எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அண்ணே நம்ம பெரிய அண்ணன் ரொம்ப சீரியஸா இருக்காங்க...போன் பண்ணி பேசு..."என்றாள் தங்கை...

"சரிம்மா... " என்ற நான் அவருக்கு என்ன பிரச்சனை என்று கூட கேட்க மனசு இல்லை...
அண்ணன்கள் நம் கூட பிறந்த உறவுகள்...
அவருக்கு மனைவி, பிள்ளைகள் வந்ததெல்லாம் இடையில் வந்த உறவுகள்...
பிறக்கும்போதே வந்த உறவுகள் பெரிதா? இல்லை இடையில் வந்த உறவுகள் பெரிதா? என்றால் என்னவென்று சொல்வது....

அண்ணனுக்கோ வயது 75 ஆகும்...
எனக்கு வயதோ 64 ஆகும் அவன் கெட்டவன் என்றால் அன்றே "நானே வருவேன்" படம்போல என்னை கொன்றிருக்கலாம்.... ஆனால் அவர் அதை செய்யவில்லை... தனக்கு என்று மனைவி பிள்ளைகள் வந்தபோதுதான் சுயநலமாக மாறிவிட்டார்...
நானும் அண்ணனாக பிறந்திருந்தால் இப்படித்தான் மாறி இருப்பேனோ?
மறுபடியும் போன் ஒலித்தது...
தங்கைதான் பேசினால்....

"பெரிய அண்ணன்னிடம் பேசினேன்... அண்ணன் அழுவுறங்க... 
"நான் பிழைக்க மாட்டேன் போல் தெரியுது... என்னால் நடக்க கூட முடியல... இல்லேன்னா நடந்து போய் கடலில் விழுந்து செத்துடுவேன்" என்று அழுகிறாங்க என்றாள்.

"ஏம்மா..அவர் மூத்த மகன் அயர்லாந்தில் மாசம் 7 லட்சம் சம்பாதிக்கிறான். இளைய மகன் சென்னையில் மாசம் 60 ஆயிரம் சம்பாதிக்கிறான். வங்கியில் வேலை செய்யும் மகள் மாசம் 50 ஆயிரம் சம்பாதிக்கிறாள். நல்ல ஆஸ்பிட்டலில் போய் சேர்க்க வேண்டியதுதானே" என்றேன்.

அண்ணே... சாகப்போறவருக்கே ஏன் செலவு பண்ணனும்னு கேட்கிறங்களாம்..."

"சரி என்னால் முடிந்த உதவியை செய்கிறேன் தங்கா" என்று போனை கட் செய்தேன்.

என் அண்ணன் எனக்கு எந்த கெடுதியும் செய்யவில்லை...
என்று எங்கள் வீட்டுக்கு ஒரு பணக்கார *மிராசு) வீட்டு பெண் (அண்ணி) மருமகளாக வந்தாரோ...
அடுத்த ஒரு வருடத்தில் நானும் என் தங்கையும்  தாய் தந்தை இல்லாத அனாதைகள் ஆகிவிட்டோம். அண்ணனும் அண்ணியாரும் சுயநலமுடன் தங்கள் தங்கள் பிள்ளைகள் முன்னேற்றத்தை மட்டுமே பார்த்தார்கள். 
ஆனாலும்....
எங்கள் தாய் தந்தையர்கள் செய்த புண்ணியத்தால் எனக்கும் என் தங்கைக்கும்  தானாகவே நல்ல வாழ்வு கிடைத்தது...
இன்று என் உடன் பிறப்பு மரண படுக்கையில்...

என்னால் தூங்க முடியவில்லை.

வங்கி கணக்கில் உள்ள இருப்பை பார்த்தேன்....

"அண்ணே... எப்படி இருக்கே?"

"யாரு.. யாரு பேசுறது...? கேட்கல"

"அண்ணே தம்பி பேசுறேன்... உடம்ப பார்த்துக்க...என்னால் முடிஞ்ச 10 ஆயிரம் ரூபாய் அனுப்பி இருக்கேன். உடம்ப பார்த்துக்க"

மேலும்

                                 உ
 
                           சிறுகதை


  தலைப்பு:

 2025- ன் மறக்க முடியாத வரலாறு

 அல்லது 👉👉👉....


      🌿🌎 2025-ல் பூமி பந்தானது 🌍🌿










   நமது அழகான பூமிப்பந்தியில் 2019 ஆம் ஆண்டில் சீனாவில் வுஹான் நகரில் நடந்தது இந்த நிகழ்வு. சரியாக சொன்னால், மார்ச் 17  அதிகாலையில் வானம் தெளிவாக இருந்து. ஆங்காங்கே நட்சத்திரங்கள் அழகாக தெரிந்தது. அன்று நிலாவின் அழகே  தனிதான். அப்போது மணி
03:35 இருக்கும். வானத்திலிருந்து  ஒரு எரிக்கல், வுஹான் நகரின் ஒரு அழகான  குளத்தில் வந்து விழுந்தது...
அந்த விண் கல்லில் இருந்து, ஒருவகையான வைரஸ் தொற்று அந்த குளத்தில் கலந்து பரவியது. அந்தக் குளத்தில் வாழ்ந்த  மீன்களுக்கு அந்த வைரஸ் தொற்று பரவியது.
வுஹான் நகரில் உள்ள மக்கள் , அந்த மீன்களை வாங்கி   சாப்பிட்டார்கள்...
மற்றும் அருகில் இருந்த சில நகரங்களுக்கும் சென்றது. அந்த மீன்கள் மூலம் இந்த மீன்களை சாப்பிட்ட மக்களுக்கு ஒரு வகையான நோய்த்தொற்று தோற்ற ஆரம்பித்து விட்டது.

