எண்ணம்
(Eluthu Ennam)
விடிகாலை கனவில் கடவுள் வந்தார்
சதாகணமும் அவளைத்தானே நினைக்கிறாய்
என்னை நீ ஒருகணமும் நினைப்பதில்லையே என கோபமாய் கேட்டார்
மனிதன் படைத்த சிலையை நினைப்பதிலும்
கடவுள் படைத்த அவளை நினைப்பதே நல்லதென்றேன்
சிறு புன்னகையை உதிர்த்து விட்டு
மௌனமாக மறைந்துவிட்டார்
கோவிலின் காலை பூஜை ஆரம்ப மணி கேட்டதும் வாசலுக்கு வந்துவிடுவேன்
பூஜை மணி கேட்கவும் நீயும் வந்துவிடுவாய்
கண்மூடி எல்லோரும் கடவுளை வழிபட
கண்மூடாது உன்னையே பார்ப்பேன்
சிறு நிமிடத்தில் நீ கண்திறக்கும் போது உன் பார்வையில் படும்படி நிற்கச் செய்வேன்
உன் எதிரில் நிற்கும் என்னை ஒரு வினாடி பார்த்து பின் சென்றுவிடுவாய்
அந்த வினாடி பார்வையிலே தான் ஒரு நாள் கடந்து போகும்
கண் மட்டும் பேசியே கடந்த காதல்கதைகளின் சந்தோசங்கள் எல்லாம்
கைபேசி காதல்களில் இல்லை
இப்போதும் கூட கோயில் மணி ஓசை எங்களிடம் காதல் கதை பேசும்
என் கையை பார்த்த ஜோதிடர்
உனக்கு ஆயுள் ரேகை கெட்டியாய் இருக்கிறதே என்றார்
இருக்காதா என்ன
என் ஆயுள் ரேகை
ஐந்தடி இரண்டு இஞ்சில் (5'2")
எல்லோ இருக்கிறது
பேரூந்தில் பயணப்படுகிறபோது வைத்துக்கொள்ள வேண்டிய பயணச்சீட்டை விட்டுவிட்டுஉன் நினைவை... (கௌரீஷன்)
05-Apr-2021 10:21 pm
பேரூந்தில் பயணப்படுகிறபோது வைத்துக்கொள்ள வேண்டிய பயணச்சீட்டை விட்டுவிட்டு
உன் நினைவை கொண்டு செல்கிறேன்
நீ நினைவின் வழியே
வீடு வரை வந்துவிடுகிறாய்
வந்த உன்னை
வரவேற்று
உட்கார சொல்லக்கூட முடியவில்லையே என நான் கவலைப்பட
நீ சொல்கிறாய்
உன் இதயத்தில் உட்காரதானே வந்திருக்கிறேன்
பிறகேன் வெளியே இடம்தேடுகிறாய் என
என்குள்ளே பேசுவதை
யாரும் பார்த்து விடுவார்களோ என முகம் துடைப்பதுபோல் சேலைத்தலைப்பால் வெட்கம் துடைக்கிறேன்
♥ காதல் ♥
கல்லை சேதப்படுத்திய உளியால் சிற்பம் பிறந்தது...என் நெஞ்சை சேதப்படுத்திய உன் விழியால் காதல் பிறந்தது...
#Mr.K
குளத்தில் எறிந்த கல் மூழ்கியும் நீர்வட்டங்களைத் தந்தன ...
மனத்தில் நுழைந்த உனது நினைவுகள் நீர்த்திவலைகளைத் தந்தன.... 22-Aug-2018 2:17 am