத ஓட்டமும் மழை பெய்யவில்லை என்றால் இல்லையாகும்.
நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறள் இது . தண்ணீர் ," திரவத் தங்கம் " என்று அழைக்கப்படுகிறது . தண்ணீர் இல்லாமல் நம் வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது . உலகத்தில் உள்ள நீரில் 3 % மட்டுமே நல்ல தண்ணீர் . இதை மட்டுமே நாம் குடிக்கப் பயன்படுத்த முடியும் . இதிலும் 2 % சதவீத தண்ணீர் பனிக்கட்டியாக உள்ளது . வெறும் 1 % தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் நாம் வாழும் பகுதியில் கிடைக்கிறது . மழை பெய்வதன் மூலம் மட்டுமே நாம் அதிகளவு நல்ல தண்ணீரைப் பெறுகிறோம் . மழை பெய்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது அடர்ந்த வனப்பகுதிகள் தான் . உலகமயமாததாலும் , பொருளாதாரமயமாததாலும் எல்லா நாடுகளிலும் வனப்பகுதியின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது .
மழை!!!
புறத்தில் நின்று உன்னுடன் நனையும் போது உன் காட்சி அழகே!
மரம்செடிக்கொடிமீது நீ விழும் போது உன் காட்சி பேரழகே !
"மழை" வந்த நாள் அதனில் ..
மழை போலவே நானும் உனை பார்க்க வந்த நேரம் அதனில்
மழை என்னவோ" இடி" அதனை துணைக்கு அழைத்து வந்த நேரம் அதனில்
இடி என்னவோ "இருளை" கவ்விக்கொண்ட நேரம் அதனில்..
ஒரு கவிதை எழுத தோன்றிற்று
நிச்சயமாய் "தழுவல்" கவிதை அன்று..
இன்னொரு முறை "மழை" இடி" இருள்" சேர்ந்தே வரட்டும்
தழுவி பின்னர் கவிதை எழுதலாம்