மெதுவாக இல்லை. மிக வேகமாக   பரவத் தொடங்கியது. நோய் தொற்று தொடங்க ஆரம்பித்த காலகட்டத்தில் யாரும் இதன் மேல் கவனத்தை கொண்டு வரவில்லை.
அன்று மக்கள் அலட்சியமாக இருந்து விட்டனர். காலப்போக்கில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புதிய வகை வைரஸ் தொற்றை கண்டுபிடித்தார்கள் மருத்துவர்கள்.
காலப்போக்கில் உலகம் முழுவதும் வேகமாக பரவி விட்டது மிக வேகமாக பரவி விட்டது... அதுதான் கொரோனா வைரஸ் தொற்று ....


இந்தக் கொரோனா வைரசால், இதுவரை உலகம் முழுவதும் 6,379,368+ பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொரோனா வைரஸ்  உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொத்துக்கொத்தாக மக்கள்  இறந்துவிட்டார்கள்.
இந்தக் கொரோனா வைரஸ்சுக்கு தகுந்த மருந்துகள் இன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை, மருத்துவர்கள் மூலமாக இதற்கான ஆராய்ச்சி இன்றும்  தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


உலக நாடுகளில் உள்ள பிரதமர்கள் ஒன்று சேர்ந்து பல தடைகளை கொண்டு வந்தார்கள். மக்களை பாதுகாக்க நடவடிக்கைகளை கொண்டு வந்தார்கள்.
2020 முதல் 2022 வரை மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
ஒரு சிறை கைதி போல.... 2022 ஆம் ஆண்டு உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவல் குறைந்து அதன் இடமிருந்து விடுதலை பெற்றதாக நினைத்து, சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்றதாக நினைத்து மீண்டும் சுதந்திரமாக மனிதர்கள் உலாவினர்...
இந்த சுதந்திரமான மகிழ்ச்சி ரொம்ப நாட்கள் நீடிக்க வில்லை.
2022 ஆம் ஆண்டு, போர் நடந்தது அதை நான் மூன்றாம் உலகப் போர் என்று குறிப்பிடவில்லை. ரஷ்யாவும் - உக்ரைனுக்கும் போர் நடந்தது.
ரஷ்யா , உக்ரைன் மீது போர் எடுத்தது...
உக்ரைன் நாடு மிகவும் பாதிக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக இறந்து கிடத்தார்கள்... அந்த நாடு மிகப்பெரிய சுடுகாடாக மாறிவிட்டது... இந்த போரால் உலக நாடுகளில் கவனம் இந்த போர் மீது  சென்று விட்டது.

மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் பொறுமையாக அல்ல வேகமாக பரவி விட்டது.
பல கோடி மக்கள் கொத்து கொத்தாக மரணித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பக்கம் போர்கள் மூலமாக பல வீரர்கள் கூட்டம் கூட்டமாக இறந்தார்கள்... மற்றொரு ஒரு பக்கம். இந்த மிக ஆபத்தான  கொடூரமான வைரஸ் தொற்றால் நிமிடத்திற்கு நிமிடம் நொடிக்கு நொடி... மக்கள் கூட்டம் கூட்டமாக மரணித்துக் கொண்டிருந்தார்கள்... இந்த சரித்திரத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. மாற்ற முடியவில்லை. இரண்டு மூன்று மாதங்களில் மனித இனம்  வேரோடு  அழிந்துவிட்டது.
ஆங்காங்கே மனித இறந்த உடல்கள், எலும்பு கூடுகளாக காட்சி அளித்தது.
மனிதர்களின் உடலின் அழுகிய அந்த மனம் இந்த வையகம் முழுவதும் பரவியது... இந்த பூமியில் மனிதனின் செயல்பாடு அதிகம்.
மனிதர்களின் செயல்பாடு முற்றிலும்  அழிந்துவிட்டது, இப்போது மனிதர்களின் நடமாட்டம் இல்லை மிகப்பெரிய அமைதி நமது பூமிகள் நிலவியது. சில மாதங்களாக இருந்து வந்த வெடிகள் வெடித்த  மிகப்பெரிய சத்தங்களும் மனிதர்கள் உயிரிழக்கின்ற அந்தக் கூகுரலும்  இன்று இல்லை. எங்கு பார்த்தாலும் பச்சையம் தோன்றி விட்டது.
கிராமங்கள் , நகரங்கள் எங்கு பார்த்தாலும் செடி கொடிகள் மரங்கள் என்ன வளர்ந்து கொண்டிருந்தது. பாலைவனங்கள் கூட  இன்று பசுமையான காடுகளாக மாறிவிட்டது.
பூமி பந்து  முழுவதும் பச்சையும் அடர்ந்த நீளமாக காட்சியளித்தது.
பூமியில் ஆக்சிஜனின் அளவு மூன்று மடங்கு உயர்ந்து விட்டது.
பூமியில் உள்ள மற்ற உயிர்கள் பரிமாண வளர்ச்சி அடைந்துவிட்டது.

