எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  யாவுமான இயற்கையை அம்மனாகப் பாவித்து அவளுக்கான ஒரு பத்துப் பெயர்களோடு பதிகம் எழுதிவந்தேன் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய இசையமைப்பாளர் அண்ணன் திரு T.L. தியாகராஜன் அவர்கள் அவர்களுக்கே உரிய தனித்த சிறப்புடன் நானெழுதிய வரிகளைப் பாடிக்காட்ட பூத்துவிட்டது மீ.மணிகண்டனின் அடுத்தொரு பாடல் திரு T.L. தியாகராஜன் (திருச்சி லோகநாதன் புதல்வர்) அவர்களின் இசையிலும் குரலிலும்..... தாயாகிறாள் அம்மன் தாயாகிறாள்...


வாழ்க வளமுடன் 
மீ.மணிகண்டன்

  

மேலும்

தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்

கல்லால மரத்தின் அடியில், யோக ஆசனத்தில் சனகாதி முனிவர்கள் நால்வருக்கு உபதேசிக்கும் முறையில் வீற்றிருப்பவரே தட்சிணாமூர்த்தி. இவர் ஒரு காலில் முயலகனை மிதித்தபடியும், மற்றொரு காலை வீராசனமாக வைத்தபடியும் இருப்பார். நான்கு கரங்களில் வலப்பக்க ஒரு கை சின் முத்திரை தாங்கியும், ஒரு கை ருத்ராட்ச மணிவடம் தாங்கியும் இருக்கும், இடபக்கம் உள்ள ஒரு கையில் அமுத கலசமும், ஒரு கையில் வேதமும் இருக்கும். இவரை தென்முகக் கடவுள் என்றும் அழைப்பார்கள். சிவபெருமானின் 64 வடிவங்களில், குரு வடிவாக திகழ்பவர் தட்சிணாமூர்த்தி.

இவருக்கு யோக தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூர்த்தி என்ற பெயர்களும் உண்டு. சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோருக்கு யோக முறையை காட்டியதால், யோக தட்சிணாமூர்த்தி என்றும், தும்புரு, நாரதர் ஆகியோருக்கு வீணையின் இலக்கணத்தை உணர்த்தியதால், வீணா தட்சிணாமூர்த்தி என்றும் பெயர் பெற்றார்.

இவர் கையில் காட்டும் சின் முத்திரை, ஞானத்தைக் குறிக்கிறது. சின் முத்திரைப்படி சுட்டுவிரல், பெருவிரலின் அடியோடு சேர்ந்திருக்கும். மற்ற மூன்று விரல்களும் ஒதுங்கிய நிலையில் இருக்கும். பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் ஆன்மாவையும் குறிக்கிறது. மற்ற மூன்று விரல்களில் நடுவிரல் ஆணவத்தையும், அணிவிரல் மலத்தையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். ஆணவம், மலம், மாயை ஆகியவற்றை கடந்தால், ஆன்மா இறைவனோடு சேரலாம் என்பதே இந்தத் தத்துவத்தின் விளக்கமாகும்.

தினமும் தட்சிணாமூர்த்தியை துதிபாடல்களால் துதித்து, அர்ச்சனை செய்து வழிபடும்போது, தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்

‘ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே

த்யாநஸ்தாய தீமஹி

தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத்’

தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை அறிவோம். தியானத்தில் இருக்கும் அவரை தியானம் செய்வோம். குருவாகிய அவர், நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்.

இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் ஞானம் கிடைக்கும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். பயம் நீங்கும். வித்தைகளில் மேன்மை அடையலாம்.

மேலும்

போற்றுதற்குரிய படைப்பு இறை அருள் தொடரட்டும் 05-Jan-2018 6:42 pm
ஆன்மீக களஞ்சியம் போற்றுகற்குரிய இறை அமுது. பாராட்டுக்கள் 05-Jan-2018 6:40 pm

குரு கவசம்

குரு மந்திரங்கள்! குரு ஸ்தோத்திரம்! குரு காயத்ரி மந்திரம்! குரு மந்திரங்கள்

குரு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் குரு தசை அல்லது குரு அந்தர் தசையின் போது குருவின் கடவுளான சிவபெருமானைத் தினமும் வழிபடவேண்டும். தினசரி ஸ்ரீ ருத்ரம் படிக்க வேண்டும்.

குரு மூல மந்திர ஜபம்:

"ஓம் ஜ்ரம் ஜ்ரீம் ஜ்ரௌம் ஷக் குரவே நமஹ",

40 நாட்களில் 16000 முறை சொல்ல வேண்டும்.

குரு ஸ்தோத்திரம் படிக்க வேண்டும்.

தேவானாம் ச ரிஷஷீணாம் ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!!
    தமிழில்,

குணமிகு வியாழக் குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்!
பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
கிரக தோஷமின்றிக் கடாஷித் தருள்வாய்!!

வியாழனன்று நன்கொடையாக குங்குமப்பூ அல்லது மஞ்சள் அல்லது சர்க்கரை கொடுக்கவேண்டும்.

நோன்பு நாள்: வியாழன்.
 பூஜை: ருத்ர அபிஷேகம்.

ருத்ராட்சம்: 5 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.

குரு காயத்ரி மந்திரம்

வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி|
தந்நோ குரு: ப்ரசோதயாத்

குரு தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின், 11 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும்.

மேலும்

வீட்டின் பூஜை எண்: 13  ஸ்ரீ ராகு, ஸ்ரீ கேது சுலோகங்கள்


மேலும்


மேலே