எண்ணம்
(Eluthu Ennam)
பெண்ணுக்கும் இதைவிட
தினை விதைத்தவன் தினை அறுப்பான்.....
நாம் என்ன விதைக்கிறோமோ அது தான் நமக்கு விளைகிறது .....
நாளை உங்கள் பிள்ளைகள் உங்களை போல் தானே இருப்பர்
நாளை அவர்களை உங்களால் கேட்க முடியுமா
பெண்களே
குடும்பமாக வாழ்வது தான் வாழ்க்கை .....
தாய் தந்தையை அழ விடக் கூடாது
பெண் என்றால் பெண்மை
அவள் யாரையும் ஏமாற்ற மாட்டாள்
பண்பாட்டை விட்டுத் தர மாட்டாள்
வீண் சிரிப்பு சிரிக்க மாட்டாள்
பொய் கூற மாட்டாள்
உண்மையை மறைக்க மாட்டாள்
யாரையும் துன்புறுத்தமாட்டாள்
மனிதினி அவள்
சுயத்தோடு வாழ்வாள்
உயிருள்ளவரை உண்மையாக வாழ்வாள்
உழைத்து வாழ்வாள்
அவள் யார் என்று யாருக்கும்
சொல்லிக்கொண்டிருக்க மாட்டாள்
அவள் செய்கை தான் சொல்லும்
கலாச்சாரத்தோடு நாகரிகமாக உடை உடுத்துவாள்
தவறுக்கு ரௌத்திரம் கொள்ளும் குணவதி அவள்
சுயமரியாதையோடு வாழ்பவள்
உண்மைக்கு உண்மையானவள்
பொய்மைக்கு கனலானவள்
பிழைக்கு பிழை செய்யாத சரியவள்
யாரிடமும் இழைந்து பேசமாட்டாள்
வெட்டிக்கதை பேச மாட்டாள்
தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பாள்
உயிர்களிடத்தில் இரக்கப்பாடுவாள் தாய்மை அவள்
மனதினில் தன் கணவனை மட்டுமே நினைப்பவள்
யாரையும் புகழவும் மாட்டாள் இகழவும் மாட்டாள்
தான் யார் என்று தனக்கு தானே விளம்பரம் செய்யாதவள்
மூன்றாவது மனிதனை எங்கே வைக்க வேண்டுமோ அங்கேயே வைப்பாள்
அதிகம் புலம்பாமல்
பிதற்றாமால்
மாற்றத்தை கொண்டு வர முயலுவாள் உத்வேகத்தோடு
அவள் கண்ணீரை அந்நியரிடத்தில் காட்ட மாட்டாள்
மிகவும் தைரியமானவள்
எதையும் எதிர்கொண்டு முன்னோக்கி செல்வாள்
தன் உடல் நிலை சரியில்லை என்றாலும் தன் உதிரத்தையே சோறாய் ஊட்டுவாள்
இறப்பிற்கு அஞ்சாதவள்.....
நாளைக்கே இறப்பு வரட்டும் என் கடமை என் மகனுக்கு மகளுக்கு கல்யாணம் பண்ணிட்டா போதும் என்பாள்
கடமை தவறாதவள்
சொன்ன வார்த்தையை காப்பாற்றுபவள்
நேர்மையானவள் நல்லவள்
தாயவள்
மாமியார் மாமனார்
இன்னொரு தாய் தந்தை ஆவார்கள்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீ யார் என்பதை நீ (தான் ) முடிவு செய்கிறாய் (செய்ய வேண்டும் ) (ஆனால் அதை நீ யாருக்கும் சொல்லிக்கொண்டிருக்க தேவையில்லை =அப்படி சொல்லுபவர்கள் சுய மரியாதைக்காரர்களாக இருப்பது கடிதாகும் = அது அரசியலாகும் தேவையாகும் )
ஆனால் நீ யார் என்பதை இந்த உலகம் சொல்ல வேண்டும் (உன் நேர்மையில் )
உன் செயல்கள் நல்லவையாக இருக்க வேண்டும்
நீ உன் சுயத்தோடு வாழ வேண்டும்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அடுத்தவர்களை குறை கூறுவதே மிகப்பெரிய குறை .....