சிறிய சிறிய பூச்சிகள்,  புழுக்கள் ஒரு கோழி அளவுக்கு அதன் உடல்கள் பெரியதாக மாறிவிட்டது. விலங்குகளும் உயிரினங்களும் உருவத்தில் பெரிதாக மாறிவிட்டது.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி...

ஆனால் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்த சில மனிதர்கள் கூட்டம் இருந்தது.
நமது பூமியின் மாற்றங்களை அவர்கள் கண்காணித்துக் கொண்டே தான் இருந்தார்கள்...
2023 ஆம் ஆண்டு வரை....
ஆனால் இப்போது பூமியின் மாற்றத்தை பார்த்து  அதிர்ச்சி அடைந்த பின்னர் அவர்கள். பூமியை சென்றடைந்தார்கள்...
எங்கு பார்த்தாலும் காடுகள் அல்லவா?
அடர்ந்த காடு இல்லையா? பூமி சென்றடைந்தார்கள். பெரிய பெரிய நகரங்களும் கிராமங்களும் மிகப்பெரிய  காடுகளில் முற்றிலும் மூழ்கி விட்டது... இன்னும் விலங்குகளும் மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியில் மாறிவிட்டது , என்பதையும், உருவத்தில் பெரியதாக மாறிவிட்டது என்பதையும், விலங்குகள் மனிதரைப் போல் பேசிக்கொள்வதையும், ஒரு சில விலங்குகள் முட்டை  இடுவதையும்,
ஒரு சில விலங்குகளுக்கு இறக்கைகள் இருப்பதையும்,
செவ்வாய் கிரகணத்தில் வாழ்ந்த மனிதர்கள், இதைப் பார்த்து மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.... பூமியில் கால்களை பதித்தார்கள் ஆனால் அவர்கள் கால் பதித்த அடித்த நொடியே பரிமாண வளர்ச்சி அடைந்த பூச்சிகள் அவர்களை இறையாக்கிவிட்டது... சிலரை... சில பேரை பறவைகள் புழுக்கள் மாதிரி இருக்கின்ற மனிதர்களை கொத்தி முழுங்கியது.

ஆக நமது பூமி பந்தில் மனித என்ற உயிரே அழிந்துவிட்டது 2025 ஆம் ஆண்டு...

இந்த மிகப்பெரிய மாற்றத்தில்,
விலங்குகளுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் மிகப்பெரிய பரிணாம வளர்ச்சி அடைந்தது...
விலங்குகள் மனிதர்கள் போல் பேச தொடங்கியது. ஒரு சில விலங்குகளுக்கு இறக்கைகள் முளைத்தது. ஒரு சில புதிய உயிரினங்களும் நமது பூமியில் தோன்றியது. ஒரு சில விலங்குகள் முட்டையிடுவது
இதையெல்லாம் மீண்டும் ஒருமுறை நினைவு கூறுகிறேன். மனிதன் இல்லாத இந்த பூமி நன்றாக இருக்குமா?!  என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன்?! காலப்போக்கில் விலங்குகளும் உயிரினங்களும் , வாழ்க்கை போராட்டங்கள் அதிகமாக இருந்தது... ஒரு சில உயிரினங்கள் முற்றிலும் அழியும் நிலைமைக்கு வந்து விட்டது...

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நமது பூமி சூரியன் இருக்கும் நடு பகுதிக்கும் சூரியன் சூரிய குடும்பத்தில் மூன்றாவது இடத்தில் சுற்றிய பூமி இருக்கும் இடத்தில் இப்போது சூரியன் உள்ளது. இப்போது பூமியை அதாவது நமது பூமியை சூரியன் உட்பட அனைத்து கோள்களும் நீள் வட்ட  பாதையில் சுற்றி வலம் வருகிறது .... நமது பூமியின் துணைக்கோளான சந்திரன் (நிலா) பூமி சூரியன் விட மாற்றம் காரணமாக நிலா அழிந்துவிட்டது. பல கோடி சிறு  கோளா  மாறியது. சனிக்கோள் வட்டங்கள் மாதிரி ஆகிவிட்டது நமது பூமி... மனிதர்களின் அழிவு இந்த காலநிலை மாற்றமும் ஒரு காரணம்.
இதுதான் 2025 ஆம் ஆண்டு பூமி பந்தானது.....



