எண்ணம்
(Eluthu Ennam)
திருக்குறளில் வியக்கும் கருத்து
உருமாறியத் திருக்குறள்
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. திருக்குறள். 610
பரிமேலழகர்
அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த
இறைவன் (திருமால்) கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் கைப்பற்றுவன்.
மணக்குடவர்
மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் (திருமா! லால் )
கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.
புலியூர்க் கேசிகன்
சோம்பல் இல்லாத அரசன், தன் அடியாலே உலகத்தை அளந்த திருமால்
தாவிய நிலப்பரப்பு எல்லாம், தானும் தன் முயற்சியால் ஒருங்கே பெற்றுவிடுவான்
மு.வரதராசனார்
அடியால் உலகத்தை அளந்த கடவுள் (திருமால்) தாவியப்
பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான
தமிழ் அறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் உண்மையை எழுதியது
தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும்,
சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.
தற்குறி தேவநேயப் பாவாணன்இந்தத் தமிழ்த் திருக்குறளுக்கு திருமாலை மறைத்து
( முழுபூசணிக்காயை) எழுதியதைப் பாருங்கள்
ஞா.தேவநேயப் பாவாணர் (தமிழனின் எதிரி)
மடி இலா மன்னவன் -சோம்பலில்லாத அரசன் 'அடி அளந்தான் தாயது எல்லாம் -
கதிரவன் மூவெட்டாற் கடந்த மாநிலம் முழுவதையும் ; ஒருங்கு எய்தும் -
ஒருமிக்க அடைவான். திருமால் தன் குறள் தோற்றரவில் (வாமனாவதாரத்தில்)
மூவுவகத்தையும் அளந்ததாகச் சொல்லப்படுவதால் , அவற்றை ஊக்கமுள்ள அரசன்
ஒருங்கே அடைவான் என்பது பொருந்தாது . கதிரவன் இயக்கம் கீழிருந்து மேலும் மேலிருந்து மேற்கும்
மீண்டும் மேலிருந்து கீழும் ஆக மூவெட்டுப்போற் புறக்கண்ணிற்குத் தோன்றுவதால் ,
அது மூவெட்டால் ஞால முழுவதையும் கடப்பதாகச் சொல்லப்பட்டது.
வேத ஆசிரியர் கதிரவனை விண்டு (விஷ்ணு) என அழைத்ததால்,
திருமால் மூவடியால் உலகமுழுவதையும் அளந்தான் என்றொரு கதையெழுந்தது.
இதுவே
, குறள் தோற்றரவுக் கதைக்கு மூலம். இதன் விளக்கத்தை என் ' தமிழர் மதம் '
என்னும் நூலிற் கண்டுகொள்க. கதிரவன் நாள்தோறும் அளந்தாலும் ,முன்னை
நிகழ்ச்சி பற்றி ' அடியளந்தான் ' என்று இறந்தகால வினையாலணையும் பெயராற்
குறிக்கப்பெற்றது. உழிஞைக்கொடி முடக்கொற்றான் (முடங்கொன்றான்) என்றும்
சுடுகாடு மீட்டான் என்றும் பெயர்பெற்றிருத்தல் காண்க. ' தாஅய ' இசைநிறை
யளபெடை. தா-தாய்- தாய .ஒ நோ; ஆ
திராவிடனின் மூடக் கருத்து
கலைஞர்
சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற
இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.
அளந்தான் தாவி என்பதின் கருத்தை விழுங்கிய பாவிகளைப் பாருங்கள்
செய்ந்நன்றி அறிதல்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
வாராது வந்த மாமணி ( என்பதுபோல், செய்யாமற் செய்த உதவி) என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.
மு.வரதராசனார் உரை:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.
பரிமேலழகர் உரை:
[அஃதாவது, தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. இனியவை கூறி இல்லறம் வழுவாதார்க்கு உய்திஇல் குற்றம் செய்ந்நன்றி கோறலேயாகலின் , அதனைப் பாதுகாத்துக் கடிதற் பொருட்டு, இஃது இனியவை கூறலின்பின் வைக்கப்பட்டது. )
செய்யாமல் செய்த உதவிக்கு - தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது - மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது. (கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர்.).
மணக்குடவர் உரை:
முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தனக்கு, முன்பு ஓர் உதவியும் செய்யாதிருக்க ஒருவன் பிறர்க்குச் செய்த உதவிக்கு இவ்வுலகத்தினையும் வானுலகத்தினையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகா.
திருக்குறள் கூறும் நட்பு
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
[நட்பு செய்வது போன்ற அறிய செயல் வேறில்லை; அதுபோல பாதுகாப்பிற்கு உகந்த செயலும் வேறில்லை ]
அழிவினவை நீக்கி ஆறித் தவின்கன்
அல்லல் உழைப்பதாம் நட்பு
[நண்பனை தீய வழியில் சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழிநடக்கச் செய்து அவனுக்கு தீங்கு வருங்காலத்தில் அந்த தீங்கின் துன்பத்தை பகிர்ந்துகொள்வதே நட்பு]
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
[அணிந்திருக்கும் உடை எப்படி உடலைவிட்டு நழுவும்போது கைகள் உடனடியாகச் சென்று சரி செய்கின்றதோ அதைப்போல நண்பனுக்கு வருகின்ற துன்பத்தை போக்க துடித்து செயல்படுவதே நட்பின் இலக்கணமாகும்]
என்று நட்பின் மேன்மையைப்பற்றி கூறுகிறார். அடுத்ததாக நட்பென்பது எதற்காக என்று வலியுறுத்துகிறார்.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தர் பொருட்டு
[நட்பென்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நலவழித் தவறிசெல்லும்போது இடித்துரைத்து திருத்துவதற்காகும்], அடுத்தது உண்மையான நட்பென்பது எவ்வாறு இருக்கவேண்டும் அதை எப்படி ஆராய்ந்து அறிவது என்பதற்கு நமக்கு பல யோசனைகளை வழங்குகிறார் அவற்றில் சில:
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம்தரும்.
[ திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்ப்படுத்திகொள்கின்ற நட்பு கடைசியில் ஒருவரின் மரணத்திற்கு காரணமாகின்ற அளவிற்கு துயரத்தை உண்டாக்கிவிடும்] தீய நட்பு என்பது எப்படி இருக்கும் என்று நமக்கு படம் பிடித்து காட்டுகிறார்:
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
[தீமை வந்தாலும் அதிலும் ஓர் நன்மை உண்டு, அந்த தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டுகிறது]
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
[நல்ல பண்பு இல்லாதவர்களின் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பது போல தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக்கொள்வதே மேன்மை]
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
[பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்பு கொள்பவரும், விலைமாதரும், கள்வரும் ஆகிய இம்மூவரும் ஒரே மாதிரியானர்வகளே]
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப்படும்
[சிரித்துப் பேசி நம்மை சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிடவேண்டும்]
இவ்வாரெல்லாம் நட்பினை பற்றி நமக்கு விளக்கமளித்துவிட்டு கடைசியாக அப்படியே தவறி அறியாமல் தவறான நண்பரை தேர்வு செய்துவிட்டோம் என்றால் நமக்கு அதிலிருந்து விடுபடவும் வழிகளை காட்டுகிறார்.
பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
டகநட் பொரீ விடல்
[பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் நட்புச் செய்து பின்னர் அதையும் விட்டுவிட வேண்டும்]
மிகச்செய்து தாமெள்ளுவாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று
[வெளித் தோற்றத்திற்கு நகை முகம் காட்டி மகிழ்ந்து உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை நலிவடைய செய்திட நாமும் அதே முறையை கடைபிடிக்க வேண்டும்]
நட்பு திருக்குறள்
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
பண்பு உடைமை
எண் பதத்தால், எய்தல் எளிது என்ப, யார்மாட்டும்,
பண்பு உடைமை என்னும் வழக்கு.
அன்பு உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், இவ் இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு.
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால்; வெறுத்தக்க
பண்பு ஒத்தல், ஒப்பது ஆம் ஒப்பு.
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
பண்பு பாராட்டும், உலகு.
நகையுள்ளும் இன்னாது, இகழ்ச்சி; பகையுள்ளும்
பண்பு உள, பாடு அறிவார் மாட்டு.
பண்பு உடையார்ப் பட்டு, உண்டு உலகம்; அது இன்றேல்,
மண் புக்கு மாய்வதுமன்.
அரம் போலும் கூர்மையரேனும், மரம் போல்வர்,
மக்கள் பண்பு இல்லாதவர்.
நண்பு ஆற்றார் ஆகி, நயம் இல செய்வார்க்கும்,
பண்பு ஆற்றாராதல் கடை.
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்,
பகலும், பாற் பட்டன்று, இருள்.
பண்பு இலான் பெற்ற பெருஞ் செல்வம்-நன் பால்
கலம் தீமையால் திரிந்தற்று.
மழை திருக்குறள்
" நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு "
விளக்கம் : (முனைவர் ச .மெய்யப்பன் ) எவ்வகையில் உயர்ந்தவரும் நீர் இல்லாமல் இவ்வுலகில் வாழ முடியாது . அதுபோலத் தண்ணீரின் இடையறாத ஓட்டமும் மழை பெய்யவில்லை என்றால் இல்லையாகும்.
நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறள் இது . தண்ணீர் ," திரவத் தங்கம் " என்று அழைக்கப்படுகிறது . தண்ணீர் இல்லாமல் நம் வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது . உலகத்தில் உள்ள நீரில் 3 % மட்டுமே நல்ல தண்ணீர் . இதை மட்டுமே நாம் குடிக்கப் பயன்படுத்த முடியும் . இதிலும் 2 % சதவீத தண்ணீர் பனிக்கட்டியாக உள்ளது . வெறும் 1 % தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் நாம் வாழும் பகுதியில் கிடைக்கிறது . மழை பெய்வதன் மூலம் மட்டுமே நாம் அதிகளவு நல்ல தண்ணீரைப் பெறுகிறோம் . மழை பெய்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது அடர்ந்த வனப்பகுதிகள் தான் . உலகமயமாததாலும் , பொருளாதாரமயமாததாலும் எல்லா நாடுகளிலும் வனப்பகுதியின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது .
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
விளக்கம்:
இனிய சொற்களைக் கூறாமல் இனியவையில்லாத கடுஞ்சொற்களை ஒருவன் கூறுதல், தன்னிடம் உள்ள கனியை உண்ணாது, இனிமையில்லாத காயை உண்பது போன்றதாகும்.
அமெரிக்க மின் சஞ்சிகையில் எனது பாடல்