பிறருக்கு ஒத்து ஊதுவது தேவைக்கே அரசியலுக்கே ......
இறப்பேன் என்று சொல்லுவது கோழைத்தனம்
மனிதனாக பிறந்தால் பிறப்பை போலவே இறப்பும் ஒன்று
பிறப்பும் இறப்பும் நியதி
இதில் என்ன இருக்கிறது
இரண்டுமே சமம் தான் .....
அழகு அழகு என்று அந்த வார்த்தையின் பொருளையே மாற்றி விட்டார்கள்
அழகு என்பதை நிறம் என்றாக்கிவிட்டர்
அழகு என்பது புறத்தில் இல்லை அகத்தில்
அழகு என்பது எண்ணம்
மனிதனின் எண்ணம்
எனக்குத்தான் எல்லாம் தெரியும்
என்று கூறி சரியானவர்களை பிழையாக்குகிறார்கள்
பிழையை சரியாக்குகிறார்கள்
கருத்து சொல்வதை விட
அதன் படி நடப்பதே உண்மை ஒழுக்கம்
ஒரு எழுத்து பரிசை வாங்கியது என்பதை விட
புரட்சியை விதைத்தது
எழுச்சி வந்தது
புது விடியல் ஏற்பட்டது
என்பதே மகிழ்ச்சி
என் நாட்டால் என்னை அடையாளப்படுத்த வேண்டாம்
என் தமிழால் என்னை அடையாளப்படுத்துங்கள்
ஏன் என்றால் ஆரம்பத்தில் இருந்து நான் தமிழ் பெண்
என் நாடு தமிழ்நாடு
என் உயிர் தமிழ்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாரிடமும் யாசகம் கேட்காதே
போராடி வெல்
நீ யார் என்பதை மனதில் நிறுத்து
உன் வார்த்தையில் இல்லாமல் நடத்தையில் வாழ்ந்து காட்டு
நீ யார் என்பதை அவர்களே அறிந்து கொள்வார்கள்
நல்ல பெயரை வாங்க பல காலம் ஆகலாம்
கேட்ட பெயரை ஒரு நொடியில் பெற்று விடலாம்
யாரிடமும் குழைந்து பேசாதே
யாரையும் நம்பாதே
உன் மனசாட்சிக்கு உண்மையாக இரு
உன் பெற்றோருக்கும் உடன் பிறந்தோருக்கும் கணவருக்கும் குழந்தைகளுக்கும் உறவுகளுக்கும் நட்புக்கும் இச்சமூகத்திற்கும் உண்மையாக இரு
எதற்கும் பயப்படாதே (தவறு செய்தால் தான் பயப்படணும் )
மனசாட்சிக்கு பயப்படு
அவளா என்ற பெயரை ஐந்து நொடியில் வாங்கிவிடாதே மதி இழந்து கோபத்திலும் தாபத்திலும்
புடம் போட்ட தங்கமாய் வாழ்
வாழும் வாழ்க்கையை முடித்துக்கொள்ளாதே
வாழ்க்கையை முடித்துக்கொள்ள யாருக்கும் அனுமதி இல்லை
இயற்கைக்கு மட்டுமே உண்டு
இந்த பிறவியில் பாவம் செய்கிறேன்
அடுத்த பிறவியில் நன்மை செய்கிறேன்
என்று வாழாதே
இந்த வாழ்க்கையை உண்மையாக வாழ்
நல்லதாக செய்
அடுத்த பிறவி என்பதெல்லாம் கிடைக்காது (கிடையாது )
அந்தந்த நொடியை அனுபவித்து வாழ்
பிறர் கண்ணீரை முடிந்தவரை போக்கு
புன்னகைத்துக்கொண்டே இரு
பிறரை சிரிக்க வை
சிரிக்க வைக்க வில்லை என்றாலும் அழ வைத்து விடாதே
பெற்று வளர்த்த தாய் தந்தைக்கு தாயாய் இரு