                       🚩🚩முற்றும்🚩🚩                            🙏🙏🙏🙏🙏

மேலும்

தணியாத தாகம்-சிறுகதை-{பகுதி1}

      அப்போது தான் பாத்திகளிலிருந்து பறித்து வந்திருந்த கீரைக்கட்டுகளில் கண்ணுக்கு தட்டுப்பட்ட கோரை அருகம்புல் நீக்கி...அன்னக்கூடை நீரில் முக்கி...வேரில் படிந்திருந்த மண் போக அலசிக்கொண்டிருந்த செல்லதுரையை துணுக்குற செய்தது அந்த கூக்குரல்.
       என்னமோ...ஏதோ என கை,கால் முகம் அலம்பி இடுப்புத்துண்டை அவிழ்த்து உதறி...முகம் துடைத்தபடியே வேலிப்படலை திறந்து திடலுக்கு வந்தார்.
     நெற்றிமேட்டில் கைப்பந்தல் அமைத்து மாலைச்சூரியனின் மஞ்சள் ஔித்தீண்டலிலிருந்து கண்களை காத்து ஊருக்கு மேற்கில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை  நோட்டமிட்டபடியே ...ஒற்றைத்தடத்தில் நடந்தார்.
    அவரது மங்கிய கண்களுக்கு 'மழைத்தூறலுக்கு முன் தங்களது முட்டைகளை சுமந்துகொண்டு இடம்பெயர அலைபாயும் எறும்புக்கூட்டம்'போன்ற நிழல் சித்திரம் புலப்பட்டது.
      "உம்...வழவழன்னு ரோட்டை போட்டுட்டாங்க...வழிநெடுக சாராய கடைகளையும் திறந்துட்டாங்க...மாடு மேய்க்கிறவன் கூட மாமியார் வீட்டு காசுல பைக் வாங்கிகிட்டு கண்மண் தெரியாம குடிச்சிட்டு ரேஸ் விடறானுவோ...சிவனேன்னு வீதியோட போறவனை மோதி சாய்த்து...அவன் குடும்பத்தையும் நிற்கதியா நிறுத்திடறானுவோ .."முனுமுனுத்தபடியே நடந்தார்.
     கூட்டத்தை நெருங்க..நெருங்க நெஞ்சுப்பதட்டம் குறைந்தது...நல்ல வேளை அவர் நினைத்தது போல 'இரத்தம் கொப்பளிக்கும் விபத்து இல்லை....ஆனால் இரத்தம் கொந்தளிக்கும் கூக்குரல் எழுப்பி ஆக்ரோஷமாக ஆர்ப்பனித்துக்கொண்டிருந்தார்கள் மக்கள்.
   கலர்கலராக பிளாஸ்டிக் குடங்களை சாலையில் பரப்பி ...வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த ..ஐம்பது,அறுபது பேர் கொண்ட கூட்டத்தை ஒற்றை ஆளாய் சமாளித்து கதையளந்து கொண்டிருந்தான் கரைவேட்டிக்கைத்தடி ஒருவன்.
                             (பகுதி-2)[தொடரும்...

மேலும்

அன்னையர் தின ஸ்பெஷல் 

                                                                         “அண்ணையர் தின DIARIES”
2015 கல்லூரி முடித்து மேற்படிப்படிப்பில் ஆர்வம் இல்லாததால்.. வேலைக்கு போயே ஆகனும் என்கிற நெருக்கடியுடன் சென்னை நோக்கி தனியே பயணம்.. அங்க கல்லூரி நட்பு சுரேசும் நானும் உன்கூட பேங்க் கோச்சிங் வரன் மற்ற நட்புகள் சிவில் சர்வீஸ் பக்கம் போய்ட்டாங்க.. மதுரவாயல் தினா வீட்ல கிட்டதட்ட ஒரு மாசம் இருந்துட்டு அப்புறம் தேனாம்பேட்ட சிக்னல் தாண்டி ஐயப்பன் கோவில் எதிரில் உள்ள சிறிய தெருவில் ராயல் கேஸ்டில் (பேர் மட்டும் ராயல்) எனும் சிறிய தங்கும் விடுதில தொடங்குறோம்.. 
நானும் அவனும் பொட்டி படுக்கைலாம் எடுத்துட்டு வந்து சேர்ந்தாச்சு.. வீட்ல பால் ஊத்தி வர காசு தான் வருமானம் மாசம் 6000 ரூபாய் தான் அனுப்ப முடியும்.. அதுலயே சமாளிச்சுக்கோனு சொல்லிட்டாங்க..
3000 வாடகை மீதி 3000ல மாசத்த ஓட்டனும்.. 

