எண்ணம்
(Eluthu Ennam)
ஆசிரியர் தினம் = 05 - 09 - 2018
===========================
வரும்நல் வாழ்வும் வளமாய் அமைய வழியை விளம்பும் வல்லாசான்.!
............ வருவாய் பெருகும் வகையில் படிக்க வழியும் சொல்லும் வகுப்பாசான்.!
கருவாய் உயிராய் கண்ணூம் கருத்தாய்க் கடிதே உணர்ந்து கடமையாற்ற..
............கடினச் செயலாம் கல்வி பயிலக் கற்கும் ஆவல் கரையவில்லை.!
எருவாய் உரமாய் எதுவும் புரிய எளிதில் அறிய எடுத்துரைத்து..
............ எங்கோ படித்தும் எதையோ படித்தும் என்றும் நினைவில் எம்மாசான்.!
குருவாய் நின்று குலமும் தழைக்கக் குணவான் ஆக்கும் குருவருளே.!
............குன்றாப் புகழும் குவித்த விருதும் குடும்ப உறவும் குறைவிலையே.!
======================
கழிநெடிலடி விருத்தம்
======================
மா = மா = மா = மா = மா = மா = காய்