எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நவராத்திரி வாழ்த்து அட்டைகள்

மேலும்

நவராத்திரி ஒன்பதாம் நாள் வழிபாட்டு முறை

https://eluthu.com/images/data/ennam/medium/f3/35802/aqhiu35802.jpg

இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழி பட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூபமானவள். கல்விச் செல்வம்பெற அன்னையின் அருள் அவசியமாகும். இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவபூசை செய்யும் கோலத்தி ல் அருளாட்சி புரிவார்கள்.

ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.

மேலும்

நவராத்திரி எட்டாம் நாள் வழிபாட்டு முறை

https://eluthu.com/user/greetings/largecards/Navratri0.jpg

இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும். இன்று மதுரை மீனாட்சி அம்மன் மகிஷாசுர மர்த்தினி அலங்கா ரத்தில் காட்சியளிப்பார்கள்.

எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க்கரைப் பொங்கல்.

மேலும்

நவராத்திரி ஏழாம் நாள் வழிபாட்டு முறை

https://eluthu.com/images/data/ennam/medium/f3/35798/jakzi35798.jpg

7ம்நாள் அன்னையை மகா லட்சுமியாக வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டா யுதம், சக்தி ஆயுதம், வஜ்ரா யுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்ட லம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களை யும் தருபவள் அன்னை யாகும். இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவ சக்தி கோலத்தில் மக்களி ற்கு அருள் பாலிப்பார்கள்.

ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க் கண்டுச் சாதம்.

மேலும்

நவராத்திரி ஆறாம் நாள் வழிபாட்டு முறை

நவராத்திரி ஆறாம்

இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவ சேனா திபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கி டுபவள். வீரத்தை தருபவள். இன்று மதுரை மீனாட்சி அம்மன் பாணணிற்கு அங்கம் வெட்டிய அலங் காரத்தில் அருள்புரிவார்கள்.

ஆறாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.

மேலும்

நவராத்திரி ஐந்தாம் நாள் வழிபாட்டு முறை

ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழி படவேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரி சூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்த ருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடினஉழைப்பாளிகள் உழைப்பி ன் முழுப்ப லனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும். இன்று மதுரை மீனாட்சி அம்மன் நாரைக்கு மோட்சம் கொடுத்த அலங்காரத்தில் காட்சி யளிப்பார் கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.

மேலும்

நவராத்திரி நான்காம் நாள் வழிபாட்டு முறை

சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக வழிபட வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன். இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருமண கோலத்தில் காட்சியளிப்பார்கள்.

நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.

மேலும்

நவராத்திரி மூன்றாம் நாள் வழிபாட்டு முறை

மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும். மற்றும் வேலையில்லாதவரிற்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவரிற்கு பதவியுயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளேயாகும். இன்று மீனாட்சி அம்மன் கல்யானைக்கு கரும்பு கொடுத்த அலங்காரத்தில் காணப்படுவார்.

மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண் பொங்கல்.

மேலும்

நவராத்திரி இரண்டாம் நாள் வழிபாட்டு முறை

இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபடவேண்டும். வராஹ(பன்றி)முகமும் தெத்து பற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமி யை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.

மதுரை மீனாட்சி அம்மன் இன்று விறகு விற்ற லீலை யில் காட்சி அளிப்பாள். அதாவது சுந்தரர் விற்றவிறகை மீனாட்சி அம்மன் தலையில் ஏற்றும் படலம் நடக்கும். குடும்ப பாரத்தை கணவனுடன் சேர்ந்து மனைவியும் சுமக்க வேண்டும் என்ற தத்து வத்தினை வலி யுறுத்துவ தாக நாம் கருதலாம்.

இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.

மேலும்

 நவராத்திரி முதல் நாள் வழிபாட்டு முறை

சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபட வேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்த வள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோப க்காரி. நீதியைக் காக்கவே இவள் கோபமாக உள்ளாள். மற்றும் இவளது கோபம் தவறு செ ய்தவர்களை திருத்தி நல் வழிபடுத் தவே ஆகும். மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில் அண்ட சராசரங்களைக் காக்கும ராஜராஜேஸ்வரி அம்மனாக அலங்கரிப்பர்.

முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.

மேலும்

மேலும்...

மேலே