அதாவது ஒரு நாளைக்கு 100ரூபா..!
காலைல 6:15 மணிக்கு டி நகர் போகனும் Race bank coaching நாங்க சேரும் போது அவ்ளோ ஃபேமஸ் இல்ல..
12 D White போர்ட்டு பஸ்ல மட்டும் தான் ஏருவோம் அதுல  தான் 5 ரூபாய் டிக்கெட்.. சென்னைல (இன்னைக்கு வர 12C மதுரவாயல் டூ டி. நகர் அப்புறம் 12 D இது ரெண்டு மட்டும் தான் தெரியும்)
க்ளாஸ் பக்கத்து தெருல ஒரு டீ கடைய கண்டுபிடிச்சாச்சு காலைல டிஃபன் டீ வித் சுண்டல் 15ரூபா.. மதியம் முருகன் இட்லி கடைல சாம்பார் சாதல் ஒரு சின்ன ப்லேட் 35ரூபா அதுல ஒன்னு ரெண்டு பாதாம்பருப்பு இருக்கும் அதான் ஸ்பெஷல்.. 
ஈவ்னிங் டி நகர் பஸ்ஸ்டாண்ட்ல ஒரு டீ 10 ரூபா மறுபடியும் 12D பஸ்கு வெயிட்டிங் 5 ரூபா..என் கணக்குல 70 ரூபா காலி.. நாங்க தங்கிருந்த ஹாஸ்டல்ல நைட்டு நேபாளிகாரன் சப்பாத்தி மட்டும் போடுவான்.. ஒன்னு 10ரூபா.. 3 சப்பாத்தி 30ரூபா முடிஞ்ச்.. 
அந்த ஹாஸ்டல்ல இருந்த அண்ணணுங்க எல்லாம் கம்பெனி வேலைக்கு போவாங்க.. செமையா என்ஜாய் பண்ணுவாங்க.. நாங்க ஆனு அவங்கள வாய பொழந்து பாப்போம்.. இத்தனைக்கும் அவங்க மாத சம்பளம் 15ஆயிரம் தான்..

அந்த வாழ்க்கை ஆகஸ்ட் மாசம் ஆரம்பிச்சு 3 மாசம் க்ளால் முடியுர வரை தொடர்ந்துச்சு‌.. நாங்களும் பல எக்ஸாம் எழுதுனோம்.. முன்னேற்றம் வந்த மாதிரி தெரியல.. அங்க ஒரு நல்ல விஷயம் பாஸ் ஆகுற வர ப்ரீயா க்ளாஸ் அட்டன்ட் பண்ணலாம்.. 

எனக்கு கணக்குனா சுத்தமா வராது.. நாட்டு நடப்பு பொது அறிவுல அப்போ இருந்தே ஆர்வம் அதிகம் (மாமாவ பாத்து வந்தது அவர் பேப்பர் எடுத்தார்னா முதல் பக்கம் ஆரம்பிச்சு கடைசி பக்கம் வரை படிச்சிட்டு தான் அடுத்த நாள் பேப்பர தொடுவாரு) 

சனி ஞாயிறு வில்லிவாக்கம் பசங்க ரூம் (சங்கர் கோச்சிங் சிவில் சர்வீஸ் போய்ட்டு இருந்தாங்க) அந்த ரெண்டு நாள் அவங்ககிட்ட நிறைய தெரிஞ்சிப்பன்.. சங்கர் சார் Agri க்ரேஜுவேட் அதனால அவர் எடுக்குற Atlas க்ளாச பல டைம் திருட்டுத்தனமா நானும் அந்த இன்ஸ்டிடியூட் ஸ்டூடண்ட் னு சொல்லி ரசிச்சிருக்கன்.. மனுஷன் உலக வரைபடத்த மைண்ட்ல வச்சிருப்பாரு.. அந்த யுனைடெட் ஸ்டேட்ஸ் மாகாணங்கள கண்ணு முண்ணாடி காட்டுவாரு அதுலாம் வேர லெவல்..

ஒரு கட்டத்துல ஆர்வம் அதுபக்கம் திரும்புச்சு..பேங்க் கோச்சிங் வந்ததுக்கு TNPSC பக்கம் போலாமேனு தோனுச்சு.. வீட்ல இருந்து ப்ரஷர்.. இந்த டைம்ல அது படிக்கனும்னு பணம் கேட்டா அவ்ளோதான்..நானும் என் ப்ரெண்டும் employment நியூஸ் பேப்பர் வாங்கி அக்ரி சம்பந்தமா கம்பெனிக்குலாம் அப்லை பண்ணிட்டு இருந்தோம்.. ஒரு கட்டத்துல எதுக்கு வீட்ல தொல்ல தரனும்னு ஆர்மில ஜாய்ன் பண்ணிடலாம் காலேஜ்ல வாங்குன NCC சர்டிபிகேட் இருக்கேனு அப்ளை கூட பண்ணிட்டன்.. அதுக்குள்ள மண்ணடில ஒரு அக்ரோ எக்ஸ்போர்ட் கம்பெனி இன்டர்வியூ.. அட்டென்ட் பண்ணி ரெண்டு பேரும் செலக்ட் ஆயிட்டோம்.. மாசம் 15ஆயிரம் சம்பளம் தங்க சாப்பாடு செலவு கம்பெனிது அடுத்த வாரம் ஜாய்ன் பண்ணுங்கனு சொல்லிட்டாங்க..

அம்மா கிட்ட போன்ல இந்த மாதிரி ஒரு கம்பெனில செலக்ட் ஆயிட்டன்.. ஜாய்ன் பண்ண சொல்றாங்க.. பேசாம போகட்டுமானு.. எங்க அம்மா இதுக்கு எதுக்கு நாங்க கஷ்டபட்டு மாசமாசம் பணம் அணுப்புறோம்.. அப்போவ அந்த வேலைக்கு போயிருக்கலாமே.. நான் மாசம் ஆயிரம் சேத்து கூட அணுப்புறன் நீ எதுக்து போனியோ அந்த வேலைய வாங்கிட்டுவா ஒரு வருஷம் சேர்ந்து ஆனாலும் பரவாயில்லை னு.. 
எதுவுமே இல்லை எல்லாம் முடிஞ்சு போச்சுனு நினைக்கும்போது ஒரு நம்பிக்கையோட கலந்த ஒரு துணிவு வரும் பாருங்க..அதான் நாம்! அந்த துணிவு எனக்கு வர காரணம் அந்த இறைவி..! 
அந்த ஒரு வார்த்தை இல்லைன்னா நான் இன்னைக்கு இல்ல..!? 
அந்த ஒரு வார்த்தை இன்னைக்கும் காதுல ஒலிச்சுக்கிட்டே இருக்கு இருக்கும் என் இறுதி வரை.. எதுவுமே இல்லைனு நினைக்கும்போது ஒரு துணிவு வரும் பாருங்க அதான் நாம்.. அந்த துணிவு நமக்கு வர காரணம் அந்த இறைவி..! 

#தந்தை இல்லாததால் தாயின் மீது இரு மடங்கு அன்புடன் சேர்த்து அதிகார தோரணையும் வந்து விடுகிறது.. அதிலிருந்து மீளவே முயற்சிக்கிறேன் இருப்பினும் இந்த விஷயத்தில் பெண்கள் கூட ஒதுங்கிருவாங்க ஆண்கள் தோரணை எதுக்காகனா எங்கம்மா எவனுக்கு முன்னாடியும் தலை குனிஞ்சிட கூடாது எவனும் கேள்வி கேட்டுட கூடாதுங்குற பயத்துலதான் அந்த அரட்டல் கூட இருக்கும்மே தவிற மத்தபடி அந்த நிமிசம்மே மறைஞ்சிடும்  எங்க அம்மாவுகல்லாம் சொந்தம் பந்தம்னு வீட்டு தின்னைல நாளு பேருகிட்ட சிரிச்சி பேசிகிட்டு இருக்குறப்ப ஏனோ நம்ம மனசுலயும் உதோட்டோரம் ஒரு புன்னகை வந்துட்டு போவும் இப்படியே சிரிச்சிகிட்டே இருக்கட்டும்ன்னு.. அதனாலயே என்கூட வந்து இருனு நானும் தொல்லை பண்றதில்ல..
உங்களுடைய வாழ்க்கையிலயும் அந்த இறைவியோட பங்களிப்பு தியாகம் உழைப்பு பாசம்னு அடங்கியிருக்கும்.. நாம் அனைவரும் அன்னையர்தின வாழ்த்துக்கள் சொல்ல கடைமைபட்டிருக்கோம்.. அவங்க நல்லா இருந்தாதான் நாம நல்லா இருப்போம்.. 

நன்றி
செளந்தர் ப்ரகாசம்.

மேலும்

கோவத்தின் எல்லை..!
வேலை.. வேலை.. அலுவலகத்தில் மேனஜர் திட்டு., அதே வேகத்தில் நண்பர்களுடன் சண்டை.,
இந்த குழப்பத்தில் ஏ.டி.எம் பின் நம்பர் மறந்து மூன்று முறை தப்பா போட்டு ஏ.டி.எம் 'பிளாக்' என்று வர.,
வண்டியும் ஏதோ கோளாரால் இடையில் நிற்க எடுத்து எடுத்துப் பார்த்தும் மிதித்துப் பார்த்தும் கால் வலிதான் மிச்சம்.,
பேருந்தைப் பிடித்து பயணப்பட பக்கத்தில் குடிகாரனின் தள்ளுமுள்ளு வாந்தி குமட்டிக் கொண்டு வர.,
எப்படியோ வீடு வந்து சேர..
வந்தும் வராததுமாய் மனைவி "என் வீட்ல இருந்து அம்மா பேசுனாங்க கடன் பணத்தை கேட்டாங்க எப்ப தருவீங்க.?"..
அடங்காத கோவம் எகிறி பேச முற்பட.,
     "அப்பா.." என்றவாறு ஒரு சின்ன புன்னகை பூத்து "இங்க உட்காரு'பா" என்று ஜன்னல் பக்கத்தில் அமர வைத்து ஜன்னலை திறந்து விட...
சில்லென்று தென்றல் வர மடிமீது அமர்ந்தாள் குட்டி தேவதை..
அப்பா சட்டை பட்டனை கழற்றிக் கொண்டே "செம்மையா காத்து வருதுலப்பா.." என்றவள் முகத்தைப் பார்த்தான்..!
            முடிவு உங்கள் கையில்...

மேலும்

"பழைய பானை"

          அது நிலவொளியில் நிழல் தேடும் மனிதர்கள் பயணிக்கும் சென்னை நகரம். காலையில் பயணிப்பவர்களைவிட இரவுகளில் பறப்பவர்கள் அதிகம். அன்றும் விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது மனிதனோடு சேர்ந்து கடிகாரமும். சீனி கிடைத்த எறும்புகள் கண் சிலிர்க்க ஓடுவது போலவும் அதையும் தோற்கடிக்க தயாரானது ஒரு இனம்.

     வந்தாரை வாழவைக்கும் சென்னை தன்னையும் வாழ வைக்கும் என்ற நம்பிக்கையோடு எல்லையை தொட்டான் கந்தன். லாரியில் ஏற்றி வந்த பானைகளை பந்துபோல வாங்கி அடிக்கி வைத்துக்கொண்டிருந்தான். அவனுக்கு உதவியாய் அவன் மனைவி அடுக்குகளை சரிபடுத்திக்கொண்டிருந்தாள், அருகில் தற்காலிக தூழியில் துவண்டு படுத்துக்கொண்டிருந்தது குழந்தை.

லாரிக்கு வாடகை போக மீதியிருந்த பணத்தை துண்டில் சுருட்டி கட்டிக்கொண்டு வியாபாரத்திற்கு தயாரானான். சூரியன் தாகம் எடுத்து குட்டைகளை குடிக்க தொடங்கியிருந்தது. கூட்டம் கூட தொடங்கியது அவன் கடைக்கு அருகே நிழலை பருக. அவ்வப்போது ஒன்றிரண்டு பேர் வந்து அவனை கடம் வாசிக்க செய்தார்கள்,ஆனால் கச்சேரி முடிவதற்குள் கிளம்பிவிடுவார்கள்.

      தினமும் கச்சேரி நடந்தது ஒன்றிரண்டு பார்வையாளர்களுக்காய். இடுப்பில் கட்டியிருந்த துண்டு கழுத்திற்கு வந்தது. பானைகள் படுத்திருந்தாலும் உண்டியல்கள் உருண்டதால் ஆமையாய் ஊர்ந்தது அவன் நாட்காட்டி.

சிறிது காலத்தில் உருண்டேடிய உண்டியலும் ஊமையாக. வித்துவானோ வேர் பிடித்த கால்களோடு விறகாய் நின்றான். எத்தனை பானைகள் இருந்தாலும் ஆக்கி தின்ன அரிசிக்கு அலயவேண்டி இருந்தது. அட்டையில்லா ஆட்களோடு அஞ்சு ரூபா அதிகம் அழுது கஞ்சன் போல ஆற்றிக்கொண்டான் அளவில்லா பசியை.
மலையாய் அடிக்கியவை எல்லாம் குன்றாய் குறையாமல், கூட்டமாய் குவிந்து கிடந்தது. நிழல் தேடி வந்தவர்கள் எல்லாம் கந்தனை நிற்க வைத்துவிட்டு போனார்கள். காலமும் ஓடியது கல்லறை தேடி. நேராய் நின்றவன், நிழலாய் படுத்துவிட்டான்.

படுத்திருந்தவன் சட்டென்று எழுந்து நின்றான். என்ன நினைத்தான் என்று தெரியவில்லை, அனைத்தையும் அனாதையாய் விட்டுவிட்டு  தன்னத்தனியாக நகர்ந்தான். மாநகரம் அவனை மண்டியிட வைத்திருந்தது. காலையில் நகர்ந்தவன் மாலையில் மறைந்து போயிருந்தான் கந்தன். தன் பணியைமுடித்து பதுங்குவதற்க்காக பாய்ந்துக் கொண்டிருந்தது சூரியன்.

 மந்தமான அந்திமாலை ஒளியில், தூரத்தில் மலையே நகர்ந்து வருவதுபோல இருந்தது கந்தன் மனைவிக்கு. அவனோ கழுதையாய் பொதியோடு வந்துக்கொண்டிருந்தான். பானைக்குவியலின் ஓரமாய் பத்திரமாய் படுக்கவைத்தான் பொதிமூட்டையை, படுத்திருந்த குழந்தை பரவசமாய் எழுந்து வந்து மூட்டையை பிரித்துபார்த்தது. வகைவகையாய், பல்வேறு அளவுகளில், அழகழகாக சிதறி வெளியேறியது " பிளாஸ்டிக் பாட்டில்கள்"...

    சிதைக்காமல் சில் சில்லாய் சிதறிப்போகின பழைய பானைகள்......

மேலும்

தந்திர நரி


                   ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தனியாக தலை தெரிக்க ஓடுகிறது. எதற்காக தனியாக ஓட வேண்டும்? கொலை பசியின் காரணமாக மானை தொருத்துகிறது. சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளாமல் மான் எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்டது. சிங்கம் ஏமாற்றத்துடன் திரும்பியது. ஓடும்போது மானுக்கு பல இடங்களில் காயம் பட்டு ஒரு இடத்தில் விழுந்தது.         இதை பார்த்த நரி ஒன்று இதை எப்படியாவது உண்ண வேண்டும் என்று எண்ணியது. தன் தந்திரத்தால் மானிடம் சிறிது தொலைவில் இருந்து பேச்சு கொடுத்தது. மானை எப்படியாவது நம்ப வைத்து உண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியது.        
                                   தொலைவில் இருந்தே உடல்நிலை சரியில்லையா! என்று இதேபோன்று அன்பாக பேசிக்கொண்டே சிறிது சிறிதாக அருகில் சென்றது. மானும் உதவி தான் செய்கிறது என்று எண்ணி நம்பிவிட்டது.       
                           நரி மகிழ்ச்சியுடன் அருகில் சென்றது. மான் தனக்கு உதவி செய், என்னை தூக்கிவிடு என்று கூறும்போதே நரி அதன் தொண்டை பகுதியை கடித்து மான் இறந்து போனது. தன் பசியினை தீர்த்துக்கொண்டது நரி. அறவணைப்பது போல அன்பாக பேசி தன் எண்ணங்களை நிரவேற்றிக்கொண்டது.

 பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.

விளக்கம்: தீய குணமுடையவர் அன்பின் மிகுதியினால் விழுங்குபவர் போல் பார்த்தாலும் அவருடைய நட்பு வளர்வதை விடக் குறைவது நல்லது.              
                 என்பதை திருவள்ளுவர் கூறுகிறார். நல்ல நட்புடன் பழக வேண்டும் என்று கூறுகிறேன்.     

மேலும்

அணில் அணிச்சை செயல்     


                           ஒரு அடர்ந்த காடு. காடு பெரியது அல்ல. சிறிய காடு தான். அழகிய சூழல், பசுமையான மரங்கள், தேன் நிரம்பி வழியும் பூக்களுடன் காணப்பட்டது. சிறிது விலங்கு கூட்டம் தான் இக்காட்டில் வாழ்கின்றது. அந்த காட்டில் ஒரு விலங்கு மட்டும் அனைத்து விலங்கிடமும் கேலி செய்தும் வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தது. அது ஒரு அணில்.        நண்பர்களையும் சரி அக்காட்டில் உள்ள அனைத்தும் விலங்கிடமும் மனம் புன்படும் மாதிரி கேலி செய்தும், தீய சொற்களை கூறி மகிழ்ச்சி அடைந்து சிரிப்பது தான் அதன் வழக்கம். காட்டில் இதே போன்று எல்லாம் விலங்கிடமும் தீயசொற்களை பயன்படுத்தியாதால் அதில் ஒரு எலி மட்டும் அதிக அளவில் மனம் புண்பட்டு போனது. அணில் இதேபோன்று தினமும் பேசியாதல் ஆழ்மனம் உடைந்து ஆழ்கடலில் தற்கொலை செய்துக் கொள்ளும் அளவில் துன்புறுத்தியது.       ஒரு நாள் அணிலின் செயலுக்கு அளவில்லாமல் போனது. எலி அனைவரிடம் அசிங்கப்பட்டு நின்றது. எலி பார்த்து சிரித்தனர். மனமுடைந்த எலி தற்கொலை செய்துக்கொண்டது.       எலி இறந்தது தெரிந்தும் அணில் சாதரணமாக இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து அணிலிடம் ஒரு எலிக்குட்டி வந்து பேச்சுக்குடுத்தது. எலிக்குட்டி வழியாக சென்று அந்த அணிலிடம் மாட்டிக்கொண்டது என்று நினைக்கலாம் அதுதான் கிடையாது.        சிறிது பேசியது. அணிலிடமே பேசுகிறதா என்று அனைவரும் வேடிக்கை பார்த்தனர். வேடிக்கை மட்டும் தான் பார்ப்பார்கள் அவ்வளவு தான். எலியும் அணிலியும் மாற்றி பேசிக்கொண்டு இருந்தது. சுற்றி இருந்தவர்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டு சிரித்தனர்.     எலிக்குட்டி அனைவருமுன் அணிலை அதிக அளவில் அசிங்கபடுத்தியது. அணிலை அலர செய்தது. அனைவரும் அதை பார்த்து சிர்த்தனர். கூட்டத்தில் ஒட்டு துணி இல்லாமல் நிற்பது போன்று இருந்தது போல அவ்வளவு அசிங்கம். அசிங்கத்தில் அணிலுக்கு கண்ணீரே வந்தது.     எலிக்குட்டி விடவே இல்லை. தற்கொலை செய்யுமளவில் கேலியாக தான் பேசியது. தீய சொற்கள் சிறிதும் பயன்படுத்தவில்லை. நீ இதே போன்று தான் ஒருவருக்கு செய்தாய் அது என் அப்பா தான்.        எலிக்குட்டி அணிலை பழி திர்க்கவில்லை. அது செய்த தவறை திருத்தியது. மணித்துவிட்டது. சிறு பிள்ளையாக இருந்தாலும் நல்ல குணம் இருந்தது. அணில் தன் செய்த தவறை திருத்திக்கொண்டது. இதே போன்று தவறை இதுவும் செய்யாது மற்றவர்களையும் செய்ய விடவில்லை.

   துன்புறூஉந் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
 இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. 

 விளக்கம்:  அனைவருக்கும் இன்பத்தைக் கொடுக்கும் இனிய சொற்களைப் பேசுகிறவர்களிடம் , துன்பத்தைல் கொடுக்கும் வறுமை வந்து சேராது.                    
                        என்பதை திருவள்ளுவர் கூறுகிறார். இதிலிருந்து நான் உங்களுக்கு கூறுவது ’’’தீய சொற்களை பயன்படுத்தாமல் அனைவரிடமும் அன்பாக பேசுங்கள்’’’.
அளவில்லா அன்பை அளந்து காட்டிப்பார்
 இன்றும் என்றும் உன்னை போற்றும் இந்த உலகமே,,....       

மேலும்


மேலே